India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள https://affidavit.eci.gov.in/ என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து தெரிந்துகொள்ளலாம். அல்லது ப்ளே ஸ்டோரில் KYC என்ற செயலி மூலமும் தெரிந்து கொள்ளலாம்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிறிஸ்துவ ஆலயங்கள், முஸ்லிம் ஜமாத்தார்கள் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகளிடம் இந்திய கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்திற்கு ஆதரவு கேட்டு ப.சிதம்பரம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது அவர் பேசுகையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஜிஎஸ்டி வரி மாற்றி அமைத்து குறைக்கப்படும். ஏழை மக்களிடம் வரி வசூல் செய்யப்படுகிறது இந்த அரசு எனவும் தெரிவித்தார்.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 145 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 2 வாக்குச்சாவடி மிகவும் பதற்றமானவை என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்.19 அன்று நாடளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் வாக்குபதிவை முன்னிட்டு ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜீன்.4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை காலை 10மணியளவில் வாகனப் பேரணி செல்கிறார். பின்னர், பகல் 12 மணிக்கு தென்காசியிலும் , மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையிலும் அமித் ஷா தலைமையில் வாகனப் பேரணி செல்ல இருப்பதாக தமிழக பாஜக சார்பில் தமிழக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியில் 268 ஆண்கள், 253 பெண்கள் உள்பட 521 பேரின் பெயா்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி, 1,14,124 ஆண் வாக்காளர்களும், 1,20,060 பெண் வாக்காளா்களும் , 5 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,34,189 வாக்காளா்கள் உள்ளனா். ஆலங்குடி தொகுதியில் 198 ஆண் வாக்காளா்கள்,186 பெண் வாக்காளா்கள் உள்பட 384 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருணாச்சல பொய்கை பகுதியில் முட்டாக்குண்டு ஊரணி உள்ளது. இந்த ஊரணியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இருந்து வந்தது. தற்பொழுது நீர்வரத்து கால்வாயில் கழிவுநீர்கள் கலந்து ஊரணி உள்ளே செல்லுகிறது. இதை சுற்றி பள்ளிக்கூடம், கோவில், பள்ளிவாசல் மற்றும் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கழிவுநீர் கலப்பதால் நோய் தொற்று பரவும் என அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஆறாவயல் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான காட்டன் மில் உள்ளது பணிபுரியும் பணியாளர்களை கிராமங்களில் அழைத்தவர் வழக்கம் அதேபோல் இன்று விளாங்காட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏற்றிக்கொண்டு வரும்பொழுது நெடுஞ்சாலையில் ராமேஸ்வரம் நோக்கியா அரிசி முட்டைகள் ஏற்றிக்கொண்டு வந்த லாரியில் உரசி வேன் கவர்ந்தது பயணித்தவர்கள் காயம் அடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு தேர்தல் அணையில் ஈடுபட்டு வரும் பறக்கும் படை ,நிலையான கண்காணிப்பு குழு ,காணொளி கண்காணிப்பு குழு ஆகிய குழுக்களில் சுழற்சி முறையில் பணியாற்றி வரும் அலுவலர்கள் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து நேற்றைய தினம்(ஏப்ரல்-3)மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம் மேற்கொண்டார்
தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.