India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே பொதிகை அறக்கட்டளையை நடத்தி வந்த கிருஷ்ணன் என்ற இளைஞர் இன்று (நவ.13) தனது பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி புதிய கட்சியின் பெயரை அறிவிக்க முற்பட்டபோது அங்கு வந்த போலீசார் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டதாக கூறி அவரை அதிரடியாக கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
தென்காசி மாவட்டத்தில் 85 அடி முழு கொள்ளளவு கொண்ட கடனா அணையின் நீர்மட்டம் 41.40 அடியாகவும், 84 அடி முழு கொள்ளளவு கொண்ட ராமநதி அணையின் நீர்மட்டம் 59.50 அடியாகவும், 72 அடி முழு கொள்ளளவு கொண்ட கருப்பா நதியின் நீர்மட்டம் 48.23 அடியாகவும், வடகரையில் உள்ள 132 அடி முழு கொள்ளளவு கொண்ட அடவி நயினார் அணையில் 61.25 அடி நீர்மட்டம் இருப்பதாக இன்று மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்காசியிலிருந்து அளவுக்கு அதிகமாக வைக்கோல் லோடு ஏற்றிய லாரி ஒன்று, கேரளாவிற்கு நேற்று(நவ.,12) சென்று கொண்டிருந்தது. தென்மலை அருகே உள்ள கழுதுறுட்டி ஆனைச்சாடி பாலத்தின் எல்லையில், எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட ஒதுங்கியபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துத்தில் சிக்கியது. டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து விசாரணை நடைபெறுகிறது.
தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாறையடி தெரு, அங்கன்வாடி மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிபணிகள் திட்டம் மூலம் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் 2 ஆம் கட்ட தொடக்க விழா நவ.,15 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு தொடங்கி வைக்க உள்ளதாக கலெக்டர் கமல் கிஷோர் நேற்று(நவ.,12) தெரிவித்தார்.
தென்காசி மாவட்டத்தில் காவல் மற்றும் நெடுஞ்சாலை துறை ரோந்து பணியில் இன்று (நவ.12) இரவு 10 மணி முதல் (நவ.13) காலை 6 மணி வரை பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரம் மாநகர காவல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை தேர்தல் அதிகாரி வாக்காளர் இலவச தொலைபேசி சேவை எண்களை பகிர்ந்துள்ளார். உங்கள் மாவட்ட STD கோடுடன் 1950 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும். உதாரணமாக தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 04633 1950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும் சட்டமன்ற தொகுதி, நாடாளுமன்ற தொகுதி, வாக்குச்சாவடி மையம் போன்ற தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
சங்கரன்கோவில் போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து நடத்துனர் மற்றும் ஓட்டுநருக்கான ஓய்வு அறை திறப்பு விழா போக்குவரத்து பணிமனையில் நாளை காலை 9:30 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். அனைவரும் கலந்து கொள்ளுமாறு நகர திமுக செயலாளர் பிரகாஷ் இன்று கேட்டுக்கொண்டார்.
தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசையில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் சிறிய அளவிலான தனியார் வேலை வாய்ப்பு முகாம், நவ.,15 ஆம் காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை நடைபெற இருக்கிறது. இதில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களில் முதல் ஐடிஐ, பட்டப்படிப்பு டிப்ளமோ படித்தவர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம். தொடர்புக்கு: 04633 – 213 179, 63816 62624.
தென்காசி மாவட்டம், ஐசிஐ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மூன்றாவது பொதிகை புத்தகத் திருவிழா நவம்பர் 15ஆம் தேதி முதல் நவம்பர் 24ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. விழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்ற அமைச்சர் பெருமக்கள் மற்றும் தென்காசி கடையநல்லூர் சங்கரன்கோவில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.
தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசையில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் சிறிய அளவிலான தனியார் வேலை வாய்ப்பு முகாம், நவ.,15 ஆம் காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை நடைபெற இருக்கிறது. இதில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களில் முதல் ஐடிஐ, பட்டப்படிப்பு டிப்ளமோ படித்தவர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம். தொடர்புக்கு: 04633 – 213 179, 63816 62624.
Sorry, no posts matched your criteria.