India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை, கண்டரமாணிக்கத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று அனுமதி வழங்கி உத்தரவிட்டது. தொடர்ந்து கண்டரமாணிக்கத்தில் வருகிற 24- ஆம் தேதிக்குள் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதியை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் வழங்க வேண்டும் எனவும் உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சிவகங்கை மேலரதவீதியை சேர்ந்த மீனாட்சி(68), நேற்று கோயிலுக்கு சென்றுக்கொண்டிருந்தார் அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த மர்ம நபர்கள் மீனாட்சியிடம் தாங்கள் போலீஸார் என கூறி அவர் அணிந்திருந்த 4 1/2 பவுன் தங்கச் செயினை கழற்றி பையில் வைக்க சொல்லியுள்ளனர். பிறகு அவர் கழற்றி வைக்க முயற்சித்த போது மர்மநபர்கள் செயினை பறித்து தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனனர்.
திருப்புவனம் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியின் சித்திரத் திருவிழாவை முன்னிட்டு நாளை 22 ஆம் தேதி வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் லாடனேந்தல் வேலம்மாள் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு லோக்கல் விடுமுறை விடப்பட்டுள்ளது. குழந்தைகள் சித்திர திருவிழாவை கொண்டாடும் விதமாக விடுமுறை அறிவித்திருப்பதாக பள்ளியின் முதல்வர் தெரிவித்திருக்கிறார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில்
இந்திய குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்ற அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் மாணவி அஞ்சுகாவை கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தா லெட்சுமி பொன்னாடை அணிவித்து பாராட்டினார். விலங்கியல் துறைத் தலைவர் பேராசிரியர், வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் லதா, வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் வேலாயுத ராஜா மற்றும் மாணவியின் தந்தை பழனி ஆகியோர் உடனிருந்தனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர சுதன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று தங்க குதிரையில் மீனாட்சி அம்மனும் மறக்குதிரையில் சுவாமியும் எழுந்தருளினர். தொடர்ந்து மகா தீபாரதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், அதிமுக சேவியர்தாஸ், பாஜக தேவநாதன், உட்பட 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இது குறித்து அதிமுகவினர் கூறுகையில் ”திமுக மற்றும் கார்த்தி சிதம்பரம் மீதான அதிருப்தி வாக்குகள் எங்களுக்கு கிடைத்துள்ளன. சிலர் பிரிந்து சென்றாலும் எங்களது கட்சி வாக்குகள் சதவீதம் இதனால் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலாவது வெற்றி பெறுவார் என்றனர்.
சிவகங்கை மாவட்டம் புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மருதுபாண்டி இவர் சிங்கப்பூரில் இருந்து வந்து சிவகங்கை அருகே வாணியங்குடியில் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டியவீட்டில் மருது பாண்டியர்கள் சிலை வைத்துள்ளார். இன்று வீட்டிற்கு பால் காய்ச்சும் விழா நடக்க இருந்த நிலையில் சிவகங்கை போலீசார் வந்து சிலையை அகற்றிவிட்டு பால் காய்ச்சும்படி கூறியிருக்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
திருப்பத்துார் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு நடந்த ஜெயந்தன் பூஜை விழாவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் தனி சன்னதியில் யோகநிலையில் மூலவர் பைரவருக்கு ஜெயந்தன் பூஜை நடைபெற்றது. நேற்று காலை பெண்கள் பைரவர் சன்னதியில் மாவிளக்கேற்றி பிரார்த்தனை செய்தனர். இரவில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் யோக பைரவர் திருவீதி உலா வந்தார்.
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை (ஏப்.21) சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மதுபானக் கடை மற்றும் அதனுடன் இணைந்த மதுபானம் அருந்தும் கூடம் FL2, FL3 / FL3A / FL3AA மற்றும் FL11 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றம் மற்றும் ஹோட்டல்கள் முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று(ஏப்.19) பரபரப்பாக நடைபெற்று முடிந்தது. இதையடுத்து நேற்று சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காலை 7 மணி முதல் நடைபெற்றது. தொடர்ந்து 12 மணி நிலவரப்படி மொத்தமாக 63.94 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.