India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டத்தில் வாகனப் புகைப்பரிசோதனை மையங்களின் செயல்பாட்டினை மேம்படுத்திட புதிய PUCC 2.0 Version -ஐ வரும் திங்கட்கிழமை (6.5.2024) முதல் அனைத்து வாகனப் புகைப் பரிசோதனை மையங்களும் நிறுவி வாகனப் புகைப் பரிசோதனைகளை செய்ய வேண்டும். அவ்வாறு, செய்ய தவறும் வாகனப் புகைப் பரிசோதனை மையங்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூடி சீல் வைக்கப்படும் என சிவகங்கை ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை, இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் சாலை கிராமம் அருகே உள்ள களத்தூர் கிராமத்தில் 100ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்திற்கு பேருந்து வசதி இல்லாததால் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து, களத்தூர் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் நிறைவேற்ற கோரி கிராம பொதுமக்கள் சிவகங்கை மாவட்டம் ஆட்சியரிடம் இன்று மனு அளித்துள்ளனர்.
தொழிலாளர் தினமான நேற்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுரை மண்டல இணை கமிஷனர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் விதிமீறி தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்திய 40 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மதுரையில் 114, ராம்நாட்டில் 34, விருதுநகரில் 97 நிறுவனங்கள் மீது நடடிவக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே நேற்று பள்ளித்தம்பம் புனித மூவரசர் தேவாலயத்தில் நவ நாள் திருவிழா பங்குத்தந்தை சூசை சவரி யண்ணன் தலைமையில் சிறப்பு திருப்பலி மற்றம் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கப்பட்டது. மே.9ஆம் தேதி காலையில் நவ நாள் திருப்பலி, மாலை 4.30 மணிக்கு பொங்கல் விழா இரவு 8 மணிக்கு மின்னொளி தேர் பவனி நடைபெற உள்ளது.
தமிழக அரசு பொது வினியோக திட்டத்தின் கீழ் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்து வருகிறது. இவற்றை சிலர் முறைகேடாக கடத்தி, கள்ளச்சந்தையில் அதிக லாபத்தில் விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், ரேஷன் பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தல் குறித்து 1800 599 5950 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் புகாரளிக்கலாம் என சிவகங்கை உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரில் சாய் யோகா ஸ்போர்ட்ஸ் அகாடமி, பாரதிய சுவாமி விவேகானந்தா அகாடமி, யோகா ஸ்போர்ட்ஸ் அசோசியன் சார்பாக உலக அளவிலான யோகா போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இதில் 12 வயது பிரிவில் சிவகங்கை சிவம் மார்ஷல் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் பங்கேற்ற மாணவி சஞ்சனா முதலிடம் பெற்று அசத்தியுள்ளார்.
சிவகங்கை மாவட்ட பாஜகவின் தற்காலிக மாவட்ட செயலாளராக இருப்பவர் சேது சிவராமன். இவர் பல்வேறு கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், கட்சியின் நிர்வாகிகளை அவதூறாக பேசுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், தலைமை நேற்று சேது சிவராமனை பதவியிலிருந்து நீக்கியுள்ளது. மேலும் விசாரணைக்காக ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஆத்தங்குடி அரண்மனை சிவகங்கை மாவட்டம் ஆத்தங்குடி ஊரில் அமைந்துள்ளது. காரைக்குடி, பள்ளத்தூர், ஆத்தங்குடி, கோதமங்களம் பகுதிகளில் பிரபலமான செட்டிநாடு வீடுகள் உள்ளன. அரண்மனை போல அமைந்திருக்கும் இந்த வீடுகள், இறக்குமதி செய்யப்பட்ட உயர் வகை மரங்கள், மற்றும் கண்ணாடிகள் பயன்படுத்தி மிகுந்த வேலைபாட்டுகளுடன் காட்சியளிக்கிறது. இவை 80 முதல் 200 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், புதுப்பொலிவுன் நிற்கிறது.
மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே தின கொண்டாட்டம் கேக் வெட்டி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளியின் நிறுவனர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். மற்றும் பள்ளியின் தாளாளர் கபிலன் பள்ளியின் ஆட்சியர் மீனாட்சி முன்னிலை வகித்தனர். பள்ளியின் ஆசிரியை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவின் ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் சாரதா ஏற்பாடு செய்தார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயில் மட்டும் தான் மூலவரும் , உற்சவருக்கு ஒரே மாதிரி காட்சி அளிக்கும் சிறப்பு பெற்ற தலம். ஆதிசங்கரர் வழிபட்ட தலம் என்ற சிறப்பை பெற்றது. இங்கு சித்திரை – வைகாசி திருவிழா விமரிசையாக நடைபெறும். இச்சிறப்பு பெற்ற கொப்புடைய நாயகி அம்மனுக்கு நாட்டார், நகரத்தார் சார்பில் வைர கிரீடம், இரு வைர தோடுகள் நேற்று உபயமாக அளிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.