India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று(ஏப்ரல்.14) மாலை 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று IMD தெரிவித்துள்ளது. அந்தவகையில் தேனி, தென்காசி, குமரி, நெல்லை, விருதுநகர் உட்பட 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே பொதுமக்கள், குழந்தைகள் பாதுகாப்பாக வெளியில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
தென்காசி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் ஏப். 16,17 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் ஏப்.17 காலை 9 மணி வரை நடைபெற உள்ளது. இந்த வட்டத்தில் அரசால் நிறைவேற்றப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் இசக்கி மஹாலில் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை நிவர்த்தி செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று கேட்டுக்கொண்டார்.
விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப் பலன்களைப் பெறுவதற்கு, தங்களது நில உடைமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய விவசாய அட்டை பதிவிற்கான தேதி நாளையுடன் (15.04.2025 ) முடிவடைகிறது. ஆகவே உங்களுடைய பட்டா, ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை கொண்டு சென்று இ-சேவை மையத்தில் பதிவு செய்யவும். பதிவு செய்ய முடியவில்லை எனில் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொள்ளவும். *SHARE*
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தென்காசி மாவட்ட மக்களுக்கு பண மோசடி குறித்து OTP யாரும் கேட்டால் சொல்ல கூடாது என தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் சமூக ஊடக வழித்தலங்களில் படவரி பக்கத்திலும் முகநூல் பக்கத்திலும் தென்காசி மாவட்ட காவல்துறை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. *ஷேர்
தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (ஏப்ரல்-13) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து தென்காசி, கடையநல்லூர் ராஜபாளையம் விருதுநகர் வழியாக ஞாயிற்றுக்கிழமை தோறும் மேட்டுப்பாளையத்திற்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 13ஆம் தேதி இன்று முதல் ஜூன் 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
தென்காசி நகராட்சி மார்க்கெட் அருகே புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் தேர்பவனி திருவிழாவில் கிறிஸ்தவ பெருமக்கள் தவிர அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்வார்கள். மேலும் கேரளாவிலிருந்து அதிகப்படியான மக்கள் இந்த ஆலயத்திற்கு வருகை தருவர். சர்ச் அருகே இந்து கோயில் திருவிழா நடக்கும் சமயத்தில் பக்தர்கள் பெரும்பாலும் இந்த ஆலயத்தில் தான் தங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. *ஷேர்
தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று IMD தெரிவித்துள்ளது. அந்தவகையில் தேனி, தென்காசி, குமரி, நெல்லை, விருதுநகர் உட்பட 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே பொதுமக்கள், குழந்தைகள் பாதுகாப்பாக வெளியில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க
மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE IT!
தமிழ்நாட்டில் அமைந்துள்ள நரசிம்ம தலங்களில் ஒன்று தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் அமைந்துள்ளது. நரசிம்மர் 16 கரங்களுடன் காட்சியளிக்கிறார். இந்தியாவில்,16 கரங்களுடன் நரசிம்மர் காட்சி தரும் மூன்று தலங்களில் இதுவும் ஒன்றாகும். சுவாதி நட்சத்திரம் அன்று சிறப்பு பூஜை நடைபெறுகிறது. நரசிம்மருக்கு மிகவும் பிரியமான பானகம் படைத்து வணங்கினால் நீண்ட கால துன்பங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.*ஷேர்*
Sorry, no posts matched your criteria.