India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்ட போக்குவரத்துக் கழக மேலாளர் – 04575 240325, 9487898087
பொது மேலாளர் – 04565 238055, 9487898157
காரைக்குடி பொது மேலாளர் – 04565 238055, 9487898157
கிளை மேலாளர் – 9487898087
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் காலியாக உள்ள 51 பாதுகாப்பு பணிக்கு ஓய்வு பெற்ற இராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியானது. கடந்த மார்ச்.28ஆம் தேதி விண்ணப்பம் தொடங்கிய நிலையில், இதில் விண்ணப்பிக்க இன்று (ஏப்.30) கடைசி நாள். தகுதியான நபர்களுக்கு 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. <
சிவகங்கை மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட மற்றும் திருட்டு வழக்குகளில் ஈடுபட்டதாக ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நான்கு மாதங்களில் சுமார் 57 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
கண்டரமாணிக்கத்தில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி மாபெரும் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டில் அவிழ்த்துவிட்ட கொம்பன் காளை கே.வலையப்பட்டியில் பிடி கயிறுடன் சென்ற நிலையில் காளையை காணவில்லை, கொம்பன் என்று கூப்பிட்டால் ஓடிவரும் காளையை கண்டு பிடித்து கொடுத்தால் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என காளையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 9326506153, 7094924233, 8939258484 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தொழிலாளர் தினம் (01.05.2025) அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம சபைக் கூட்டத்தினை, ஊராட்சியின் எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி காலை 11.00 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். எனவே, கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒக்கூர் ஊராட்சியில் இன்று (29.04.2025) தமிழ்க்கவிஞர் நாளையொட்டி, சங்க கால நல்லிசைப் புலவர் ஓக்கூர் மாசாத்தியார் நினைவுத்தூணிற்கு, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் ச.சீதாலெட்சுமி உட்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
கல்வி, சுகாதாரம், மருத்துவம், வேளாண்மை போன்ற துறைகள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம்(BDO) புகார் அளிக்கலாம்.
▶️காளையார்கோவில் -7402608357
▶️சிவகங்கை -7402608368
▶️மானாமதுரை -7402608358
▶️இளையான்குடி -7402608360
▶️திருப்புவனம் -7402608359
▶️தேவகோட்டை -7402608361
▶️கண்ணங்குடி -7402608362
▶️கல்லல் -7402608375
▶️சாக்கோட்டை -7402608364
▶️திருப்பத்தூர் -7402608365
*ஷேர் பண்ணுங்க
சிவகங்கை மாவட்டத்தில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில், கோடை கொண்டாட்டம் நிகழ்ச்சிகள் வரும் மே 2ஆம் தேதி முதல் தொடங்கி மே.17ஆம் தேதி வரை சிவகங்கையில் உள்ள மருது பாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், காரைக்குடியில் உள்ள அழகப்பா மாதிரி பள்ளியிலும் சிறப்பு பயிற்சிகள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க
சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் விளையாட்டு விடுதிகளில் 2025-26 ஆம் ஆண்டிற்கான சேர்க்கைக்கு www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விருப்பமுள்ள பள்ளி மாணவ/மாணவியர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று (ஏப்.28) தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற 1.05.2025 அன்று மே தினத்தை முன்னிட்டு, டாஸ்மாக் அரசு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், FL1, FL2, FL3, FL3A, FL3AA, F11A 2 ஹோட்டல்கள், கிளப் மற்றும் மனமகிழ் மன்றங்கள் வருகின்ற 01.05.2025 அன்று முழுவதுமாக மூடப்படும். இந்நேரத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்
Sorry, no posts matched your criteria.