Sivagangai

News March 15, 2025

கொலை செய்ய சதி – சுற்றி வளைத்த போலீசார்

image

காரைக்குடி உட்கோட்ட போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பள்ளத்தூர், கோட்டையூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் காரைக்குடி பகுதியில் மார்ச்.18 அன்று நடைபெறவுள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் பழிவாங்கும் நோக்கில் ஒரு கொலை செய்ய ஒரு கும்பல் திட்டமிட்டிருந்த கூலிப்படையினரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

News March 15, 2025

சிவகங்கைக்கு வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள்

image

சுவைதாளிதப் பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்கவும், இராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் 2,500 ஏக்கரில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடியை மேற்கொள்ளவும் ரூ.11.74கோடி ஓதுக்கிடு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து உங்க கருத்துகளை கீழே பதிவிடுங்கள் .

News March 15, 2025

பிரான்மலை உச்சிக்கு செல்ல ரோப் கார் தேவை

image

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே பிரான்மலை உச்சிக்கு  தினமும் ஏராளமான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் செல்லும் நிலையில் இதன் உயரமும் தூரமும் பலருக்கு பெரும் தடையாக உள்ளது. குறிப்பாக வயதானவர்கள் மலையில் ஏறுவது சிரமமான காரியமாக உள்ளது. இம்மலை உச்சிக்குச் சென்றுவர ரோப் கார் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என பக்தர்களும் சுற்றுவட்டார மக்களும் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

News March 15, 2025

மடப்புரம் கோயிலில் ரூ. 34 லட்சம் காணிக்கை

image

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று உண்டியல் எண்ணும் பணி நடந்தது.40 நாட்களுக்கு ஒரு முறை பக்தர்கள் காணிக்கை செலுத்திய ஒன்பது உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படும், அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் கவிதா தலைமையில் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் 33 லட்சத்து, 28 ஆயிரத்து 574 ரூபாய், 150 கிராம் தங்கம், 418 கிராம் வெள்ளியும், காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.

News March 14, 2025

அரசு பஸ்சில் கூடுதல் கட்டணம்-பயணிகள் அதிருப்தி

image

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிவகங்கை, திருப்புத்துார், காரைக்குடிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சிவகங்கையிலிருந்து திருக்கோஷ்டியூருக்கு செல்ல அரசு பஸ்சில் ரூ.20 மட்டுமே வசூலிக்கப்படும். ஆனால் நேற்று திருக்கோஷ்டியூருக்கு பஸ்சில் ரூ.30 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதிகாரி விழா கால சிறப்பு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது வாடிக்கை தான் என்றார்.

News March 13, 2025

முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மாற்றம்

image

சிவகங்கை மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் / படைப்பணியாற்றுவோர் / சார்ந்தோர்களின் நலனுக்காக இயங்கி வரும் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகம் வரும் 15.03.2025 முதல் சிவகங்கை நகர் காவல் நிலைய பேருந்து நிறுத்தத்திற்கு அருகாமையில் உள்ள சத்தியமூர்த்தி தெருவில் இயங்கிட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று (மார்ச்.13) தெரிவித்துள்ளார்.

News March 13, 2025

விவசாயிகள் குறைதீர் கூட்ட தேதி அறிவிப்பு

image

மார்ச் மாத இரண்டாம் வாரத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 18ஆம் தேதி காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்துத் துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளைத் தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். Share It.

News March 13, 2025

பிளஸ் 1 பொதுத்தேர்வு மையத்தில் தலைமையாசிரியரிடம் லேப்டாப்

image

மணலுார்,சுற்று பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 249 பேர் தேர்வு எழுதி வருகின்றனர்.
நேற்று முன்தினம் பிளஸ் 1 ஆங்கில பாட தேர்வு நடந்த போது பறக்கும்படை கண்காணிப்பாளர் தலைமையில் மணலுார் பள்ளியில் சோதனை செய்தனர்.அப்போது ஜெயக்குமார் பொதுத்தேர்வை கண்காணிக்காமல் லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து பறக்கும்படையினர் லேப்டாப்பை பறிமுதல் செய்து அவரை தேர்வு பணியில் இருந்து விடுவித்தனர்.

News March 12, 2025

சிவகங்கையில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழை

image

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி சிவகங்கை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர்

News March 12, 2025

அரசு பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் சஸ்பெண்ட்

image

மானாமதுரை அருகே கல்குறிச்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்த சத்தியா மற்றும் ராஜா ஆகியோர் கணித ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பள்ளியில் தவறாக நடந்து கொண்டதாகவும், மாணவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தியதாகவும், பள்ளித் தலைவருக்கு எதிராகச் செயல்பட்டதாகவும் புகார்கள் எழுந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!