India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (செப்.15) அன்பு கரங்கள் திட்ட தொடக்க விழா நடைபெற உள்ளது. காலை 10.30 நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தென்காசி, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
தென்காசி, ஆலங்குளம் அருகே மருதப்பபுரம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த சுடலைக்கண்ணு (61) விவசாயி. இவர் நேற்று குறிப்பன்குளம் சிற்றாற்றில் குளிக்க சென்ற போது ஆற்றில் தவறி விழுந்ததில் மூச்சுத்திணறி உயிரிழந்தார். தகவலறிந்த ஆலங்குளம் போலீசார் விவசாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுக்குறித்து போலீசார் விசாரணை.
தென்காசி மாவட்டம், கடையத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மூன்று பேரிடம் தலா 3 லட்சம் மோசடி செய்து தென்காசி மாவட்ட ஆட்சி தலைவரின் போலி கையொப்பமிட்டு ஆணை வழங்கிய விருதுநகரை சேர்ந்த நாகராஜந்திரகுமார் மற்றும் போலி ஆணை தயாரித்து வழங்கிய ரமேஷ் ஆகிய இருவரை கடையம் போலீசார் கைது செய்துள்ளனர். இது மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் செல்வகுமார் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சொக்கநாதன்பட்டி கிராமம் வழியாக பூலாங்குளம் வரை செல்லும் மினி பேருந்து வசதியினை இன்று ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ்பாண்டியன் துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அஞ்சாங்கட்டளை பஞ்சாயத்து தலைவர் முப்புடாதி பெரியசாமி, கிளைச் செயலாளர் ஆறுமுக பாண்டியன் உட்பட ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று (செப்.14) இரவு தென்காசி, புளியங்குடி சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது வாட்ஸ்அப்பில் RTO Traffic Challan.apk அல்லது SBI Aadhar Update.apk என்று தெரிந்த அல்லது தெரியாத நம்பரிலிருந்து பதிவிறக்கம் செய்வதற்கான apk file வந்தால் உடனடியாக அதை தவிர்த்து விடுங்கள். அதை பதிவிறக்கம் செய்தால் உங்கள் புகைப்படங்கள், வங்கி கணக்கில் இருந்து பணம் திருடு போவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இதுபோன்ற குற்றங்களில் சிக்கிக் கொண்டால் 1930 என்ற சைபர் குற்றப்பிரிவு எண்ணை அழைக்கலாம்.
அடைக்கலப்பட்டணத்தில் சிகிச்சைக்காக சென்ற சுப்பம்மாள் (67) உயிரிழந்ததால், மருத்துவர் சரவணகுமாரின் கிளீனிக்குக்கு சீல் வைக்கபட்டது. உறவினர்களின் புகாரின்பேரில், பாவூர்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து, சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் உத்தரவுப்படி, அனுமதியின்றி இயங்கிய கிளீனிக்கில் அடிப்படை வசதிகள் இல்லாததால் நேற்று சீல் வைக்கபட்டது.
தென்காசி மக்களே; மத்திய அரசின் புலனாய்வு துறையில் புலனாய்வு அதிகாரிக்கான காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு B.sc முடித்திருந்தால் போதும். இதற்கு மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <
தென்காசியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் தலைமை வகித்தார்.தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதி ராஜவேல் , முதன்மை சார்பு நீதிபதியும் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவருமான பிஸ்மிதா பங்கேற்றனர். 369 நீதிமன்ற வழக்குகளுக்கும், 92 நீதிமன்ற முன் வழக்குகளுக்கும் என மொத்தம் 471 வழக்குகளுக்கு தீர்வு காணபட்டது.
Sorry, no posts matched your criteria.