Tenkasi

News June 16, 2024

பருவமழை தீவிரமடையும் தேதி அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் வருகிற 21,22 ஆம் தேதியில் இருந்து பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா கணித்து இன்று (ஜூன் 16) இரவு அறிவித்துள்ளார். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழையை எதிர்பார்க்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News June 16, 2024

தென்காசி: செட் தேர்வு தேதி விரைவில் வெளியாகும்

image

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் இன்று கூறுகையில், செட் தேர்வு கடந்த 7, 8 ஆம் தேதிகளில் நடைபெற இருந்த நிலையில், தேர்வு நடத்த ஒப்பந்தமான தனியார் நிறுவனம் தயாராகவில்லை என கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த நிறுவனம் மாற்றப்பட்டு அவுட்சோர்சிங் அடிப்படையில் தேர்வு நடத்தும் நிறுவனம் இறுதியானவுடன் செட் தேர்வு தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என தகவல் தெரிவித்துள்ளார்.

News June 16, 2024

தென்காசியில் மிதமான மழை…!

image

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.அதன்படி இன்று இரவு 7 மணி வரை தென்காசி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News June 16, 2024

மறியல் போராட்டம் -இயற்கை வள பாதுகாப்பு சங்கம்

image

தென்காசி மாவட்டம் செங்கோட்டை சேர்ந்த இயற்கை வள பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் ஜமீன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தென்காசி அருகே மூன்று உயிர்களை பழிவாங்கிய பின்னும் கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லும் லாரிகளின் வேகம் குறையவில்லை. நேற்று இரவு கூட லாரிகள் அதி வேகமாக செல்கிறது. இதனை கண்டித்து விரைவில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.

News June 16, 2024

அதிகாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 7 பேர் காயம்

image

தென்காசி மாவட்டம் புளியங்குடி வம்சவர்த்தி நகர் அருகே உள்ள பெட்ரோல் பல்க் எதிர்ப்புறம் திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று(ஜூன் 16) அதிகாலையில்
மதுரையிலிருந்து சரக்கு ஏற்றி வந்த லாரியில் குற்றாலம் சென்று விட்டு திரும்பும் வழியில் இண்டிகா கார் மோதியதில் காரில் பயணித்த ஏழு நபர்களுக்கு படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்களை மீட்ட போலீசார் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

News June 15, 2024

பயன்பாட்டில் இல்லாத புகார் எண்கள்

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வசதிக்காக எண் 77900-19008, 04633- 215000 என்ற வாட்ஸ்அப் மற்றும் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டன. இந்த எண்கள் கடந்த 2 மாதங்களாக பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இதனால் அவசர தேவைக்கு மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் இன்று கோரிக்கை விடுத்தனர்

News June 15, 2024

தென்காசியில் வேலைவாய்ப்பு முகாம்

image

தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 21ஆம் தேதி அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை குத்துக்கல்வலசை அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதில் அனைவரும் பயன் பெறுமாறு கேட்டுக் கொண்டார்.

News June 14, 2024

இன்று இல்லாவிட்டால் நாளை நிச்சயம்: போஸ்டர் வைரல்

image

தென்காசி 2024 மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தோல்வி அடைந்தார். இந்நிலையில், புதிய தமிழகம் கட்சியின் சார்பில் தென்காசியில் நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், “இன்று இல்லாவிட்டால் நாளை நிச்சயம் ஒட்டுமொத்த மனங்களையும் வென்றெடுப்போம் என எழுதப்பட்டுள்ளது. இவர் இங்கு 7முறை போட்டியிட்டு தோல்வியை மட்டுமே சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News June 14, 2024

தேவாலயங்களை பழுது பார்க்க நிதியுதவி

image

தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தென்காசியில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு கட்டிடத்தின் வயதிற்கு ஏற்ப மானிய தொகை உயர்த்தி அரசு ஆணையிட்டுள்ளது. இதற்கு  விண்ணப்பித்து மானிய தொகை பெற்று பயன் பெறுமாறு கேட்டுக்கொண்டார்.

News June 14, 2024

கதவுகளை மூடி உறங்குங்கள்: எஸ்.பி. எச்சரிக்கை

image

தென்காசி மாவட்டம் கடையம் பகுதிகளில் கடந்த 2 வாரங்களில், காற்று வருவதற்காக வீடுகளை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்த பெண்களிடம் நகைப் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதுகுறித்து போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் இரவு நேரங்களில் கதவுகளை திறந்து வைத்து தூங்காமல், மூடிவிட்டு தூங்கும்படி தென்காசி மாவட்ட எஸ்.பி. சுரேஷ்குமார் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!