Tenkasi

News September 21, 2024

செப்., 22-ல் மாற்றுத்திறனாளி போட்டிகள்

image

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வருகிற செப்.,22 ஆம் தேதி அன்று தென்காசி இசிஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று தெரிவித்தார்.

News September 20, 2024

நிஃபா பாதிப்பு: தென்காசி கலெக்டர் அறிவுறுத்தல்

image

கேரளம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவருக்கு நிஃபா வைரஸ் பாதிப்பு இருப்பதை நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம் உறுதி செய்துள்ளது. தொடர்ந்து தமிழக – கேரள எல்லையான புளியரை சோதனை சாவடியில் தீவிரமாக சுகாதாரத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். ஆதலால், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் மக்கள் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிஷோர் அறிவுறுத்தியுள்ளார்.

News September 20, 2024

சிவகிரி அருகே சொகுசு பேருந்து மோதி இளைஞர் பலி

image

சிவகிரி அருகே வாசுதேவநல்லுரை சேர்ந்தவர் அருண் காந்த்(29). இவர் இன்று தனது இருசக்கர வாகனத்தில் வாசுதேவநல்லூரில் இருந்து ராயகிரிக்கு பைக்கில் சென்றார். அப்போது, எதிரே சென்னையில் இருந்து பாபநாசத்திற்கு வந்த தனியார் சொகுசு பேருந்து இவரது பைக் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து சிவகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News September 20, 2024

கடையநல்லூரில் அறிவு சார் மையம்: அமைச்சருக்கு மனு

image

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி சேர்மன் ஹபீபுர் ரஹ்மான் நேற்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் அளித்துள்ள மனுவில், கடையநல்லூர் நகரப் பகுதியில் சுமார் 1 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்கு அரசு கல்லூரி பொறியியல் நர்சிங் பாலிடெக்னிக் ஐடிஐ பார்மசி கல்லூரிகள் உள்ளன. எனவே அறிவுசார் மையம் அமைக்கப்பட்டால் மாணவர்களுக்கு வசதியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

News September 20, 2024

தென்காசி தொழில் முனைவோர்கள் கவனத்திற்கு

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பாக உணவு பொருள் உற்பத்திக்கான தரச்சான்று பெறுவது தொடர்பான பயிற்சி நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதில் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News September 20, 2024

தென்காசி அருகே மின்கம்பியில் மரக்கிளை உரசி விபத்து

image

தென்காசி மாவட்டம் காசி மேஜர் புரம் பாரதி நகரில் மின்கம்பியில் வேப்பமரக் கிளை உரசி நேற்று (செப்.19) இரவு மின்கம்பியில் தீ பற்றி மின்கம்பி துண்டானது. பின்னர் மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் மின்கம்பி சரி செய்யப்பட்டது. ஆனால் மின்கம்பியில் உரசும் மர கிளைகளை அகற்றாததால் மீண்டும் மின்கம்பிகள் தீப்பற்றி அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.

News September 20, 2024

தென்காசியில் முறைகேடு.. பரபரப்பு புகார்

image

தென்காசி நகராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக திமுகவைச் சேர்ந்த துணைத் தலைவர் அளித்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சியில் தன்னுடைய அனுமதியின்றி 40 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு சுமார் 50க்கும் மேற்பட்ட இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக நகராட்சி துணை தலைவர் சுப்பையா சென்னை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நிர்வாக இயக்குநரிடம் நேற்று மனு அளித்துள்ளார்.

News September 19, 2024

கோவில் பாதுகாவலர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று (செப்.19) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் காலியாக உள்ள கோவில் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவல் ஆளினர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

News September 19, 2024

விஷம் கொடுத்ததில் 2 வயது குழந்தை பலி

image

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள செல்லப் பிள்ளையார் குளம் பகுதியை சேர்ந்த உச்சிமாகாளி என்பவர் கடன் தொல்லையால் விஷம் குடித்து தனது மூன்று குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துள்ளார். இதில் கடை குட்டி மகனான பிரவீன் ராஜ்(2) மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News September 19, 2024

தென்காசியில் விபத்து; முதியவர் காயம்

image

தென்காசி புதிய பஸ் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்து பழைய பேருந்து நிலையம் உள்ளே செல்லும் நுழைவு வாயில் முன்பு வேகமாக வந்து திரும்பியதை கவனிக்காமல் யானைபாலத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் பேருந்தின் முன் பக்கத்தில் மோதினார். இதில் முதியவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!