Tenkasi

News September 7, 2024

ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிக்கு ஆட்சியர் அழைப்பு

image

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வருகிற செப்டம்பர் ஒன்பதாம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டு பரிசுகள் வெல்லலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று கேட்டுக்கொண்டார்.

News September 7, 2024

சுந்தரபாண்டியபுரம் ஆசிரியருக்கு செம்மல் விருது

image

சுந்தரபாண்டியபுரம் அரசு பள்ளி ஆசிரியர் சு.முருகனுக்கு தமிழக கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் ஆசிரியர் செம்மல் விருதினை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வழங்கினார். அதனை முன்னிட்டு இன்று அவருக்கு பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.

News September 6, 2024

தென்காசியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்தனர். அதனை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார்.

News September 6, 2024

தொழில் தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்பு

image

தென்காசியில் 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினை பயிற்சி திட்டத்தின் கீழ் தேசிய தொழில் பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழில் தேர்வில் தனி தேர்வர்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து செப்.18 க்குள் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் சமர்பிக்க வேண்டும்.

News September 6, 2024

நம்ப ஸ்கூல் நம்ப ஊரு பள்ளி திட்டம்

image

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், சமூக பங்களிப்பு மற்றும் தனிப்பட்ட பங்களிப்புகளை ஒருங்கிணைக்க ‘நம்ப ஸ்கூல் நம்ப ஊரு பள்ளி’திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் தென்காசி மாவட்டத்தி உள்ள அரசு பள்ளிகளின் தரத்தை  உயர்த்த பொதுமக்கள் பொருளாகவோ, பணமாகவோ, களப்பணிகள் மூலமாக பங்களிக்கலாம்.  ஆர்வமுள்ளவர்கள் 63853 13047 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 6, 2024

மாணவர்கள் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தென்காசி மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூர் வீரகேரளம்புதூர் ஆகிய பகுதிகளில் அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகிறது .இங்கு 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை இணையதளம் வாயிலாக செப். 30 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். SHARE IT

News September 6, 2024

தென்காசியில் 295 விநாயகர் சிலைகள்

image

விநாயகர் சதுர்த்தி நாளை(செப்.7) கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் இந்தாண்டு தென்காசி மாவட்டத்தில் 295 இடங்களில் 295 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில், புளியங்குடி, சுரண்டை, கடையம் உள்ளிட்ட பகுதிகளில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. இதற்காக மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News September 6, 2024

தென்காசி ஆட்சியர் தலைமையில் கலந்துரையாடல்

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்திய தரநிர்ணய அமைவனம் மூலம் நிலச்சரிவு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடன் இன்று கலந்துரையாடல் நடைபெற்றது. நிகழ்விற்கு, தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமை வகித்தார். கூட்டத்தில் நிலச்சரிவு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது.

News September 5, 2024

தென்காசி அருகே விபத்தில் ஒருவர் பலி

image

செங்கோட்டையில் இருந்து புளியரை செல்லும் சாலையில் இன்று மாலை பூலாங்குடியிருப்பை சேர்ந்த நவாஸ் என்பவர் நின்று கொண்டிருந்தார்.      அப்போது அங்கு வந்த டாட்டா ஏஸ் வாகனம் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த நவாஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 5, 2024

சிறப்பிடம் பிடித்தவர்களுக்கு தங்க நாணயம்

image

ஆழ்வார்குறிச்சி அருகே கருத்த பிள்ளையூர் புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது. கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பில் அரசு பொது தேர்வு எழுதி பள்ளியில் முதல் இரண்டு இடம் பிடித்த மாணவர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயம், இரண்டாம் இடம் பிடித்த மாணவர்களுக்கு வெள்ளி டம்ளர் பரிசாக வழங்கப்பட்டது.

error: Content is protected !!