India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டத்தில் இன்று (மே.24) மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிவகங்கையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் காவலர் குடியிருப்பு அருகே நேற்று(மே 23) மழைக்கு ஒதுங்கிய 15 பேர் மீது கட்டடம் இடிந்து விழுந்தது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் கூலி தொழிலாளிகள் மற்றும் பெண் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணிவரை மிதமான மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிவகங்கையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் மே மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயில் விநியோகிக்கப்படவில்லை. இவை எப்போது வரும் எனத் தெரியாமல் குடும்ப அட்டைதாரா்கள் தினமும் நியாயவிலைக் கடைகளுக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனா். சில இடங்களில் கடை ஊழியர்களிடம் வாக்குவாதமும் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டியில் ஜல்லிக்கட்டு, கல்லல் அருகே உள்ள நாவல்கனியான்மடம் கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி வழங்கி உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட் டது.இந்த ஊா்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகளை நடத்துவதற்கான அனுமதியை அரசிதழில் வெளியிடுவதற்கான நடவடிக்கையை ஆட்சியா் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.
சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணிக்கென நியமிக்கப்பட்டுள்ள மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு சீரற்ற மயமாக்கல் பணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அஜித் முன்னிலையில் இன்று நடைபெற்றது. உடன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜான்சன், தேர்தல் வட்டாட்சியர் மேசியாதாஸ் உட்பட பலர் உடனிருந்தனர்.
மானாமதுரையில் கடந்த மே.20 ஆம் தேதி இந்தியன் வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றது. கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் மானாமதுரை துணை கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை காவல்துறையினர் மானாமதுரை மேட்டு தெருவை சேர்ந்த பிரசாந்த்(31) என்பவரை இன்று கைது செய்தனர்.
காரைக்குடி வாட்டர் டேங்க் அருகே உள்ள பிள்ளையார் கோவில் தெப்பக்குளத்தை சுற்றி பொது மக்கள் காலை மாலை நடைபயிற்சி செய்வது வழக்கம். இங்கு சிறுவர்கள் விளையாட பூங்காவும் அமைந்துள்ளது. இங்கு சுற்றி தெரியும் தெரு நாய்களால் சிறுவர்களும் பெரியவர்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். ஏதேனும் விபரீதம் நடக்கும் முன் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருக்கோஷ்டியூர் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே சிவகங்கை சாலையில் உள்ள வேப்பமரம் சாய்ந்தது. நேற்று பெய்த கனமழை காரணமாக இந்த வேப்ப மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் இப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதோடு , போக்குவரத்தும் பல மணி நேரம் பாதிக்கப்பட்டது. பின்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விரைந்து வந்த அதிகாரிகள் சாய்ந்த மரத்தை ஜேசிபி கொண்டு அகற்றி போக்குவரத்திற்கு வழிவகுத்தனர்.
வானிலை ஆராய்ச்சி மையம் முன்னறிவிப்பின்படி, சிவகங்கை மாவட்டத்தில் கன முதல் மிக கனமழையும் பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மழையால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்துத் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டணமில்லா உதவி தொலைபேசி எண் 1077, 04575 – 246233 ஆகிய எண்கள் மூலம் குறைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.