India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வடகரை பகுதியில் விவசாய விளை நிலங்களில் காட்டு யானைகள் சேதப்படுத்தி வருவதை முன்னிட்டு விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். இதனை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் அதன் எதிரொலியாக இன்று மாவட்ட காவல்துணை கண்காணிப்பாளர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி, கடையம் பகுதிகளில் இன்று(செப்.,22) காலை 11.55 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில், தற்போது வரை அரசின் ‘Seismo’ இணையதளத்தில் பதிவுகள் ஏதும் வர பெறவில்லை. யாருக்கும் காயமோ, பிற சேதங்களோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. கள அலுவலர்கள் அப்பகுதிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர் என கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையம், ஆழ்வார்குறிச்சி ,வாகைகுளம், செட்டிகுளம் ,ஆம்பூர், சிவசைலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் இன்று செப்டம்பர் 11.45 மணி அளவில் திடீரென பயங்கர சத்தம் கேட்டுள்ளது .அதனை அந்த பகுதி மக்கள் உணர்ந்துள்ளனர் .வீடுகள் லேசாக குழுங்கியதாக தெரிவித்தனர். இதனால் இந்த பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
சங்கரன்கோவிலை சேர்ந்தவர் வேலுச்சாமி ஆடுகள் வளர்கிறார். இவர் மேலும் இருவருடன் சேர்ந்து குருக்கள்பட்டியைச் சேர்ந்த பாப்பா தோட்டத்தில் ஆட்டுக் கிடை அமைத்திருந்தனர்.மேய்ச்சலுக்கு செல்ல முடியாத செம்மறி குட்டிகள் பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. மர்மநபர்கள் பட்டிக்கு தீ வைத்தனர்.இதில் ஓலை கூண்டுக்குள் இருந்த 20 ஆட்டுக் குட்டிகள் இறந்தன. புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் சார்பில் விண்வெளி அறிவியல் முகாம் வருகிற செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதி ஆகிய இரு தினங்களில் சங்கரன்கோவில் ஏவிகே இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் அய்யாசாமி இன்று கேட்டுக்கொண்டார்.
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் குத்துக்கல்வலசையில் உள்ள அலுவலகத்தில் வைத்து வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளலாம், வேலை தேடும் இளைஞர்களும் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவிக்கப்பட்டது.
தெனகாசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே அருணாச்சலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகவேல்(45). அரியநாயகிபுரம் ஊராட்சி தலைவரான இவரது மனைவி மஞ்சு(38) நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது அரளி விதை அரைத்து தற்கொலைக்கு முயன்று நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் நேற்று(செப்.,20) உயிரிழந்தார். இது குறித்து சேந்தமரம் போலீசார் வழக்குப்பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வருகிற செப்.,22 ஆம் தேதி அன்று தென்காசி இசிஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று தெரிவித்தார்.
கேரளம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவருக்கு நிஃபா வைரஸ் பாதிப்பு இருப்பதை நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம் உறுதி செய்துள்ளது. தொடர்ந்து தமிழக – கேரள எல்லையான புளியரை சோதனை சாவடியில் தீவிரமாக சுகாதாரத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். ஆதலால், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் மக்கள் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிஷோர் அறிவுறுத்தியுள்ளார்.
சிவகிரி அருகே வாசுதேவநல்லுரை சேர்ந்தவர் அருண் காந்த்(29). இவர் இன்று தனது இருசக்கர வாகனத்தில் வாசுதேவநல்லூரில் இருந்து ராயகிரிக்கு பைக்கில் சென்றார். அப்போது, எதிரே சென்னையில் இருந்து பாபநாசத்திற்கு வந்த தனியார் சொகுசு பேருந்து இவரது பைக் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து சிவகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.