Sivagangai

News April 10, 2024

மாற்று புகைப்பட அடையாளத்தை காண்பித்து ஓட்டு போடலாம்

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு நாளான்று வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தினால் அனுமதிக்கப்பட்டுள்ள மாற்றுப் புகைப்பட அடையாள ஆவணங்களாக ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அறிவித்துள்ளார்.

News April 10, 2024

முன் விரோதம் வாலிபர் மீது தாக்குதல்

image

சிங்கம்புணரியைச் சேர்ந்தவர் கலையரசன்(28). இவருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று (ஏப்.09) மது போதையில் தாக்கியதாக கலையரசன்(28) கொடுத்த புகாரின் பெயரில் சிங்கம்புணரி போலீசார் சண்முகம், அழகிரி, குணா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

News April 10, 2024

ஃபேஷன் ஷோ கூட நடத்தட்டும் ஓட்டு விழாது: கார்த்தி சிதம்பரம்

image

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான கார்த்தி சிதம்பரத்திடம் ரோடு ஷோ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம், ‘மோடி ரோடு ஷோ என்ன,  பேஷன் ஷோ கூட நடத்தட்டும். அதையும் வேடிக்கை பார்க்கிறவர்கள் பார்ப்பார்கள். ஆனால் ஓட்டுப்போடுவது என்பது திமுகவுக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் தான்’ என கிண்டலாக பதிலளித்தார்.

News April 9, 2024

சிவகங்கை: எம்எல்ஏ காரில் 514 தொப்பிகள் பறிமுதல்

image

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே மாவட்ட எல்லையான மருச்சுக்கட்டி காவல் சோதனை சாவடியில் நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த மானாமதுரை திமுக எம்எல்ஏ தமிழரசி காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, காரில் இருந்த கருப்பு, சிவப்பு நிற 514 தொப்பிகளை பறிமுதல் செய்தனர்.

News April 9, 2024

சிவகங்கை: 160 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

image

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், சிவகங்கை மக்களவைத் தொகுதியிலுள்ள 1,873 வாக்குச்சாவடிகளில் 160 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை, 2 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News April 9, 2024

பழமை மாறாத புரவி எடுப்பு திருவிழா

image

தேவகோட்டை அருகே நல்லாங்குடி கிராமத்தில் ஸ்ரீ வேம்புடைய அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழா இன்று தேவகோட்டை நகரில் இருந்து ஒத்தக்கடை, வெளிமுத்தி விளக்கு வழியாக மண்ணால் செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்ட குதிரைகள், காளைகள் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துச் சென்று பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். குதிரை வரும் வழியில் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

News April 8, 2024

மானாமதுரை அருகே பெண் ரயிலில் அடிப்பட்டு பலி

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சூடியூர் ரயில் நிலையங்கள் இடையே கீழப்பெருங்கரை ரயில் தண்டவாளத்துக்கு இடையே நேற்று (07/02024) 70 வயதுக்குட்பட்ட பெண் ஒருவர் அடிபட்டு கிடப்பதாக மானாமதுரை இருப்புபாதை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற சார்பு ஆய்வாளர் தனுஷ்கோடி தலைமையிலான காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

News April 8, 2024

சிவகங்கை: வருகிறார் எடப்பாடி பழனிசாமி

image

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் அ. சேவியா் தாஸை ஆதரித்து தமிழக முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (ஏப்.8) காரைக்குடி கழனிவாசல் அருகேயுள்ள என்.ஜி.ஓ குடியிருப்பு பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா். இதில் முன்னாள் அமைச்சா்கள் சி. விஜயபாஸ்கா், ஆா்பி.உதயகுமாா், சிவகங்கை தொகுதி தோ்தல் பொறுப்பாளா் வி.வி. ராஜன்செல்லப்பா ஆகியோா் பங்கேற்கின்றனா்.

News April 7, 2024

அஞ்சல் வாக்குகளை சேவை மையத்தில் செலுத்தலாம்

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சிவகங்கை தொகுதியில் தேர்தல் பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள அனைத்து நிலை அரசு அலுவலர்களும், அஞ்சல் வாக்குகளை சேவை மையத்தில் செலுத்தலாம். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து அலுவலர்களும் வாக்களிக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்  இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 7, 2024

அஞ்சல் வாக்குப்பதிவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

image

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் வாக்குச் சாவடிகளுக்கு வர இயலாத முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அவா்களது வீடுகளிலேயே சனிக்கிழமை அஞ்சல் வாக்குப்பதிவு நடைபெற்றது.சிவகங்கை பகுதியில் நடைபெற்ற அஞ்சல் வாக்குப்பதிவை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜீத் பாா்வையிட்டாா்.இந்த ஆய்வின் போது, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் (சிவகங்கை) விஜயகுமாா், சிவகங்கை வட்டாட்சியா் சிவராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!