India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையமான காரைக்குடி அழகப்பா செட்டியார் அரசு இன்ஜி கல்லுாரி வளாகத்தில் பொருத்திய 243 ‘சிசிடிவி’ கேமராக்களும் கோடை வெப்பத்தால் பாதிக்கின்றதா , செயல்படுகிறதா என்பதை அவ்வப்போது உறுதி செய்து கொள்வதோடு, ‘சிசிடிவி’ கட்டுபாட்டு அறையில் ‘ஏசி’ பொருத்தியுள்ளனர்.
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 ஐ முன்னிட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை, காரைக்குடி அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பு வைப்பறைகளில் இருந்து 2 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் ஆளில்லா விமானங்கள் (Drones) பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
கோடை ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே வெய்யில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது சிவகங்கை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஏப்.29) தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்தில் (7 மணி வரை) சிவகங்கையில், இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதால், வெயிலின் தாக்கம் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகங்கை மாவட்ட நீதித்துறையில் 91 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இந்த<
திருப்புவனத்தில் ரேட்டோ(RATOO) ஆப் என்று இணையத்தின் மூலமாக பிரியாணி ஆர்டர் செய்தால் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு உடனடியாக டோர் டெலிவரி செய்து வருகிறார்கள்.இன்றுடன்
ரேட்டோ ஆப் துவங்கி ஒரு வருடம் முடிந்து இரண்டாவது வருடம் துவக்க நாள் நிகழ்ச்சியாக இன்று 12 மணிக்கு ஆப் மூலம் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளருக்கு ஒரு ரூபாய்க்கு பிரியாணி டோர் டெலிவரியில் வழங்குவதாக நிறுவனர் அறிவித்திருக்கிறார்
ராகினிப்பட்டியைச் சேர்ந்த விஜயலட்சுமி (19) தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிடெக் 2ம் ஆண்டு படித்து வரும் நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு வந்திருந்த நிலையில் நேற்று முன்தினம் தஞ்சாவூரில் உள்ள கல்லூரிக்குப் போவதாக கூறிச் சென்று சென்றவர் எங்கு சென்றார் தெரியவில்லை என அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில் இன்று சிவகங்கை தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவான போக்சோ வழக்கில் மருதிப்பட்டியை சேர்ந்த சந்திரன் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு இராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிவகங்கை எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ் ஒப்புதலின் அடிப்படையில், இராமநாதபுரம் மாவட்ட சிறையிலிருந்த சந்திரனை குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறைக்கு கொண்டு சென்றதாக எஸ்பி தெரிவித்தார்.
சிவகங்கையில் உறைவிடம் சாரா கோடைக்கால பயிற்சி முகாம் 15 நாட்கள் நடத்தப்படவுள்ளது. தடகளம், கால்பந்து, கோ-கோ, கூடைப்பந்து, ஹாக்கி விளையாட்டுப் போட்டிகளை 29.04.2024 முதல் 13.05.2024 வரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. கோடைக்கால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு ”முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” பெற www.sdat.tn.gov.in என்ற இணைய தளத்தில் மே.1ஆம் தேதி முதல் மே.15ஆம் தேதி மாலை 4.00 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார் .
சிவகங்கை அரசு மருத்துவமனை அருகேயுள்ள தனியார் ஹோட்டல் அருகில் ஆதரவற்ற 70வயது முதியவர் சாலையில் செல்வோரிடம் யாசகம் கேட்டு கொண்டிருந்ததை பார்த்த ஹோட்டல் உரிமையாளர் ராஜேந்திரன் முதியவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த முதியவர் சிவகங்கை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிந்து இன்று விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.