India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடந்த 2024ஆம் ஆண்டு தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து லஞ்சம் பெற்றதாகவும், லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் அலுவலகம் வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக ரெய்டு நடத்தியதாக 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 8 பேரை லஞ்சம் பெறும்போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை (ஜன.26) தென்காசி மாவட்டத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி, கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. ஆகவே, உங்கள் பகுதியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்கள், அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் நடைபெறும் குடியரசு தின விழா மற்றும் கொடியேற்ற நிகழ்வுகளை செய்திகளை வே2நியூஸில் பதிவிடுங்கள். உங்கள் ஊர் செய்திகள் வே2நியூஸ் மூலம் அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாளை நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, அனைத்து மதுபான கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் அனைத்து மதுபான கூடங்கள் மதுபான கடைகள் மூடப்படுகிறது .இதனை மீறி கள்ள சந்தையில் மது விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
நெல்லை – தென்காசி தேசிய நெடுஞ்சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே இந்த சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டத்தின் மாநில தலைவர் விக்ரம ராஜா நேற்று வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி ஃபார்ம், டி ஃபார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொது மக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள தொழில் முனைவோர் www.muthalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று(ஜன.24) தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் 17 வயதான பிளஸ் டூ பள்ளி மாணவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் அவருக்கு வாகனம் ஓட்ட அனுமதித்த தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார். 18 வயது நிரம்பாத சிறுவர், சிறுமிகள் இருசக்கர, நான்கு சக்கர வாகனத்தை இயக்கினால் வாகனம் பறிமுதல் செய்து பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.
தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் ‘யார் அந்த சார்’ வாசகம் அடங்கிய ஸ்டிக்கரை, தென்காசி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளருமான செல்வ மோகன்தாஸ் பாண்டியன்யன் தலைமையில் அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் அஇஅதிமுகவினர் ஒட்டினர். இதில், திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தென்காசி மாவட்டத்திற்கு இன்று(ஜன.24) வருகை தந்த சபாநாயகர் மற்றும் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான அப்பாவு எம்.எல்.ஏவை தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஜெயபாலன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். தென்காசியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் வருகை தந்துள்ளார்.
தென்காசி மாவட்ட கலெக்டர் நேற்று(ஜன.23) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நெகிழி தடுப்பு முயற்சியாக தென்காசி யானை பாலத்தில் ஜன.25ஆம் தேதி காலை மாணவ மாணவியர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்புடன் சிற்றாறு தூய்மைப்படுத்தும் பணி, விழிப்புணர்வு பேரணிகள் மற்றும் நிகழ்ச்சிகள் தென்காசி மார்க்கெட் பகுதியில் நடைபெறும். அதனை தொடர்ந்து வார்டு 23-ல் உள்ள வீடுகளில் நெகிழி சேகரிப்பு நடைபெறவுள்ளது.
தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக ஆனந்தன் அய்யாசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து அவர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், ZOHO நிறுவனரான ஸ்ரீதர் வேம்புவை கடையம் அருகே கோவிந்தபேரியில் உள்ள பண்ணை வீட்டில் நேற்று(ஜன.23) சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்வில் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.