India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மக்களே, இந்த மழைக்காலத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணி உதவுங்க.
காரைக்குடி மாநகராட்சியில் வரும் செப்டம்பர் மாதத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் மற்றும் தேதிகள் பின்வருமாறு. 09.09.25 – சங்கராபுரம் வார்டு 10,13,14,15 – பெரிச்சியம்மன் கோவில் அருகே சமுதாய கூடம். 16.09.25 & 17.09.25 – சங்கராபுரம் 9,11,12 – காந்தி நகர் சமுதாய கூடம். 23.09.25 – இலுப்பைக்குடி ஊராட்சி – லெட்சுமி நகர் சமுதாய கூடத்தில் நடைபெறுகிறது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கால்பிரவு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, இன்று காலை பள்ளிக்கு சென்றபோது, காரில் வந்த 6 பேர் கடத்திச் சென்றனர். பேருந்து நிலையம் அருகே மாணவி சண்டையிட்டு, காரில் இருந்து குதித்து தப்பினார். காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முகமூடி அணிந்த கடத்தல்காரர்கள் தப்பியதால், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்ட மக்களே உங்கள் மாவட்ட மக்கள் பிரதிநிதிகளின் செல்போன் எண்களை சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
▶️ சிவகங்கை எம்.பி – கார்த்தி ப.சிதம்பரம்- 9841016216
▶️காரைக்குடி எம்.எல்.ஏ – எஸ்.மாங்குடி – 94431 25801
▶️திருப்பத்தூர் எம்.எல்.ஏ – கே.ஆர்.பெரியகருப்பன் (அமைச்சர்) – 94433 68479
▶️சிவகங்கை எம்.எல்.ஏ -பி ஆர். செந்தில்நாதன்- 94433 73041
▶️மானாமதுரை எம்.எல்.ஏ- ஆ. தமிழரசி – 94444 91450
*SHARE IT*
சிவகங்கை மாவட்ட மக்களே உங்கள் மாவட்ட மக்கள் பிரதிநிதிகளின் செல்போன் எண்களை சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
▶️ சிவகங்கை எம்.பி – கார்த்தி ப.சிதம்பரம்- 9841016216
▶️காரைக்குடி எம்.எல்.ஏ – எஸ்.மாங்குடி – 94431 25801
▶️திருப்பத்தூர் எம்.எல்.ஏ – கே.ஆர்.பெரியகருப்பன் (அமைச்சர்) – 94433 68479
▶️சிவகங்கை எம்.எல்.ஏ -பி ஆர். செந்தில்நாதன்- 94433 73041
▶️மானாமதுரை எம்.எல்.ஏ- ஆ. தமிழரசி – 94444 91450
*SHARE IT*
ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக சிவகங்கை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. காரைக்குடி அருகே கல்லூர், கீழாநிலைக்கோட்டையில் நேற்று வாகன சோதனை மேற்கொண்ட போது, மினி லாரி ஒன்று தப்பி ஓடியது. 20 கி.மீ. தூரம் விரட்டிய போலீசார், கருவியபட்டி அருகே சென்ற போது லாரி கவிழ்ந்தது. லாரியை மீட்டு, 1.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். ஓட்டுநர் தப்பியோடியதால், அவரை தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் இன்று (10.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மக்களே நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். தொழிலாளர் இணை ஆணையர் – 04575-240521, தொழிலாளர் துணை ஆணையர் – 04575-240320 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் உதவி கிடைக்கும். உழைத்து வாழும் அனைவருக்கும் SHARE செய்யுங்க கண்டிபாக ஒருவருக்காவது உதவும்.
சிவகங்கை, நாட்டாக்குடி படுகொலையை கண்டித்து அதிமுக சார்பில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாத்து, கிரமத்திலிருந்து வெளியேறிய மக்களை மீண்டும் கிராமத்தில் குடியமர்த்த வலியுறுத்தி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் வெட்டிக்குளம் கிராமத்தில் மலை குளவி கடித்து 30 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். வெட்டிக்குளம் பாட்டையா கோவிலில் சாமி தரிசனத்திற்காக சென்றவர்களை மலை குளவி கடிதத்தில் பக்தர்கள் 30 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.