Sivagangai

News March 20, 2025

கலை நிகழ்ச்சியில் பங்கேற்க தொலைபேசி எண் அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் நம்ம ஊரு திருவிழாவிற்கான கலைக்குழுக்களின் நிகழ்ச்சி பதிவு வருகின்ற மார்ச்.22,23 ஆகிய தேதிகளில் சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவர்கள் www.artandculture.tn.gov.in என்கிற இணையதளம் மூலமாகவோ அல்லது சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் 9786341558 என்கிற எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். *ஷேர் 

News March 20, 2025

குறி சொல்பவர் வெட்டிக் கொலை

image

மடப்புரம் கோவில் செல்லும் வழியில் சந்தனகோடாங்கி(45) கோடாங்கி அடித்து குறி செல்லி வந்துள்ளார். நேற்று மாலை இவரை தினேஷ்குமார்(27) என்பவர் வெட்டி விட்டு தப்பிச்சென்றார். திருப்புவனம் போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் கோடாங்கி உயிரிழந்தார். போலீசார் தினேஷ்குமாரை கைது செய்த நிலையில், இவரது உறவுக்கார பெண்ணுடன் சந்தனகோடாங்கி தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

News March 20, 2025

சிவகங்கை கேந்திரிய வித்யாலாவில் வேலைவாய்ப்பு

image

சிவகங்கை கேந்திரிய வித்யாலயாவில் PGT, TGT, DEO, Computer Instructor என மொத்தமாக பல்வேறு காலிபணியிடங்களுக்கு. விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நேரடியாக வாக்-இன் (Walk-IN)வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பம் தொடங்கும் நாள் 21-03-2025 முதல் 22-03-2025 வரை. தகுதியான நபர்களுக்கு ரூ.15,000 முதல் ரூ.50,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு <>லிங்கை<<>> கிளிக் செய்யுவும் *ஷேர் பண்ணுங்க

News March 20, 2025

நம்ம ஊரு திருவிழா – ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவிற்கான கலைக்குழுக்களின் நிகழ்ச்சி பதிவு வருகின்ற மார்ச்.22 மற்றும் மார்ச்.23 ஆகிய நாட்களில் சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று (மார்ச்.19) தெரிவித்துள்ளார்.

News March 19, 2025

சிவகங்கை மாவட்ட இளைஞர்கள் கவனத்திற்கு

image

சிவகங்கை மாவட்டத்தில் இளநிலை பொறியியல் பட்டயப்படிப்பு முடித்த இளைஞர்கள் தாட்கோ மூலம் வழங்கப்படும் புத்தாக்க பொறியாளர் பயிற்சி (Innovation Fellowship program) பெறுவதற்கு www.tahdco.com என்கின்ற இணையதளத்தின் வாயிலாக 21 வயது முதல் 25 வயதுக்குள் உள்ளவர்கள் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் செய்தி குறிப்பு மூலம் தெரிவித்துள்ளார்.

News March 19, 2025

சிவகங்கையில் பார்க்க வேண்டிய 10 இடங்கள்

image

சிவகங்கை மக்களே.. சிவகங்கையில் கீழே குறிப்பிட்டுள்ள 10 இடங்களுக்கு போனீங்கனா உங்க Mind Refreshness-க்கு ரொம்பவே உதவியா இருக்கும். மறக்காம விசிட் பண்ணுங்க.. *வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்**பிள்ளையார் பட்டி கோயில்*கீழடி பாரம்பரிய அருங்காட்சியகம்*செட்டியார் மாளிகை*வேலுநாச்சியார் நினைவுச்சின்னம்*ஆயிரம் ஜன்னல் வீடு*கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் *இடை காட்டூர் தேவாலயம்*குன்றக்குடி கோயில்*சிவகங்கை அரண்மனை

News March 19, 2025

சிவகங்கையில் பிளஸ் 1 மாணவர் தற்கொலை

image

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டாலின்,லிங்கேஸ் தம்பதியினர். இவர்களது மூத்த மகன் ஆதீஸ்வரன் 16, திருப்பாச்சேத்தி அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விளையாட்டில் ஏற்பட்ட தகராற்றில் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த 4 பேர் ஆதீஸ்வரனை அழைத்துச் சென்று தாக்கியுள்ளதாக உறவினர்கள் கூறுகின்றனர்.

News March 18, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து பயணச் சலுகை அட்டை 

image

சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து பயணச் சலுகை அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வருகின்ற 01.04.2025 அன்று பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும், 02.04.2025 அன்று மற்ற வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் பேருந்து பயணச்சலுகை அட்டை புதிதாகவும் மற்றும் பழைய அட்டையினை புதுப்பித்தும் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

News March 18, 2025

வரி பாக்கிக்கு சொத்து ஜப்தி கமிஷனர் எச்சரிக்கை

image

சிவகங்கை நகராட்சியில் பல ஆண்டுகளாக வீட்டு வரி, தொழில்வரி, குடிநீர் வரி உள்ளிட்டவைகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் வரி கட்டாமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர். மார்ச் 31க்குள் நகராட்சிக்கு கட்டவேண்டிய வரி பாக்கியை செலுத்த வேண்டும். 25 ஆயிரத்திற்கு மேல் வரி பாக்கி உள்ளவர்களின் சொத்தை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி கமிஷனர் கிருஷ்ணாராம் தெரிவித்தார்.

News March 18, 2025

சிவகங்கை ஆவின் பாலில் துர்நாற்றம்

image

சிவகங்கை மாவட்டத்திற்கு, சிவகங்கை மாவட்டத்தில் 75 சதவீதமும், ராமநாதபுரத்தில் 25 சதவீதமும் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்பட்டு ஆவின் மூலம் பால் விற்பனை செய்யப்படுகிறது.தற்போது ஆரஞ்சு நிறத்தில் வரும் அரை லிட்டர் பால் விரைவில் கெட்டுப் போவதாகவும், புளித்த வாடை வீசுவதாகவும் மக்கள் புகார் கூறி வருகின்றனர்.

error: Content is protected !!