India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செகந்திராபாத்தில் இருந்து ராமநாதபுரத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 07695) இயக்கப்படுகிறது. புதன்கிழமை தோறும் செகந்திராபாத்தில் இருந்து புறப்படும் ரயில் காரைக்குடிக்கு வியாழக்கிழமை இரவு 8.30-க்கு சென்றடையும். தொடர்ந்து சிவகங்கை (இரவு 9.13), மானாமதுரை (இரவு 9.40), ராமநாதபுரம் (இரவு 10.28) வழியாக ராமேஸ்வரத்துக்கு நள்ளிரவு 12.15க்கு சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கால்பந்துக் கழகம் சார்பில் 20ஆம் ஆண்டு கோடைகால இலவச கால்பந்து பயிற்சி முகாம் சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் நாளை தொடங்குகிறது. மே 25ஆம் தேதி வரை காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை என இரு வேளைகளிலும் இதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பங்கேற்க 8675216868 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கால்பந்து கழகச் செயலா் சிக்கந்தா் தெரிவித்துள்ளார்.
எஸ்.எஸ் கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் வீட்டுப்பாடம் செய்யாமல் பள்ளிக்கு வந்த 7ம் வகுப்பு மாணவியை 400 முறை தோப்புக் கரணம் போடச் செய்த அரசுப்பள்ளி ஆசிரியை சித்ராவுக்கு ரூ.2 இலட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாணவியின் தாயார் தொடர்ந்த வழக்கில், அபராத தொகையை ஆசிரியை சித்ராவிடம் இருந்து வசூலிக்கவும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இக்காளைக்கு பிறந்ததிலிருந்தே வால் வளராமல் குட்டையாக இருந்ததால் மொட்டுவால் மாடு என்ற பெயர் வந்தது. இப்பகுதி மஞ்சுவிரட்டில் கம்பீரமாக பிடிபடாமல் 12 வருடங்களாக வலம் வந்தது. இக்காளை வயது முதிர்வு காரணமாக இறந்த பின், திருக்கோஷ்டியூர் வடக்கு தெரு மக்கள், காளைக்கு சிலை எழுப்பி கோயில் கட்டி தெய்வமாய் வணங்கி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஒன்பதாவது வார்டு தேனம்மை ஊரணி நகராட்சி தொடக்க பள்ளியில் ஏப்ரல்.24 ஆம் தேதி வியாழக்கிழமை முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வியாழக்கிழமை வரை (ஒரு வாரத்திற்கு) தபால் துறை சார்பாக நடத்தும் குழந்தைகளுக்கான இலவச ஆதார் அட்டை எடுக்கும் முகாமநடைபெற உள்ளது. (ஞாயிற்றுக்கிழமை மட்டும் விடுமுறை) *ஷேர் பண்ணுங்க
சிங்கம்புணரி அரசு பள்ளி மாணவி வீட்டு பாடம் செய்யாமல் வந்ததால், ஆசிரியை, 400 தோப்புக்கரணம் போட வைத்துள்ளார். இதனால், மாணவியின் உடல்நலம் பாதித்ததாக, மாணவியின் தாயார், மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். 2017ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த மனித உரிமைகள் ஆணைய குழு, மனுதாரருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும், அதை ஆசிரியையிடம் இருந்து வசூல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்ட திட்ட அலுவலரின் கீழ் கட்டுப்பாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்களில் 4 பணியாளர், 29 உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே (ஏப்.23) கடைசி நாள். www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 – 24200, உதவியாளருக்கு ரூ.4100 – 12500 வரை வழங்கப்படும். *ஷேர் பண்ணுங்க*
சிவகங்கை மாவட்டத்தில் செம்மொழிநாள் விழாவினை முன்னிட்டு, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் 11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணாக்கர்களுக்கு 09.05.2025 அன்றும், கல்லூரி மாணாக்கர்களுக்கு 10.05.2025 அன்றும் சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகக் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதில் மாணவர்கள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் காவல் சார்பு ஆய்வாளர்கள் (SI) பொதுத் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகின்ற 25.04.2025 முதல் சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. மேலும், இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்புவோர் 04575-240435 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறையின் கீழ், ஜே.சி.பி இயந்திரங்களை இயக்குவதற்கு தகுதியுடைய திறன் பெற்ற விருப்பமுள்ள ஓட்டுநர்கள், சிவகங்கை மற்றும் காரைக்குடியிலுள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவகத்தினை 9080230845 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.