India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் அருகே காட்டாம்பூர் ஊராட்சியில் கோடையில் ஊரணிகள் வற்றியதால் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறையை, நீர் நிலைகளில் ஆழ்குழாய் மூலம் நீர் பாய்ச்சி சமாளித்து வருகின்றனர். மேலும் கொளுஞ்சிப்பட்டியில் கால்நடைகள் மட்டுமின்றி மான்களும் குடிநீர் தேடி குடியிருப்புக்குள் வருவதால் ஓணான் கண்மாயில் தண்ணீர் தேக்கி வருகின்றனர்.
சிவகங்கையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும்
தனியார் தொழில்பயிற்சி நிலையங்களில் உள்ள தொழிற் பிரிவுகளுக்கு
மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் வரும் ஜூன். 7 ஆம் தேதி வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாகவோ அல்லது அந்தந்த தொழிற் பயிற்சி நிலையங்கள் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று தெரிவித்தார்.
சிவகங்கையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும்
தனியார் தொழில்பயிற்சி நிலையங்களில் உள்ள தொழிற் பிரிவுகளுக்கு
மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் வரும் ஜூன். 7 ஆம் தேதி வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாகவோ அல்லது அந்தந்த தொழிற் பயிற்சி நிலையங்கள் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் நாளை (மே.16) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று (மே.14) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேவகோட்டை பகுதியில் 5 சென்டி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர்-திருச்சி ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.விருதுநகரில் காலை 6:20 மணிக்கு புறப்படும் விருதுநகர்-திருச்சி ரயில் (ஞாயிறு தவிர) அனைத்து நாட்களும் இயக்கப்படுகின்றன.இந்த ரயில் விருதுநகர்,மானாமதுரை, சிவகங்கை கல்லல்,காரைக்குடி வழியாக திருச்சிக்கு காலை 11:20க்கு சென்று சேரும். தினமும் அலுவலகத்திற்கு செல்லும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மானாமதுரை திருப்பத்தூர் தொகுதிகளில் மாங்குளம் ,காரையூர் மினி ஸ்டேடியம் கட்ட இடம் தேர்வு செய்தனர். இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கியுள்ளது. வருவாய்துறையிடம் இருந்து மாவட்ட விளையாட்டு ஆணையத்திடம் நிலங்களை ஒப்படைத்த பின், மினி ஸ்டேடியத்திற்கான கட்டுமான பணி துவங்கும். இங்கு 400மீ., ஓடுதளம் ,வாலிபால்,கூடைப்பந்து, கால்பந்து, கபடி உள்ளிட்ட விளையாட்டுக்களுக்கான
கட்டுமான வசதிகள் செய்யப்படும்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே தனக்கு தீண்டாமைக் கொடுமை அளிப்பதாக ஊராட்சி செயலா் மீது ஊராட்சி மன்றத் தலைவி புகாா் அளித்தாா். இந்த நிலையில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த தன்னை ஊராட்சி செயலா் ராஜ்குமாா் பல்வேறு வகைகளில் தீண்டாமை வன்கொடுமை செய்து வருவதாக ஊராட்சி மன்றத் தலைவர் கௌரி மகாராஜன், சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் நேற்று புகாா் மனு அளித்தாா். (படம் ஊராட்சி செயலாளர் ராஜ்குமார்)
கரிவலம்வந்தநல்லூர் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுக்கு வீட்டில் திருமணம் நடத்த முடிவு செய்து பொதிகை நகர் பகுதியில் உறவினர் வீட்டில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் நிச்சயதார்த்தத்தில் வீட்டில் இருந்த இளம் பெண் காணவில்லை. இதனால் அப்பெண்ணின் உறவினர்கள் சிவகங்கை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து நேற்று விசாரித்து வருகின்றனர்.
பதினொன்றாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 16,327 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 15,441 பேர் தேர்ச்சி பெற்றனர். சிவகங்கை மாவட்டத்தில் ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.57% ஆகும். மாநில அளவில் சென்ற ஆண்டில் 9 -ஆவது இடத்தை பிடித்திருந்த சிவகங்கை மாவட்டம் நடப்பாண்டில் 7 -ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
Sorry, no posts matched your criteria.