Tenkasi

News September 25, 2025

தென்காசி: வங்கியில் 3500 பேருக்கு வேலை… APPLY NOW!

image

தென்காசி மக்களே கனரா வங்கியில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள 3500 Graduate Apprentices பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தமிழகத்தில் 394 பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளது. இதற்கு மாதம் ரூ.15,000 வரை சம்பளம் வங்கப்படும். இதற்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து 12.10.2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடுறபவங்களுக்கு SHARE பண்ணுங்க.!

News September 25, 2025

தென்காசி: தொழிற்சாலை உரிமையாளர்கள் கவனத்திற்கு

image

தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் தமிழ்ச்செல்வன் விடுத்துள்ள செய்தி குறிப்பில்: நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் பதிவு பெற்ற தொழிற்சாலைகள் மற்றும் புதிய பதிவு செய்யும் தொழிற்சாலைகள் புதியதாக மேம்படுத்தப்பட்ட dish.tn.gov.in என்ற இணையத்தில் தொழிற்சாலை விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் உரிமத்தை புதுப்பிக்க அக்டோபர் 31ம் தேதி கடைசி நாள் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

News September 25, 2025

தென்காசி: செப்.29 வருங்கால வைப்பு நிதி 2.0 விழிப்புணர்வு

image

தென்காசி மாவட்டம், வீரசிகாமணி எம் எஸ் மதன் காம்ப்ளக்ஸ் வருகிற செப்.29ம் தேதி காலை 9 மணிக்கு வருங்கால வைப்புநிதி 2.0 விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் வைப்பு நிதி மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிலதிபர்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தினர் பங்கேற்கலாம் என வருங்கால வைப்பு நிதி ஆணையர் சிவ சண்முகம் தெரிவித்துள்ளார்.

News September 25, 2025

தென்காசி: கேஸ் புக் பண்ண புது வழி!

image

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARe பண்ணுங்க.

News September 25, 2025

தென்காசி: நர்சிடம் நகைபறிக்க முயன்ற ஆசிரியர்

image

தென்காசி, திருவேங்கடம் பகுதியை சேர்ந்த வசந்தா (நர்சு) இவர் நேற்று மைப்பாறை கோயிலுக்கு சென்றுபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் ஒருவர் வசந்தா அணிந்திருந்த 3 1/2 தங்க செயினை பறிக்க முயன்றார். வசந்தா கூச்சிலிடவை அக்கம்பக்கத்தினர் தப்பியோடிய மர்மநபரை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் விசாரணையில் பள்ளி உதவி தலைமையாசிரியர் பாண்டிதுரை டன் தொல்லையால் செயின் பறித்ததும் தெரியவந்தது.

News September 24, 2025

தென்காசி மாவட்டத்தில் இரவு ரோந்து பணி காவலர்கள்

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று(செப்.24) இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News September 24, 2025

தென்காசி மாவட்ட எஸ் பி அலுவலகத்தில் குறை தீர்க்கும் கூட்டம்

image

காவல் துணை ஆணையர் பிரசண்ணகுமார் (பொறுப்பு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் (செப்.24) இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களின் புகார்களை விரைந்து விசாரணை செய்திட சம்மந்தப்பட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News September 24, 2025

ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்

image

ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் மீது மொத்தமுள்ள 15 பேரூராட்சி உறுப்பினர்களில் 12 பேர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி கடந்த 10ந்தேதி மனு அளித்தனர். அதன்படி இதற்கான வாக்கெடுப்பு வருகிற அக்.9ந்தேதி காலை 11 மணிக்கு மன்றக்கூடத்தில் நடைபெறும் என பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி அறிவித்துள்ளார்.

News September 24, 2025

தென்காசி: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

image

தென்காசி மக்களே, உங்களை முன்னறிவிப்பின்றி வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம். அதன்படி, வீட்டு வேலை செய்பவர்கள் நலவாரியம் – 04428110147, கட்டுமான தொழிலாளர் நலவாரியம் – 044-28264950, 044-28264951, 04428254952, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் – 044-28110147. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

News September 24, 2025

தென்காசி: சென்னை ரயில் பயணிகளுக்கு குட் நீயூஸ்

image

தென்காசி பாவூர்சத்திரம் கடையம் வழியாக செங்கோட்டை சென்னை சென்ட்ரல் இடையே இன்று முதல் சிறப்பு ஏசி ரயில் இயக்கப்படுகின்றன. சென்னை செங்கோட்டை சிறப்பு ரயில் புதன்கிழமை தோறும் சென்னையில் இருந்தும் வியாழக்கிழமை தோறும் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும் இந்த வழித்தடத்தில் முதல்முறையாக அனைத்து பெட்டிகளும் முழு குளிர்சாதன வசதி பெட்டிகளாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!