India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு தரப்பினரும் தங்களது வாக்கினை பதிவை செய்து வருகின்றனர்.
சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர், ஆலங்குடி, திருமயம், காரைக்குடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சிவகங்கை மக்களவைத் தொகுதியில் மதியம் 12 மணி நிலவரப்படி 24.47 % வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதில் இன்று காலை 8 மணி அளவில் கல்லல் அருகே அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் பனங்குடியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.
தமிழகத்தில் 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில்
பாரதிய ஜனதா கட்சியின் சிவகங்கை நாடாளுமன்ற வேட்பாளர் தி.தேவநாதன் யாதவ் சென்னை தி.நகர் பாண்டி பஜாரில் உள்ள ராமகிருஷ்ணா பள்ளி வளாகத்திலுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.
தமிழகத்தில் 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தல் இன்று (19.04.2024) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில் உள்ள சிட்டாள் ஆச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது வாக்கினை செலுத்தினார்.
சிவகங்கை மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாளை நடைபெற உள்ள வாக்குப்பதிவு தொடர்பாக அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளும் பணிகளை அம்மையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் நேரடியாக கண்காணிப்பு ஏதுவாக மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது செய்தியின் தலைப்பையோ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.
நாளை நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள 1357 வாக்குச்சாவடி மையங்களில், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் மற்றும் மத்திய ஆயுத காவல் படையினர் அடங்கிய 1642 நபர்கள் என மொத்தமாக 2206 நபர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷ் இன்று தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாசில்தார் அலுவலகத்தில் தபால் ஓட்டு போட வந்த மத்திய ரிசர்வ் போலீஸ் சதீஷ்குமார், தான் ஓட்டளித்த சீட்டை வேட்பாளர் படங்களுடன் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதை அறிந்த மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவின் படி, காளையார் கோவில் போலீசார், சதீஷ்குமார் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவன்று வேட்பாளர் மற்றும் அவர்களது ஏஜென்ட்கள் எப்படி நடந்து கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், “செல்போன்கள் பயன்படுத்த தடை. ஓட்டுச்சாவடியில் இருந்து 200 மீட்டருக்கு அப்பால் தான் தற்காலிக தேர்தல் அலுவலகம் அமைக்க வேண்டும். அங்கு 1 மேஜை, 2 நாற்காலி மட்டுமே பயன்படுத்த வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் மழை நீர் முழுமையாக பயன்படுத்தப்பட வில்லை. நீர் வரத்து கால்வாய்கள் சரிவர பராமரிப்பில்லாதது , ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் கண்மாய், குளங்களுக்கு நீர் வரத்து போதிய அளவில் இல்லை. எனவே கண்மாய், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கான வரத்து கால்வாய்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகளை பாதுகாக்கவும், பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.