Sivagangai

News August 13, 2025

சிவகங்கை: உதவி எண்கள் SAVE IT..!

image

தமிழக அரசு அறிவித்துள்ள இந்த உதவி எண்களை SAVE பண்ணி வச்சிக்கோங்க
▶️ குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶️ பெண்கள் பாதுகாப்பு – 191
▶️ காவல் மற்றும் ஆம்புலன்ஸ் – 112
▶️ இணைய பாதுகாப்பு – 1930
தேவையான அவசர காலங்களில், இந்த எண்களை தொடர்பு கொண்டால் உடனடியாக உதவி கிடைக்கும். இந்த தகவலை SHARE பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க..!

News August 13, 2025

சிவகங்கை: மதுபான கடைகள் மூடல்

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக.15ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், FL2, FL3 உரிமம் பெற்ற கிளப், ஹோட்டல்கள், மது அருந்தும் கூடங்கள் முழுவதுமாக மூடப்படும். மேலும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

News August 13, 2025

விநாயகர் சதுர்த்தி – ஆட்சியர் அறிவுறுத்தல்

image

சிவகங்கை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வழிகாட்டுதல்களின் படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாத்திட ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

News August 13, 2025

சிவகங்கை: 96 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை

image

தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி என்ற பொதுத்துறை நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 550 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு இளங்கலை முடித்திருந்தால் போதும். இதற்கு மதுரை, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும். இதில் 50,925 முதல் 96,765 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்த <>*லிங்கை<<>> கிளிக் செய்து ஆக.30க்குள் விண்ணப்பிக்கவும்.

News August 13, 2025

சிவகங்கை: இது முக்கியம்.. உடனே பண்ணுங்க.!

image

மத்திய அரசு ‘சஞ்சார் சாதி’ எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மோசடி, தொலைந்து போன அல்லது திருடு போன, மொபைல் இணைப்புகளை கண்டறிய, டிஜிட்டல் மோசடி குறித்து இந்த ஆப்-ல் புகார் அளிக்கலாம். இந்த ஆப் மூலம் திருடு போன லட்சக்கணக்கான போன்கள் கண்டுபிடிக்கப்பட்டும், மோசடிகளுக்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆப் நாம் எல்லாருக்கும் மிக மிக அவசியம். உடனே இந்த <>*லிங்கை<<>> கிளிக் செய்து டவுன்லோட் பண்ணுங்க.!

News August 13, 2025

சிவகங்கை: நாளை இங்கெல்லாம் மின்தடை

image

சிவகங்கை மாவட்டத்தில் நாளை (ஆக.14) பெரும்பாலான இடங்களில் மின்தடை செய்யப்பட்ட உள்ளது. திருப்புவனம், புதூர், பழையூர், செல்லப்பனேந்தல், லாடனேந்தல், அல்லி நகரம், கீழராங்கியம், வயல்சேரி, கலியந்தூர், மேலவெள்ளூர், கீழவெள்ளூர், மாங்குடி, மணலூர், மடப்புரம், பூவந்தி, வடகரை, புலியூர், கொந்தகை, கீழடி, காஞ்சிரங்குளம், திருப்பாச்சேத்தி, பழையனூர், மாரநாடு, முதுவந்திடல் உள்ளிட்ட பகுதிகளில் 10-5 மணி வரை மின்தடை.

News August 13, 2025

சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (12.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 12, 2025

சிவகங்கை: இந்த எண்களை SAVE பண்ணுங்க..!

image

சிவகங்கை மாவட்ட தீயணைப்பு துறை எண்கள்:
▶️சிவகங்கை – 04575240301
▶️தேவகோட்டை – 04561272200
▶️மானாமதுரை – 04574258599
▶️காரைக்குடி – 04565221101
▶️திருப்பத்தூர் – 04577 266245
▶️சிங்கம்புணரி – 04577242225
▶️இளையான்குடி – 04564245101
▶️புதுவயல் – 04565282899
தீ விபத்து போன்ற அவசர உதவி தேவைப்படும் காலங்களில் இந்த நம்பர்க்கு CALL பண்ணுங்க. SHARE IT..!

News August 12, 2025

சிவகங்கை பெண்களே டவுன்லோடு பண்ணுங்க..!

image

தமிழக காவல்துறை சார்பில் காவல் உதவி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் பொது இடங்களில் ஏதேனும் சிக்கலில் மாட்டிக்கொண்டாலோ அல்லது அவசர காலங்களில் செயலியில் உள்ள சிவப்பு நிற ”அவசரம்” பொத்தானை அழுத்தினால், உங்கள் விவரம், இருப்பிடம் ஆகியவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும். இதன் மூலம் துரிதமாக உதவி கிடைக்கும்.<> இங்க கிளிக் பண்ணி<<>> செயலியை டவுன்லோடு பண்ணிக்கோங்க. இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News August 12, 2025

தமிழகத்தில் 207 அரசு பள்ளிகளுக்கு பூட்டு

image

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆனதால் அப்பள்ளிகள் மூடப்பட்டு வருகிறது இதில் எத்தனை மாவட்டங்களில் எத்தனை பள்ளிகள் மூடப்பட்டன என்று பட்டியல் வெளியாகியுள்ளது அதில் நீலகிரியில் -17, சிவகங்கை -16 , திண்டுக்கல் -12 , சென்னை -10 , ஈரோடு -10, மதுரை -10 ,கோவை-9 உட்பட மாவட்டங்கள் ரீதியாக 207 அரசு பள்ளிகள் மூடப்பட்டது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!