India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை – செங்கோட்டை இடையே முற்றிலும் குளிரூட்டப்பட்ட சிறப்பு விரைவு ரயிலை தெற்கு ரயில்வே நேற்று அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 30-ஆம் தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் இந்த விரைவு ரயில், திருவள்ளுவர், காட்பாடி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி வழியாக மறுநாள் காலை செங்கோட்டையை வந்தடைகிறது. இதற்கான முன்பதிவு விரைவில் தொடங்க உள்ளது.
தென்காசி தெற்கு மாவட்டம் சொக்கம்பட்டியில் ஆரம்பம் சுகாதார நிலையங்கள் திறப்பு விழாவிற்காக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று(அக்.,23) வருகை தந்தார். அவரை தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ ஆகியோர் வரவேற்றனர்.
தென்காசி மாவட்டத்தில் 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகிற 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்கின்றனர். எனவே அனைத்து வட்டார விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று கேட்டுக்கொண்டார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று (அக்.22) வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடையநல்லூர் அரசினர் தொலைபேசி நிலையத்தில் 2024ஆம் கல்வி ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் விருப்பம் உள்ளவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வருகிற 30ஆம் தேதிக்கு விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் சென்னையில் நடைபெற்றன. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு பிரிவில் பெரிய குண்டு எரிதல் போட்டியில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் 75 ஆயிரம் ரூபாய், பவித்ரா குண்டு எரிதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று 50,000 ரொக்க பரிசம் வென்றார். அவர்களை இன்று (அக்.22) மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேரில் அழைத்து பாராட்டினார்.
தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டியில் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம், கடையநல்லூர் இக்பால் நகரில் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம், நாடார் பட்டி, ராமநாதபுரம் சுப்பிரமணியபுரம் ஓடை மறிச்சான் ஆகிய 4 பகுதிகளில் தலா ரூ.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையங்களை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நாளை (அக்.23) திறந்து வைக்க உள்ளார்.
தென்காசி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில், ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவியேற்று நான்காவது ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன் தலைமையில் கீழ வீராணம் ஊராட்சி தலைவர் வீரபாண்டியன் முன்னிலையில் இலஞ்சி திருமலை கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி நகராட்சி 12வது வார்டு செயலாளராக திமுகவை சேர்ந்த வேல்ஐயப்பன் உள்ளார். இவர், தென்காசி மேலமுத்தாரம்மன் கோயில் அறங்காவலர் குழு பதவிக்கு விண்ணப்பித்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவருக்கு பதவி வழங்காமல் பாஜக & காங்., கட்சியை சேர்ந்தோருக்கு வழங்கியதாக கூறி, நகர் மன்ற தலைவரும் மாவட்ட அறங்காவல் குழு தலைவருமான சுப்பையாவை கண்டித்து ஐயப்பன் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் தென்காசி மாவட்ட தலைவர் கந்தசாமி தேவர் என்பவர் நேற்று(அக்.,21) தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோரிடம் மக்கள் குறைதீர் நாள் முகாமில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், பாட்டா குறிச்சி பகுதியில் கல்குவாரி அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அதனை மீறி அனுமதி வழங்கப்பட்டால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி இஸ்லாமியக் கல்வியில் கல்லூரியில் 2021-2023 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற தஸ்லிமா நஸ்ரின் என்ற மாணவி, TNOU பல்கலை., நடத்திய பல்கலை., தேர்வில் தமிழகத்திலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றிருந்தார். இதற்காக நேற்று மாணவி தஸ்லிமா நஸ்ரின்(அக்.21) சென்னையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமாகிய ரவியிடம் விருதினை பெற்றுக்கொண்டார். வாழ்த்து சொல்லலாமே!
Sorry, no posts matched your criteria.