India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு வருவாய்த் துறையில் 2,299 கிராம உதவியாளர் (தலையாரி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிவகங்கைக்கு 46 காலிப் பணியிடங்கள் உள்ளது.இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 4 கடைசி நாளாகும்.இப்பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், தமிழில் எழுத/படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மாத சம்பளம்:ரூ.11,100 முதல் 35,100 வரை வழங்கப்படும். சைக்கிள்/ டூவீலர் ஒட்டத் தெரிந்தால் கூடுதல் மதிப்பெண்.<<16974387>>மேலும் அறிய.<<>>
சிவகங்கை மாவட்டத்தில் 46 கிராம உதவியாளர் பணிக்கு காலிபணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
▶️விண்ணப்த்தாரர்களுக்கு திறனறிவு தேர்வு, நேர்காணல் ஆகியவை நடத்தப்படும்.
▶️அனைவரும் கட்டாயம் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
▶️மேலும், தேர்வர்கள் அப்பகுதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
▶️ விவரங்களுக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலகம் மற்றும் அருகேயுள்ள தாலுகா அலுவலகத்தை நேரில் அணுகலாம்.
மடப்புரம் கோயில் தற்காலிக ஊழியர் அஜித்குமார் மீது புகார் கொடுத்த நிகிதா இன்று (ஜூலை 6) தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் காணாமல் போனது என் அம்மாவின் நகை தான், அவர் வயதானவர். மேலும், அவரால் காவல் நிலையத்திற்கு அடிக்கடி அலைய முடியாது என்பதால் தான் நான் புகார் எழுதிக் கொடுத்தேன். காணாமல் போன நகை தனது தாயார் உடையது என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியைச் சேர்ந்த கோபிநாத் தனது குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று தேவகோட்டை வட்டம் புளியால் அருகே சிலை மாநாடு என்ற இடத்தில் காரை ஓட்டி வரும்போது கார்நிலை தடுமாறி சாலையின் ஓரமாக பள்ளத்தில் கவிழ்ந்தது. அருகில் இருந்தவர்கள் அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் கோபிநாத் தாயார் உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் வரும் ஜூலை 15 முதல் செப்டம்பர் 2025 மூன்றாம் வாரம் வரை மொத்தம் 215 முகாம்கள் மூன்று கட்டங்களாக காரைக்குடி மாநகராட்சியில் 27 முகாம்களும், சிவகங்கை, தேவகோட்டை, மானமதுரை ஆகிய நகராட்சிகளில் 31 முகாம்களும், 22 பேரூராட்சிகளில் 11 முகாம்களும் 12 சாதாரண ஊராட்சிகளில் 129 முகாம்களும் 3 புறநகர் ஊராட்சிகளில் 6 முகாம்களும் நடைபெற உள்ளது.
கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில், மிகவும் சக்தி வாய்ந்த கோயில்களில் ஒன்றாகும். இங்குள்ள சத்ரு சம்ஹார வேல் கோயிலின் சிறப்பு. கடன், பிணி நீங்க, எதிரிகள் தொல்லை அகல, ராகு தோஷம் விலக இங்கு வழிபடலாம். பேசாத குழந்தைகள் பேச, பிரிந்த குடும்பத்தினர் ஒன்று சேர, நீதி பெறவும் இக்கோயில் பிரசித்தி பெற்றது. இதை *SHARE* பண்ணுங்க.
சிவகங்கை மக்களே இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6238 டெக்னீசியன் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10,12, ஐடிஐ முடித்தவர்கள் இந்த லிங்க் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.19,900 முதல் ரூ.92,300 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ஜூலை 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க மத்திய அரசு வேலையை வாங்குங்க.
முன்னொரு காலத்தில் கண்டதேவி அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகள் வறட்சி மிகுந்த நிலையில் விவசாயம் இல்லாமல் பஞ்சத்தில் இருந்தது. எனவே இப்பகுதி மக்கள் இக்கோயில் உள்ள இடத்தில் கூடி பிரார்த்திக்க பொன் பொழிந்தது. பொன்னுக்கு மற்றொரு சொல் சொர்ணம். எனவே இக்கோவிலில் உள்ள சுவாமி சொர்ணமூர்த்தி என அழைக்கப்பட்டார் என்பது வரலாறு. இக்கோவில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட கோயிலாகும்.
சிவகங்கை மாவட்டத்தில் இன்று (05.07.25) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் சார்பாக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியை சேர்ந்த அதிகாரிகளின் நம்பர் குறிப்பிடப்பட்டுள்ளது. அல்லது 100 டயல் செய்யலாம். அவசர காலத்திற்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அழைக்கலாம்.
சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் எவரும் பணி புரிவது கண்டறியப்பட்டால் Pencil Portal https://pencil.gov.in முகவரியிலோ 04575-240521 அல்லது Child Help line 1098 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம், அரசினிப்பட்டி ரோடு, காஞ்சிரங்கால், சிவகங்கை என்ற முகவரியிலோ புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.