Tenkasi

News January 19, 2025

அச்சன்புதூரில் ராஜேந்திர பாலாஜிக்கு வீரவாள் பரிசு

image

தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கோயிலில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடையநல்லூர் எம்எல்ஏ கிருஷ்ண முரளி மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் மோகன்தாஸ் பாண்டியன், அச்சன்புதூர் பேரூராட்சி தலைவர் சுசீகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வின்போது விழாக்குழுவினர் ராஜேந்திர பாலாஜிக்கு வீரவாளை பரிசாக வழங்கினர்.

News January 19, 2025

தென்காசியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

image

தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருவதால், இன்று(19/1/25) லேசானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென்காசி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆகவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. SHARE IT.

News January 18, 2025

தென்காசியில் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விபரம்

image

தென்காசி மாவட்ட காவல்துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தென்காசி மாவட்டத்தில் 18ஆம் தேதி சனிக்கிழமை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தென்காசி புளியங்குடி சங்கரன்கோவில் ஆலங்குளம் ஆகிய நான்கு உட்கோட்டங்களில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை ஆய்வாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவசர உதவிகளுக்கு குறிப்பிடப்பட்டுள்ள நம்பரில் தொடர்புகொள்ளவும் மாவட்ட காவல்துறை வேண்டுகோள்.

News January 18, 2025

தென்காசி மாவட்டம் பாஜக தலைவருக்கான தேர்தல்

image

ஜனவரி 18 தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் தென்காசி மாவட்ட பாஜக “தலைவருக்கான” தேர்தல்நடை நடைமுறைகள் கோவிலில் தற்போது காலை 10:30 மணியளவில் துவங்கியுள்ளது. பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடைபெற்று வருகிறது.சிறப்பான முறையில் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. பாஜக உறுப்பினர் ஆனந்தன் அய்யாசாமி கலந்து கொண்டுள்ளார்.

News January 18, 2025

விமான பயணத்திற்கு ரயிலில் கிளம்பிய மாணவர்கள்!

image

கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், கொண்டலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 3ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 20 பேர் சென்னைக்கு கல்வி சுற்றுலா செல்கின்றனர். இவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ் ஏற்பாட்டில் முதன்முறையாக மதுரையில் இருந்து விமானம் மூலம் இன்று(ஜன.18) சென்னை செல்கின்றனர். இதற்காக இன்று அதிகாலை பாவூர்சத்திரத்தில் இருந்து ரயில் மூலம் அவர்கள் மதுரை கிளம்பி சென்றனர்.

News January 18, 2025

ஏபி நாடானூரில் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

image

தென்காசி தெற்கு மாவட்ட திமுக கடையம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் அணைந்த பெருமாள் நாடானூர் ஊராட்சியில் வரும் 20ஆம் தேதி தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொள்ள உள்ளார். இதில் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கட்சி சார்பில் இன்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News January 18, 2025

இருக்கன்குடி கோயிலுக்கு சென்ற தென்காசி பக்தர் உயிரிழப்பு!

image

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சிங்கிலி பட்டியை சேர்ந்தவர் மாரிச்செல்வம்(31), திருமணமாகவில்லை. இவர் தனது குடும்பத்துடன் நேற்று(ஜன.17) சாத்தூர் மாவட்டத்தில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் வழிபட சென்றபோது மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர்.

News January 18, 2025

தென்காசி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் இன்று (ஜன.17) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

News January 17, 2025

விமான பயணம் மேற்கொள்ளும் அரசு பள்ளி மாணவர்கள்

image

கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் கொண்டலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 20 பேர் சென்னைக்கு கல்வி சுற்றுலா செல்கின்றனர். இவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ் ஏற்பாட்டில் முதன்முறையாக மதுரையில் இருந்து விமானம் மூலம் நாளை (ஜன.18) சென்னைக்கு அழைத்து செல்கின்றனர். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News January 17, 2025

தென்காசி அரசு மருத்துவமனைக்கு விருது

image

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தை சிறப்பாக செயலாற்றிய முதல் 5 மருத்துவமனைகளில் ஒன்றாக திகழ்கிறது. அதனை முன்னிட்டு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் விருதினை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் மற்றும் முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்ட அலுவலர் ராஜேஷ் ஆகியோரிடம் வழங்கினார். இன்று அவர்களை மாவட்ட கலெக்டர் மற்றும் இணை இயக்குநர் பாராட்டினர்.

error: Content is protected !!