Sivagangai

News April 28, 2025

சிவகங்கை மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள்(BDO) எண்கள்

image

மானாமதுரை -7402608358
இளையான்குடி -7402608360
திருப்புவனம் -7402608359
தேவகோட்டை -7402608361
கண்ணங்குடி -7402608362
கல்லல் -7402608375
சாக்கோட்டை -7402608364
திருப்பத்தூர் -7402608365
*ஷேர் பண்ணுங்க

News April 27, 2025

சிவகங்கையில் திமுக மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை

image

சிவகங்கையில் திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளராக உள்ள பிரவீன் குமார் என்பவரை மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளனர். பிரவீன்குமார் சாமியார்பட்டியில் உள்ள தனது தோப்பில் இருந்தபோது மர்ம கும்பல் வெறிச் செயலில் ஈடுபட்டுள்ளனர். அவரது உடல் சிவகங்கை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News April 27, 2025

சிவகங்கை ரயில் நிலையத்தில் வேலை வாய்ப்பு

image

சிவகங்கை இரயில் நிலையத்தில் முன்பதிவில்லா பயணச் சீட்டுகளை எளிமையாக பெற தானியங்கி பயணச்சீட்டு இயந்திரம் ATVM (Automatic Ticket Vending Machine) அமைக்கும் பணி மற்றும் இந்த இயந்திரத்தை இயக்குபவர்கள் இரண்டு (Facilitators) ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்படும் என தெற்கு இரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. தகுதியுள்ளவர்கள் மதுரை கோட்டத்தில் விண்ணப்பிக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.

News April 26, 2025

நகரத்தார் குலதெய்வ வழிபாடு வரலாறு

image

காரைக்குடி, சிவகங்கை, கீழச்செவல்பட்டி சுற்றியுள்ள நகரத்தார் ஆண்டுதோறும் சித்திரை மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை பாரம்பரிய முறைப்படி சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் குலதெய்வ வழிபாடு செய்வார்கள். அதற்காக 54 மாட்டு வண்டிகளில் நான்கு நாட்களுக்கு முன்பே ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு சென்று வழிபட்டு திரும்பவும் மாட்டு வண்டியிலேயே தங்களது ஊர்களுக்கு வந்து சேர்வது வழக்கம்.

News April 26, 2025

சிவகங்கை மாவட்டத்தில் சத்துணவு உதவியாளர் பணி

image

சிவகங்கை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 427 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு நியமனம் செய்யப்படவுள்ளது, பணியாளர்களுக்கு ஓராண்டு கால பணிக்கு பின் சிறப்பு காலமுறை ஊதியத்தில் (ஊதிய நிலை 1 (Level of Pay – ரூ.3000-9000)) ஊதியம் வழங்கப்படும். இதற்கு 21 – 40 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணபிக்கலாம். விண்ணபிக்க இன்றே கடைசி நாள் (ஏப்ரல்.26) லிங்க் *ஷேர் பண்ணுங்க

News April 26, 2025

சிவகங்கை: ஓட்டுநர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்ட வேளாண்மை பொறியியல் துறையின் கீழ் 22 ஜேசிபி இயந்திரங்களை இயக்குவதற்கு, தகுதியுடைய, திறன் பெற்ற ஓட்டுநர்கள் தேவைப்படுகின்றனர். கனரக உரிமம், நல்ல உடல் தகுதி இருக்க வேண்டியது அவசியம். சிவகங்கை & காரைக்குடியில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு பயன் பெறலாம், அல்லது 9080230845 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன்படலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News April 26, 2025

போதையில் தலையில் கல்லை போட்டு கொன்ற இளைஞர்

image

இளையான்குடி அருகே விவசாயி சிவசாமி(45) & தங்கச்சாமி(26). இவர்கள் இருவரும் கடந்த புதன்கிழமை ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர். அப்போது, இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதையடுத்து, தூங்கி கொண்டிருந்த சிவசாமியின் தலை மீது தங்கச்சாமி பெரிய கல்லை போட்டார். இதில் படுகாயமடைந்த அவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, (வியாழன்) உயிரிழந்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தங்கச்சாமியை கைது செய்தனர்.

News April 25, 2025

சிவகங்கையில் உள்ள ராகு கேது பரிகார ஸ்தலம்

image

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாகமுகுந்தன் நாகநாதசுவாமி கோயில் ராகு கேது பரிகார ஸ்தலாமாக விளங்குகிறது. இக்கோயிலில் நாகநாதர், செளந்தரநாயகி சன்னதியும், பிள்ளையார், முருகன், சூரியன், பைரவர் உப சன்னதிகளும் உள்ளன. ராகு கேது தோஷங்களுக்கு பரிகாரம் செய்ய கோயிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. ராகு கேதுவின் தியானம் செய்வது ராகு கேதுவின் அருள் பெற உதவும் என்று கூறப்படுகிறது.

News April 25, 2025

சிவகங்கை: உதவி லோகோ பைலட் பணி – மதுரை கோட்டம் அறிவிப்பு

image

மதுரை ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ X தளப்பக்கத்தில், இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பை வௌியிட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் 510 காலிப்பணியிடங்கள் உள்ளது. மாத ஊதியமாக ரூ.19,900 வழங்கப்படும். இதற்கு ஏப்.12 முதல் மே 11 வரை ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். *சிவகங்கை மக்களே மறக்காமல் அப்பளை பண்ணுங்க*

News April 25, 2025

செம்மொழி நாளையொட்டி கட்டுரை, பேச்சு போட்டிகள்

image

செம்மொழி நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர், மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகிற மே 9, 10-ஆம் தேதிகளில் சிவகங்கை மருதுபாண்டியா் நகா், அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் வருகிற ஏப். 30- ஆம் தேதிக்குள் நேரில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!