India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய சிவகங்கை மாவட்டப் பிரிவு சாா்பில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் வருகிற 1.4.2025 முதல் 8.6.2025 வரை 5 கட்டங்களாக சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெறவுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அரங்கத்தை 04575 299293 என்ற தொலைபேசி எண்ணிலும், மாவட்ட விளையாட்டு அலுவலரை 74017 03503 என்ற கைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
இளையான்குடி அருகே விஜயன்குடி கிராமத்தில் 100க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கிருந்து சிவகங்கை செல்லும் ரோடு 15 ஆண்டாக சீரமைக்கப்படாமல் உள்ளதால் ரோடு முழுவதும் கரடு,முரடாக கற்கள் சிதறி காணப்படுகிறது. அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில், தற்போது ஊரை காலி செய்து வேறு இடத்திற்கு செல்வதை தவிர வேறு வழியில்லை என்று ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்
கற்பக விநாயகர் கோயில்
சிவகங்கை மாரியம்மன் கோயில்
காசி விஸ்வநாதர் கோயில்
குன்றக்குடி முருகன் கோயில்
வேட்டங்குடி மாரியம்மன் கோயில்
திருமயம் பெருமாள் கோயில்
திருப்பாச்சேத்தி அம்மன் கோயில்
ஸ்ரீ கல்யாண பசுவதீஸ்வரர் கோயில்
பழமலை நாதர் கோயில்
புதுவயல் பிள்ளையார் கோயில்
சாக்கோட்டை பெரியநாயகி கோயில்
மும்முடி நாதர் கோயில்
பரஞ்சோதி ஈஸ்வரர் கோயில்
கொடுங்குன்றீஸ்வரர் கோயில்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு நிலங்களில் குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சிகள், நகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இதர அரசு நிலங்களில், அரசியல் கட்சிகள் சார்பாகவும், இதர சாதி, சய, சங்கமங்கள் சார்பாகவும் எழுப்பப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை 15 நாட்களுக்குள் அந்தந்த அமைப்பினர் தங்களது சொந்த செலவில் அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தாங்கள் ஏற்கனவே பெற்றுள்ள பயண சலுகை அட்டையினை வருகின்ற 30.06.2025 வரை பயன்படுத்தி, கட்டணமில்லா பயணச் சலுகையினை பெறலாம். மேலும் வருகின்ற 01.04.2025 மற்றும் 02.04.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணச்சலுகை அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் அரியக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சண்முக ஷாலினிக்கு பரிசுத் தொகையாக 1 லட்சம் ரூபாயை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளி கல்வித்துறை செயலர், தொடக்க கல்வித்துறை இயக்குநர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக வண்டி எண் 16103/16104 ராமேஸ்வரம் – தாம்பரம் தினசரி விரைவு ரயில் 06.04.2025 ஞாயிறு முதல் இயக்கப்படஉள்ளது. இந்நிலையில் அந்த புதிய ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.
சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்றுநர்களை கொண்டு நீச்சல் பழக 12 நாட்கள் பயிற்சி வகுப்புகள் இருபாலருக்கும் நடத்தப்பட உள்ளது. முதல் தொகுப்பு ஏப்.01 – ஏப்.13, 2ம் தொகுப்பு ஏப்.15 – ஏப்.27, 3ம் தொகுப்பு ஏப்.29 – மே11, 4ம் தொகுப்பு மே.13 – மே.25, 5ம் தொகுப்பு மே.27 – ஜூன்.8 வரை வகுப்புகள் நடைபெறும். பயிற்சி பெற விரும்புவர்கள் குறைந்தது 4 அடி உயரம் இருக்க வேண்டும்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி முடித்து விடுதிக்குச் சென்ற பெண் பயிற்சி மருத்துவர் மீது மர்ம நபர் தாக்குதல் நடத்தினார். அவரின் கூச்சலால் சக மருத்துவர்கள் கூடி காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.போலீசார் சிசிடிவி காட்சிகளின் உதவியால் குற்றவாளியைத் தேடி, ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த 20 வயது சந்தோஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தஞ்சாவூரில் நெல் வியாபாரம் செய்பவர் கோபாலகிருஷ்ணன் (63) மதுரையை சேர்ந்த நெல் கமிஷன் வியாபாரிகளாகும் கார்த்திக், குமார் ஆகியோருக்கு 2023 அக்டோபரில் ரூ.1.17 கோடி மதிப்புள்ள நெல் மூடைகள் வழங்கினார். ஆரம்பத்தில் பணம் செலுத்திய அவர்கள், பின்னர் பணம் தரவில்லை. பணம் தராததால், கோபாலகிருஷ்ணன் சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
Sorry, no posts matched your criteria.