Tenkasi

News September 19, 2024

பணி நியமன ஆணை‌ வழங்கிய எஸ்பி

image

தென்காசி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களில், காலியாக உள்ள கோவில் பாதுகாப்பு பணிக்கு முதற்கட்டமாக 11 முன்னாள் ராணுவப்படை வீரர்கள் / ஓய்வு பெற்ற காவல்துறை ஆளினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் கலந்துகொண்டு பணி நியமன ஆணை வழங்கினார்.

News September 18, 2024

எஸ்பி தலைமையில் மாதாந்திர கூட்டம்

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடந்தது. இதில் மாவட்ட எஸ்பி ஶ்ரீனிவாசன் தலைமையில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்டத்தில் இயங்கி வரும் காவல் வாகனங்களை எஸ்பி ஆய்வு மேற்கொண்டார். மேலும், மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

News September 18, 2024

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை

image

புல்லுக்காட்டு வலசையில் 2016ஆம் ஆண்டு புளிச்சிகுளத்தை சேர்ந்த ஆனந்த் (41) என்பவரை கொலை செய்த வழக்கில் முத்துமாலைபுரம் அசோகன்(40) என்பவரை அப்போதைய குற்றாலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் வழக்கின் விசாரணை தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இன்று நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மனோஜ் குமார் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

News September 18, 2024

கடனா அணைக்கு நீர்வரத்து கடும் சரிவு

image

ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள 85 அடி முழு கொள்ளளவு கொண்ட கடனாநதி அணைக்கு நீர்வரத்து ஆனது இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 7 கனஅடியாக சரிந்துள்ளது. ராமநதிக்கு 23 கன அடி ஆகவும், கருப்பா நதிக்கு 5 கன அடியாகவும், குண்டார் அணைக்கு 38 கன அடி ஆகவும் அடவிநயினார் கோவில் அணைக்கு 17 கன அடியாகவும் நீர்வரத்து உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News September 18, 2024

சீட் பெல்ட் அவசியம் குறித்து காவல்துறை அறிக்கை

image

தென்காசி மாவட்ட காவல்துறை சார்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும். இதில் சீட் பெல்ட் அணியாமல் விபத்துக்கள் ஏற்பட்டு நிறைய பகுதிகளில் உயிரிழப்புகள் நீடிக்கின்றன. இதில் பின்னால் உள்ளவர்களும் குழந்தைகளும் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டிய அவசியம் குறித்து அறிக்கை வெளியிட்டனர்.

News September 18, 2024

செங்கோட்டை ரயில் இன்று முதல் பகுதி தூரம் ரத்து

image

செங்கோட்டை – ஈரோடு இடையே இயக்கப்படும் ரயில் திண்டுக்கல் அருகே ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று முதல் 23ம் தேதி வரையும் 25ம் தேதி முதல் 30ம் தேதி வரையும் அக்டோபர் 2ம் தேதி முதல் 7ம் தேதி வரையும் ஈரோடு திண்டுக்கல் இடையே பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் தென்காசி, அம்பை வழியாக செல்வதால் அப்பகுதி பயணிகள் ரயில்வே அறிவிப்புக்கு ஏற்க அமைத்து கொள்ளுமாறு கோட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News September 17, 2024

பொதிகை எக்ஸ்பிரஸ் 20வது பிறந்த நாள் – அழைப்பு

image

வரும் செப்.20ஆம் தேதி செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இருபதாவது ஆண்டு விழாவை கொண்டாட இருக்கிறது. இதை முன்னிட்டு செங்கோட்டை ரயில் நிலையத்தில் வைத்து செப்.20 அன்று பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் இன்று (செப்.17) கேட்டுக்கொண்டுள்ளனர்.

News September 17, 2024

செப்டம்பர் 23ல் தேசிய தொழில் பழகுநர் மேளா

image

தென்காசி அரசு ஐடிஐயில் வரும் செப்.23ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பிரதமரின் தேசிய தொழில் பழகுநர் சேர்ப்புக்கான சிறப்பு மேளா நடைபெற உள்ளது. ஐடிஐ 2ஆம் ஆண்டு ஓராண்டு தொழில் பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள், 2024 பயிற்சி பெற்று தேர்வு எழுதி முடித்தவர்களும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். தொடர்ந்து சான்றிதழ் வழங்கப்படும் என தென்காசி மாவட்ட நிர்வாகம் இன்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

News September 17, 2024

தென்காசியில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய ஊரக நலத்திட்டம் மற்றும் தமிழ்நாடு மாநில ஆய்வு குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் இரண்டு ஆயுஷ் மருத்துவர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நல சங்க மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு வருகிற 27ஆம் தேதிக்குள் தபாலிலோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று கேட்டுக்கொண்டார்.

News September 16, 2024

புளியங்குடி நகருக்கு வருகை தந்த எம்.பி

image

புளியங்குடி நகருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (செப்.16) வருகை தந்த எம்பி விஜய்வசந்த்க்கு புளியங்குடி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக அதன் தலைவர் பால்ராஜ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் புளியங்குடி நகரில் உள்ள காமராஜர் சிலைக்கு விஜய் வசந்த் எம்பி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் புளியங்குடி காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

error: Content is protected !!