Sivagangai

News April 27, 2024

சிவகங்கை: ஜூன் 4க்கு பிறகு கூட்டுறவு சங்கத் தேர்தல்!

image

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கத் தேர்தல் நடைபெறும் என திருப்பத்தூர் எம்எல்ஏவும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் நேற்று(ஏப்.26) செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும், ஜூன் 4க்கு பிறகு கூட்டுறவு சங்கத் தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

News April 26, 2024

நீரில் மூழ்கி மாணவர் பலி

image

இளையான்குடி அருகே உள்ள பெரும்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் பிரியதர்ஷன்(12). இவர் பரமக்குடி அருகே உள்ள எமனேஸ்வரம் தனியார் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்தார். இவர் நண்பர்களுடன் பெரும்பச்சேரி கீழத்தெரு ஊரணியில் குளித்த போது பிரியதர்ஷன் நீரில் மூழ்கினார். அவரை காப்பாற்றி பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

News April 26, 2024

திருப்பத்தூர்: மஞ்சுவிரட்டில் மாடு முட்டி ஒருவர் பலி

image

சிவகங்கை மாவட்டம், கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப் 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவையொட்டி, நேற்று காலை கிராமத்தாா்கள் கோயிலிருந்து ஊா்வலமாக வந்து காளைகளுக்கு மாலை, வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்தனா். தொடர்ந்து நடந்த மஞ்சுவிரத்தில் மாடு முட்டியதில் மடக்கரைப்பட்டியை சோ்ந்த வெள்ளைச்சாமி உயிரிழந்தார்.

News April 26, 2024

சிவகங்கை: சித்திரை திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு

image

சிவகங்கை மாவட்டம், கண்டரமாணிக்கம் மாணிக்கநாச்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரைத் திருவிழாவையொட்டி நேற்று(ஏப்.25) மஞ்சுவிரட்டு நடைபெற்றது. தொழுவிலிருந்து 250க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. மாடுகளை காளையா்கள் பிடித்து மகிழ்ந்தனா்.

News April 25, 2024

சிவகங்கை: நிறுவனங்கள் மீது புகார் அளிக்கலாம்

image

கர்நாடகா, கேரளாவில் நாளை மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் தங்கி பணிபுரியும் பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார். மேலும், தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தின் 04575-240521 என்ற எண் வாயிலாக புகார் அளிக்கலாம் எனக் கூறியுள்ளார்.

News April 25, 2024

செட்டிநாட்டு கலையின் அடையாள அரண்மனை!

image

காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தான் அரண்மனை, செட்டிநாடு பாரம்பரிய கட்டிடக் கலையை பறைசாற்றி வருகிறது. ராஜா சர் அண்ணாமலை, 1912-ம் ஆண்டு கட்டினார். இதில் பளிங்கால் செய்யப்பட்ட பெரிய தூண்கள் நிரம்பிய அகண்ட தாழ்வாரம் இருக்கிறது. திருமணம், மதச் சடங்குகள் நடைபெறும் விசாலமான முற்றம் உள்ளது. இந்த அரண்மனையில் 1990 சதுர அடியில் 9 கார் நிறுத்தும் அறைகள், மின்தூக்கி (லிப்ட்) வசதியுடன் உள்ளன.

News April 25, 2024

சித்திரை திருவிழாவை காண வந்த 3 பெண்களிடம் சங்கிலி பறிப்பு

image

மானாமதுரை சித்திரைத் திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை காண வந்த கல்குறிச்சியை சேர்ந்த ரேவதி, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சாந்தி ஆகிய இருவரிடம் 3 பவன் சங்கிலியையும்
வடக்கு சந்தனூரை சேர்ந்த காசியம்மாளிடம் 2 பவுன் சங்கிலியையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றதாக நேற்று மானாமதுரை காவல் நிலையத்தில் இம்மூவரும் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப்பதிந்து இன்று விசாரித்து வருகின்றனர்.

News April 25, 2024

திருப்புவனத்தில் காற்றில் பறந்த பள்ளிக்கூடத்தின் கூரை

image

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வடகரை அரசு பள்ளி கூரை காற்றில் பறந்து மின்கம்பியில் விழுந்து விபத்து ஏற்பட்டது. வடகரை அரசு தொடக்கப் பள்ளியில் 30 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயில்கின்றனர். பள்ளி கட்டடம் சேதமடைந்ததால் கடந்த இரு மாதங்களுக்கு முன் புதிய கட்டடம் 33 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டு முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 25, 2024

சிவகங்கை: நகையில் அடகு வைத்தவர்கள் கைது

image

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 100 அடி ரோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைக்க வந்த குற்றவாளிகள் 7 பேர் நிதி நிறுவன ஊழியர்களின் ரகசிய தகவலின் பெயரில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கிரி பிரவீன் உமேஷ்யின் உத்தரவின் பேரில் காரைக்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் R. பிரகாஷ் மேற்பார்வையில் அவர்களை கைது செய்தனர்.

News April 25, 2024

சிவகங்கை: பூட்டியே கிடக்கும் விஏஓ அலுவலகம்

image

திருப்புவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரி அலுவலகம் கடந்த 4 நாட்களாக பூட்டியே கிடைக்கிறது. தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து வட்டாட்சியர் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், மக்கள் தொடர்பு அலுவலகம் போன்ற எந்த அரசு அலுவலகங்களும் இயங்கவில்லை. இதனால் பொது மக்களுக்கு மிகவும் பாதிப்பாக இருந்தது. தேர்தல் முடிந்தும் திருப்புவனம் விஏஓ அலுவலகம் மூடியே கிடக்கிறது. தினமும் பொதுமக்கள் வந்து திரும்பி செல்கின்றனர்.

error: Content is protected !!