Sivagangai

News April 22, 2025

விவசாயிகள் குறைதீர் கூட்ட தேதி அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 25.04.25 அன்று முற்பகல் 10.00 மணியளவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்

News April 22, 2025

சிவகங்கை மாவட்ட வட்டாட்சியர்கள் எண்கள்

image

▶️வட்டாட்சியர், சிவகங்கை -9445000650
▶️வட்டாட்சியர்,மானாமதுரை – 9445000651
▶️வட்டாட்சியர்,இளையான்குடி – 9445000652
▶️வட்டாட்சியர், திருப்புவனம் -9788531396
▶️வட்டாட்சியர், காளையார்கோவில் -9843358548
▶️வட்டாட்சியர், தேவகோட்டை -9445000649
▶️வட்டாட்சியர், காரைக்குடி -9445000648
▶️வட்டாட்சியர் திருப்பத்தூர் -9445000647
▶️வட்டாட்சியர், சிங்கம்புணரி -9994373175

*பிறரும் பயன்பெற ஷேர் பண்ணுங்க

News April 22, 2025

டிராக்டர் கவிழ்ந்து விவசாயி சம்பவ இடத்திலேயே பலி

image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள செல்லப்பநேந்தல் கிராமத்தைச் சேர்ந்த அய்யம்போஸ் என்ற விவசாயி தனது டிராக்டரில் திருப்புவனம் சென்றுவிட்டு தனது கிராமத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது கால்வாய் அருகே எதிர்பாராத விதமாக டிராக்டர் கவிழ்ந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். திருப்புவனம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News April 22, 2025

கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி

image

சிவகங்கை மாவட்ட விளையாட்டு மேம்பட்ட ஆணையத்தின் சார்பாக 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு உறைவிடம் சாராத இலவச பயிற்சி 21 நாட்கள் வழங்கப்பட இருக்கிறது. வரும் 25ஆம் தேதி முதல் மே மாதம் 15 ஆம் தேதி வரை இதில் தடகளம், கால்பந்து, கபடி ஹாக்கி ,கூடைப்பந்து போட்டிகள் சிவகங்கை விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் மாலை 4.30 – 6.30 மணி வரையிலும் பயிற்சி நடைபெறும்

News April 22, 2025

திருக்கோஷ்டியூர் மஞ்சுவிரட்டில் வயதான மூதாட்டி

image

திருக்கோஷ்ட்டியூர் ஶ்ரீ வடக்கு வாசல் செல்வி அம்மன் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நேற்று (21-04-2025), திருக்கோஷ்டியூரில் நடந்த மஞ்சுவிட்டில் இளையாத்தங்குடியை சேர்ந்த மூதாட்டி ஒருவர், தன் சொந்த காளையை தானே போட்டியில் அவிழ்த்துவிட கொண்டு வந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

News April 21, 2025

குறைதீர் கூட்டத்தில் 514 மனுக்கள் பெறப்பட்டன

image

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், தலைமையில் நடைபெற்றது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 514 மனுக்கள் பெறப்பட்டன.

News April 21, 2025

சிவகங்கையில் 25ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் 

image

சிவகங்கை மாவட்ட வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வருகின்ற 25.04.2025 அன்று, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில், வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News April 21, 2025

சிவகங்கை: வேலைவாய்ப்பு முகாம் தேதி அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுலகத்தில் வருகின்ற 25ஆம் தேதி காலை 10:30 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் வேலை வழங்கும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே வேலை நாடுவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க 

News April 21, 2025

சிவகங்கை மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலங்கள் – 2

image

▶️தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில்
▶️மடப்புரம் காளி கோயில்
▶️பிள்ளையார்பட்டி குபேரன் கோயில்
▶️திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில்
▶️சொக்கநாதபுரம் ப்ரித்யங்கரா தேவி ஆலயம்
▶️மருது பாண்டியர்கள் நினைவு இடம்
▶️கொள்ளங்குடி வெட்டுடைய காளியம்மன் கோயில்
▶️பிரான்மலை
*நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க. <<16146331>> பாகம் – 1 <<>>
(உங்களுக்கு தெரிந்த சுற்றுலா தளங்களை நீங்கள் கூறலாம்)

News April 21, 2025

சிவகங்கை மாவட்ட பெண்கள் கவனத்திற்கு

image

சிவகங்கை: பெண்கள் தங்களின் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் நேரடியான மற்றும் மறைமுகமான பிரச்னைகளை கருத்தில் கொண்டு women helpline – 181 என்ற சேவை செயல்பட்டு வருகிறது. அதில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளான பாலியல் தொந்தரவு, வரதட்சனை கொடுமை, மன அழுத்தம் போன்றவைகளுக்கு மருத்துவம் மற்றும் சட்ட ரீதியான ஆலோசனைகளை வழங்குவர். (இதில் பகிரப்படும் செய்திகள் பாதுகாக்கப்படும்) *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!