Tenkasi

News November 28, 2024

தென்காசி: பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக, சமூக நீதிக்கான ‘தந்தை பெரியார்’ விருது 1995ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுபவருக்கு ரூ.5 லட்சம் தொகையும், தங்க பதக்கமும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் இவ்விருதுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிச.,12-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என நேற்று தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் அறிவுறுத்தியுள்ளார்.

News November 28, 2024

சங்கரன்கோவில்: படைப்புழுவை கட்டுப்படுத்த அதிகாரிகள் டிப்ஸ்!

image

சங்கரன்கோவில் வட்டார வேளாண் உதவி இயக்குநர் திருச்செல்வன் நேற்று(நவ.,27) வெளியிட்ட செய்தி குறிப்பில், மக்காச்சோளப் பயிரில் படை புழுக்கள் பயிரின் இளம் பருவத்தில் இலைகள் மற்றும் குருத்துப் பகுதியை சேதப்படுத்துகின்றன. இதை தடுப்பதற்கு, உழவின்போது வேப்ப புண்ணாக்கு பயன்படுத்த வேண்டும். 1 கிலோ விதைக்கு 4 மில்லி சையாண்டி புரோல் பயன்படுத்த வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

News November 28, 2024

தென்காசி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள்

image

தென்காசி உட்கோட்டத்துக்கு உட்பட்ட தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி, சங்கரன்கோவில், நெடுஞ்சாலை மற்றும் காவல் ரோந்து பணியில் நவ.27 இரவு 10 மணி முதல் நவ.28 காலை 6 மணி வரை ஈடுபடும் அதிகாரிகள் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு 100 – ஐ அழைக்கவும். அல்லது தென்காசி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100.

News November 27, 2024

தென்காசியில் நவ.,29 விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

தென்காசி மாவட்ட கலெக்டர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நவம்பர் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நவ.,29ஆம் தேதி, காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்கின்றனர். அனைத்து வட்டார விவசாயிகளும் கலந்து கொள்வதோடு மனுவில் தங்களது கைபேசி எண்ணையும் குறிப்பிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றார்.

News November 27, 2024

தென்காசி: தனித்தேர்வர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட கலெக்டர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாவட்டத்தில் இடைநிலை பொதுத்தேர்வு(SSLC) எழுதிய தனித்தேர்வர்கள், மார்ச் 2017 முதல் ஜூன்/ ஜூலை 2020 வரையிலான அனைத்து பருவங்களுக்குரிய தனித்தேர்வர்களால் கோரப்படாத அசல் மதிப்பெண் சான்றிதழ்களை 90 நாட்களுக்குள், தேர்வு எழுதிய நுழைவுச்சீட்டுடன் திருநெல்வேலி அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

News November 26, 2024

கனிமவள லாரிகளுக்கு ரூ.1.94 லட்சம் அபராதம்

image

செங்கோட்டை வழியாக கேரள மாநிலத்திற்கு 700 க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. கனரக வாகனங்களில் கூடுதலாக உள்ள சக்கரங்களை சாலைகளில் இயக்காமல் அதிக அளவு கனிம வளங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு இன்று தென்காசி ஆர்டிஓ கண்ணன், ஆய்வாளர் மணிபாரதி, போக்குவரத்துகாவல் ஆய்வாளர் மணி ஆகியோர் சோதனை நடத்தி அதில் 4 வாகனங்களுக்கு ரூ1.94 லட்சம் அபராதம் விதித்தனர்.

News November 26, 2024

ஆய்க்குடி அமர்சேவா சங்கத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் 

image

தென்காசி மாவட்டம், ஆயக்குடி பகுதியில் செயல்பட்டு வரும் பிரபலமான ஆய்க்குடி அமர்சேவாசங்கத்திற்கு மர்ம நபர் ஒருவர் இமெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது வெடிபொருள் நிபுணர்கள் ஆய்க்குடி அமர்வார் சங்கத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு 680 மாணவ மாணவிகள் பயின்று வருவது குறிப்பிடத்தக்கது. 

News November 26, 2024

துணை CM பிறந்தநாள்: பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

image

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, சங்கரன்கோவில் அம்மா உணவகத்தில் நாளை(நவ.,27) இலவச உணவு, அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு பால், பிரட் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு, அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் எம்எல்ஏ ராஜா கலந்து கொள்ளவுள்ள நிலையில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News November 26, 2024

ஆலங்குளம்: கனிம வள லாரிகள் மீது கல்வீசிய 2 பேர் கைது

image

ஆலங்குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் ஏற்றிக்கொண்டு ராம் நகர் வழியாக சென்ற 2 லாரிகள் மீது கல் வீசிய வழக்கில் 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லக்கூடாது எனக்கூறி அழகாபுரி பாபநாசபுரத்தை சேர்ந்த சுகிர்த செல்வம், பிரவின் ஆகியோர் லாரியை தாக்கியது தெரிய வந்தது. நேற்று(நவ.,25) இருவரையும் கைது செய்தனர்.

News November 26, 2024

தென்காசி மாவட்டத்தில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று(நவ.,26) மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களிலும் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. கடந்த சில நாட்களாகவே தென் மாவட்டங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. SHARE IT.

error: Content is protected !!