India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும், ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. *RAIL MADDED* என்ற அப்ளிகேஷனை இந்த <
சிங்கம்புணரி அருகே உள்ள நடு அம்மாச்சிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் குமார் கொத்தனார் (45) . திருப்பத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வேலை செய்யும் போது, அப்பகுதியில் உள்ள வசித்து வரும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை பார்வைத்திறன் குறைபாடுள்ளோருக்கான அரசு தொடக்கப் பள்ளியில் அந்த கல்வியாண்டிற்கு 1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கூடுதல் விவரங்களுக்கு பார்வைத்திறன் குறைபாடுள்ளோருக்கான அரசு தொடக்கப்பள்ளி, அம்பேத்கர் சிலை அருகில் என்ற முகவரியிலோ,7010498011,9894945457 என்ற அலைபேசி எண்களிலோ அல்லது 04575-240458 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, சுதந்திர தினத்தன்று வழங்கப்படும் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதிற்கு தகுதியுடைய நபர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக வருகின்ற 03.05.2025ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திடல் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று (ஏப்.17) தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கத்தில் கூடைப்பந்து பயிற்றுநருக்கான வேலைக்கு பயிற்சி பெற வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி வழங்கிட கூடைப்பந்து விளையாட்டில் சான்றிதழ் பெற்ற விளையாட்டு வீரர், வீராங்கணைகள் வருகின்ற 24.04.2025 அன்று சிவகங்கை விளையாட்டரங்கிற்கு நேரில் தேர்வுக்கு வருகை தர வேண்டும் என சிவகங்கை மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
மானாமதுரை: சிவகங்கை, மானாமதுரை பகுதி பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் பகல் நேரத்தில் சென்னைக்கு நேரடியாக ரயில் வசதி இல்லாததால், பேருந்துகளில் திருச்சிக்குச் சென்று, அங்கிருந்து ரயிலிலோ, பேருந்திலோ பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே சென்னையிலிருந்துகாரைக்குடி வரை தினசரி இயக்கப்படும் பல்லவன் விரைவு ரயிலை மானாமதுரை சந்திப்பு வரை நீட்டிக்க வேண்டும் என இப்பகுதி பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் உதவிக்காக தொலைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04575–240391,2403921,காவல் -100, விபத்து -108 ,தீ தடுப்பு – 101,குழந்தைகள் பாதுகாப்பு -1098, பாலின துன்புறுத்தல் தடுப்பு – 1091, குழந்தைத் தொழிலாளர் -55214, 1800 4252 650, ஆகிய உதவி எண்களில் அழைக்கலாம். *ஷேர் பண்ணுங்க
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் காலியாக உள்ள குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் tnrd.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். அரசு வேலை தேடும் உங்க நண்பருக்கு இதை SHARE செய்யவும்.
சிவகங்கை மக்களே கொளுத்தும் கோடை காலத்தில் நண்டு, சிக்கன், இறால் போன்ற அசைவ உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காபி, டீ அடிக்கடி குடிப்பதை குறைத்து கொள்ள வேண்டும். ‘பாஸ்ட் புட்’ உணவுகளை தவிர்க்க வேண்டும். கோதுமை,மைதாவினால் செய்யப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. இவையெல்லாம் உடல் வெப்பத்தை உண்டாக்கி உடலுக்கு கேடு விளைவிக்கும். *SHARE !!
காரைக்குடி ‘சிக்ரியில்’ மாணவர்களுக்கான ஒரு நாள் விஞ்ஞானி நிகழ்ச்சி மே 13 முதல் 17 வரை நடக்கிறது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் ‛https://jigyasa-csir.in/ என்ற இணையதளத்தில் ஏப். 28 முதல் மே 2 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் மாணவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட தேதியில் மட்டுமே காரைக்குடியில் ‘சிக்ரியில்’ பங்கேற்க அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.