India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை: கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திருப்பத்தூர் தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக, அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மீது கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் பெரியகருப்பன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அமைச்சர் மீதான வழக்கை இன்று ரத்து செய்து உத்தரவிட்டார்
காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் Junior Stenographer, Secretariat Assistant ஆகிய பணிகளுக்கு மொத்தம் 10 காலிபணியிடங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த வேலைக்கு விண்ணபிக்க 28 வயது மிகாமல் இருப்பது கட்டாயம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 18-03-2025. 12ம் வகுப்பு முடித்த தகுதியான நபர்களுக்கு ரூ.19,900 முதல் ரூ.81,100 வரை சம்பளம் கிடைக்கும். <
காரைக்குடி மீனாட்சி புரத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் வருடாந்திர மாசி பங்குனித் திருவிழா கடந்த 10 நாட்களாகக் கோலாகலமாக நடைபெற்றது. முத்துமாரியம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள் செக்காலை சாலையில் உள்ள பஜார் பள்ளிவாசல் அருகே செல்லும் போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், இஸ்லாமிய மக்கள், பக்தர்களுக்குத் தண்ணீர் தெளித்து நனையச் செய்து அவர்களின் சிரமத்தைக் குறைத்தனர்.
ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர் அப்பாராவ் என்கிற கொண்டக்காரி சுக்கா 60. 20 ஆண்டுகளுக்கு முன் புதுச்சேரி சென்றபோது ராமேஸ்வரம் ரயிலில் மாறுதலாக ஏறி சிவகங்கை வந்தார். 20 ஆண்டுகளுக்கு மேலாக அண்ணாதுரை என்பவரது தோட்டத்தில் கொத்தடிமையாக இருந்துள்ளார். தற்போது இவரைத் தொழிலாளர் உதவி ஆணையர் முத்து தலைமையிலான குழுவினர் மீட்டு அவருக்கு ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் நிதி வழங்கினர்..
காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் மார்ச்.18ஆம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த பயணிகள் பேருந்து ரிங் ரோடு அருகில் லாரி, வேன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சிவகங்கையை சேர்ந்த ஸ்டெல்லா செல்வி 58, என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பேருந்தில் பயணித்த 22 பயணிகள் படுகாயம் அடைந்த மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து சிலைமான் போலீசார் விசாரணை
இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, அக்னி வீரர் டெக்னிக்கல், அக்னி வீரர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு இங்கே <
இளையான்குடி ஊராட்சி தாயமங்கலம் கிராமத்திற்கு உட்பட்ட உலக எண் 73 ல் உள்ளடக்கிய பகுதியில் திருவிழா தற்காலிக கடைகள் ராட்டினங்கள் சர்க்கஸ் மற்றும் வாகன நுழைவு கட்டணம் வசூல் செய்யும் உரிமை குத்தகைக்கு விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பொது ஏலத்தில் கலந்து கொள்பவர் வருமான வரி கணக்கு எண் கொடுத்து தனி அலுவலர் என ரூ.30 ஆயிரத்திற்கு டிடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்ன அறிவித்துள்ளார்
புருரூப சக்கரவர்த்தி இத்தலத்தை திருப்பணி செய்தபோது மகாமகம் பண்டிகை வந்தது. அப்போது பெருமாளை தரிசிக்க விரும்பினார் புருரூபர். அவருக்காக இத்தலத்தில் ஈசான்ய திசையில் உள்ள கிணற்றில் கங்கை நதி பொங்க, அதன் மத்தியில் பெருமாள் காட்சி தந்தார்.பிரகாரத்தில் உள்ள இந்த கிணற்றை மகாமக கிணறு என்றே அழைக்கிறார்கள்.12 வருடங்களுக்கு ஒரு முறை மகாமக விழாவின்போது சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி செய்கிறார்.
சிவகங்கை மாவட்டத்தில் 11 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 10 ரவுடிகள் மற்றும் 1 பாலியல் வழக்கில் ஈடுபட்ட நபர் அடங்குவர். இதில் குறிப்பிடப்படும் படியாக மேலப்பிடாவூரைச் சேர்ந்த அய்யாசாமி என்ற கல்லூரி மாணவனை தாக்கிய நபர்களில் இருவர் மீது குண்டர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.