India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர், தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் மக்களுக்கான முற்போக்கு பாடல்களை பாடித்திரிந்த கரிசல் குயில் கிருஷ்ணசாமி நேற்று (ஏப்-11) காலமானார். தனது இனிமையான குரல் வளத்தால் தமிழகத்தின் பட்டித் தொட்டி எங்கும் கரிசல் குயில் இசைக்குழுவை கொண்டு சென்றவர். அவருடைய மறைவிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் எழுத்தாளர் சங்கம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களைச் இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை. ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE செய்து உதவவும்.
தென்காசி மாவட்டத்தில் தங்கத் தேர் உள்ள முருகன் கோவில் செங்கோட்டை அருகே பண்பொழி மலை மேல் உள்ள திருமலை குமரன் கோவிலில் மட்டும் தான் தங்கத்தேர் உள்ளது. விசேஷ தினங்களில் தங்கத் தேர் இழுக்கப்படும் மேலும் பக்தர்கள் குடும்பத்துடன் கட்டணம் ரூபாய் 1,200 செலுத்தினால் பக்தர்களே தங்கள் கைகளால் தங்கத் தேரை வடம் பிடித்து இழுக்கலாம், தமிழக மட்டுமின்றி கேரள பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்லும் முக்கிய கோவிலாகும்.
தென்காசி மாவட்டத்தில் சத்துணவுமையங்களில் சமையல் உதவியாளர்களாக பணி நியமனம் மாவட்ட ஆட்சியர் தகவல் பணியில் ஈடுபடுவோருக்கு மாதம் ரூ.3000/- தொகுப்பூதியமும். ஓராண்டு கால பணிக்குப்பின்பு சிறப்பு காலமுறை ஊதியத்தில் (ஊதிய நிலை 1 (Level of Pay – ரூ.3000 – 9000)) ஊதியம் வழங்கப்படும். (கல்வித்தகுதி – 10ம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி) விண்ணப்பத்தினை ஏப்.25ம் தேதிக்குள் அப்பகுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கலாம்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் இன்று (ஏப்ரல்-10) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அலுவலர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் காவல்துறையினரின் அவசர உதவிகள் தேவைப்படும். பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த காவல்துறையினரை தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்று கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய எலுமிச்சைச்சந்தை புளியங்குடியில் தான் அமைந்துள்ளது. இங்கு தினமும் சராசரியாக 2000க்கும் மேற்பட்ட விவசாயிகள் எலுமிச்சை ஏலத்தில் கலந்து கொள்கின்றனர். அதனால் இதற்கு லெமன்சிட்டி என்று பெயருண்டு. தற்போது புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார்குறியீடு வழங்கியுள்ளது. இதன்மூலம் புளியங்குடியில் கிடைக்கும் எலுமிச்சை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி. *ஷேர்
பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி நெல்லை மாவட்டத்திற்கு நாளை (ஏப்.11) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஏப்.26 சனிக்கிழமை அன்று வேலைநாள் என கலெக்டர் சுகுமார் அறிவித்துள்ளார். அதேபோல், பங்குனி உத்திரம், காசி விஸ்வநாதர் கோயில் திருவிழாவையொட்டி தென்காசி மாவட்டத்திற்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாற்றமின்றி நடைபெறும்.
தென்காசி தாலுகாவில் வரும் 16ஆம் தேதி காலை 9 மணி முதல் 17ஆம் தேதி காலை 9 மணி வரை உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகம் நடக்கிறது கலெக்டர் கமல் கிஷோர் தலைமையில் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு துறை அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். 16ஆம் தேதி தாலுகாவில் நடக்கும் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்கிறார். அன்றைய தினம் மாலை 6:00 மணி முதல் நகர, கிராம பகுதிகளில் கலெக்டர்ஆய்வு மேற்கொண்டு இரவு தங்குகிறார்.
தென்காசி மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10,12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் விண்ணப்பிக்க இன்றே (ஏப்.10) கடைசி நாள். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக, உணவு, தொழில் நிறுவனங்களின் பெயர் பலகையானது தமிழில் இருக்க வேண்டும். பிற மொழியும் தேவைப்படும் பட்சத்தில் தமிழில் முதன்மையாகவும். பெரியதாகவும், போதிய இடைவெளியுடன் மற்ற மொழிகளை விட பார்வைக்கு மேலோங்கியும் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் இரண்டாவதாகவும், பிற மொழிகளில் அடுத்ததாகவும் இடம் பெற வேண்டும். இல்லையேல் நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் கமல் கிஷோர்.
Sorry, no posts matched your criteria.