Sivagangai

News April 12, 2024

மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் நேரில் ஆய்வு

image

சிவகங்கை மாவட்டம் பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024ஐ முன்னிட்டு, அனைத்து நிலை அரசு அலுவலர்களும், தங்களது அஞ்சல் வாக்கினை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள சேவை மையத்தில் (Facilitation Centre) நேரில் செலுத்தும் பணியினை, இன்று (ஏப்.12) மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஆஷா அஜித் நேரில் பார்வையிட்டார்.

News April 12, 2024

முதியவரை கல்லால் தாக்கிய மூதாட்டி

image

திருப்புவனம் அருகே பழையனூரை சேர்ந்த ராஜ்(70), ஈஸ்வரி(65), இவர்களுக்குள் நீண்ட நாட்களாக சொத்துப் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று(ஏப்.11) ஏற்பட்ட தகராறில் ஈஸ்வரி கல்லால் தாக்கியதில் படுகாயமடைந்த ராஜ்(70) அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பழையனூர் போலீசார் ஈஸ்வரியை(65) கைது செய்து விசாரிக்கின்றனர்.

News April 12, 2024

சத்துணவில் முட்டை வழங்கப்படவில்லை மாணவர்கள் ஏமாற்றம்

image

சிவகங்கை அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்களுக்கு சத்துணவுடன் முட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது பள்ளிகளில் ஆண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு நேற்று முட்டை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

News April 12, 2024

சிவகங்கையில் மழைக்கு வாய்ப்பு

image

சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரைக்கும் பரவலான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 11, 2024

திருப்புவனம்: கோவில் பணம் ரூ.40 லட்சம் மோசடி

image

திருப்புவனம் பகுதியை சேர்ந்த வில்வமூர்த்தி (55) மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் முன்னாள் உதவி ஆணையாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், அவர் பணி செய்த காலத்தில் கோவில் கணக்கிலிருந்து ரூ.40 லட்சத்தை மற்றொரு தனிநபர் கணக்கிற்கு மாற்றியுள்ளார். இதுகுறித்து தற்போதைய உதவி ஆணையர் குணசேகர்(50) கொடுத்த புகாரின் பெயரில் திருப்புவனம் போலீசார் வில்வமூர்த்தி (55) மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News April 11, 2024

சிவகங்கை; பெருமாள் கோயிலில் வழிபாடு செய்யும் அமித் ஷா

image

பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா நாளை சிவகங்கை வேட்பாளர் தேவநாதன் யாதவை ஆதரித்து காரைக்குடியில் மேற்கொள்ளவிருந்த சாலை பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், திருமயம் கோட்டை பெருமாள் கோவிலில் அவர் வழிபாடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News April 11, 2024

அஞ்சல் வாக்கு செலுத்த நாட்கள் நீட்டிப்பு-கலெடர் தகவல்

image

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் பிற தொகுதியைச் சேர்ந்த காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு செலுத்த இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று அரசு விடுமுறை என்பதால் ஏப்ரல் 12, 13, 15 ஆகிய தினங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்தில் தங்களது அஞ்சல் வாக்கினை செலுத்தலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஆஷா தெரிவித்துள்ளார்.

News April 11, 2024

கார் பள்ளத்தில் கவிழ்ந்து டாக்டர் பலி

image

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் முகிலன் நேற்று திருப்பத்தூர் அருகே சுண்ணாம்பிருப்பு விலக்கு பகுதியில் தனது காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த இரும்பு மின் கம்பியில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த முகிலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 10, 2024

சிவகங்கை: கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

image

சிவகங்கையில் வனவிலங்குகள் வேட்டையாடுவதை தடுக்கும் விதமாக வனத்துறையினா் இரவு முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிங்கம்புணரி பகுதிகளில் மான், முயல், மயில்கள் அதிக அளவில் வேட்டையாடப்படுவதை தடுக்கும் வகையில் மாவட்ட வன அலுவலா் பிரபா உத்தரவின்பேரில், 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வனவிலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News April 10, 2024

சிவகங்கை: கிரவல் குவாரியில் தீ விபத்து

image

சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் பகுதியை சேர்ந்தவர் குமணன்(33). இவர் நாலுகோட்டை பகுதியில் குவாரி நடத்தி வருகிறார். குவாரியில் வேலையாட்கள் பயன்பாட்டிற்காக கொட்டகை மற்றும் டேபிள், சேர் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், எதிர்பாராத விதமாக திடீரென தீப்பற்றி எரிந்து முழுவதும் சேதம் அடைந்தது. இதுகுறித்து குமணன் (33) கொடுத்த புகாரின் பெயரில் சிவகங்கை தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!