Sivagangai

News May 6, 2024

+2 மாணவர்களே இதை செய்யுங்கள்

image

சிவகங்கை மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வை மாணவ மாணவியர் எழுதியுள்ளனர். இன்று தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் மாணவ-மாணவிகளும், பெற்றோரும் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மதிப்பெண்களை பார்க்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. எனவே வீட்டில் இருந்தபடியே தங்களது தேர்வு முடிவுகளில் அறிந்து கொள்ளலாம்.

News May 6, 2024

பொதுமக்களை அச்சுறுத்தும் மின்கம்பம்

image

சிங்கம்புணரி அருகே சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பம் அப்பகுதி விவசாயிகளை அச்சுறுத்தி வருகிறது. இவ்வொன்றியத்தில் சதுர்வேதமங்கலம் கிராமத்தில் பாலாற்றங்கரை அருகே உள்ள ஒரு மின்கம்பம் சில ஆண்டுகளுக்கு முன்பு காற்றில் சாய்ந்தது. இன்றுவரை சரிசெய்யப்படாமல் அப்படியே ஆபத்தான முறையில் தொங்குகிறது. விபத்துக்கள் ஏற்படும் முன் மின்சாரத் துறையினர் அகற்றுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News May 5, 2024

சிவகங்கை மாவட்டத்தில் மழை…!

image

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மாலை 6.30 மணி வரை இடி, மின்னலுடன் மிதமானக் மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 5, 2024

கோயில் மாடுகளை பெற மறுப்பு

image

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் சுற்றித்திரியும் கோயில் மாடுகளை பிடிக்க மதுரை கோயில் நிர்வாகம், தன்னார்வ அமைப்பினர் மறுத்து விட்டதால் சிக்கல் உருவாகி உள்ளது. திருப்புவனத்தில் நாளுக்கு நாள் கோயில் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் அவற்றை அப்புறப்படுத்துவதில் புதிய சிக்கல் உருவாகி உள்ளது.

News May 4, 2024

5 மையங்களில் நீட் தேர்வு

image

சிவகங்கை மாவட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் இளங்கலை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நாளை (மே 5) நடைபெறவுள்ளது. இதில் 250‌ பேர் உட்பட மாதிரிப்பள்ளியில் 82 மாணவர்கள் எழுத உள்ளனர். மேலும் சிவகங்கை மாவட்டத்தில் 5 மையங்களில் தேர்வு நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 4, 2024

சிவகங்கையின் ஆயிரம் ஜன்னல் வீடு அம்சங்கங்கள்!

image

சிவகங்கையில் செட்டிநாட்டுப் பகுதியில் அமைந்துள்ள பாரம்பரிய செட்டிநாட்டு வீடுகளில் ஒன்றாகும். பாரம்பரியம் மிக்க நகரமாக அறிவிக்கட்ட காரைக்குடி பகுதிக்கு உரித்தான சுண்ணாம்பு கற்களை பயன்படுத்தி கட்டபட்டுள்ளது. இந்த வீடு 20,000 சதுர அடியில், 25 பெரிய அறை, 5 கூடங்களுடன் அமைந்துள்ளது. 1000 சன்னல் கதவுகளுடன் இவ்வீடு கட்டப்பட்டுள்ளது. வீட்டின் பிரதான வாசல் கதவின் சாவி கிட்டத்தட்ட 1 அடி நீளமுள்ளது.

News May 4, 2024

காயலாங்கடை போல் காட்சி அளிக்கும் வாகனங்கள்

image

திருப்புவனம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட டூவீலர், கார்கள் நிரம்பி காயலான் கடை போல் காட்சியளிக்கிறது. காவல் துறை கூறுகையில் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட வாகனங்களை பாதுகாக்க முடியவில்லை மழையிலும், வெயிலிலும் வாகனங்கள் சேதமடைந்து வருகின்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கிடப்பதால் பழைய இரும்பு கடை போல காட்சியளிக்கிறது என்று கூறினார்கள் .

News May 3, 2024

சிவகங்கை: பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கவும்

image

சிவகங்கை மாவட்டத்தில் வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரித்து அதிகவெப்ப நிலை நிலவக்கூடும் என்பதால் வயதானவர்கள், குழந்தைகள் காலை 11.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை அத்தியாவசிய பணிகள் இல்லாமல் வெளியே செல்வதை தவிர்த்தல் வேண்டும். உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு தண்ணீர் பருகுதல் வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

News May 3, 2024

கோடை கொண்டாட்ட நிகழ்ச்சிகள் – ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில்  2023–2024 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாணாக்கர்களின் நலன் கருதி கோடை கொண்டாட்ட நிகழ்ச்சிகள்  வருகின்ற மே.7 முதல் மே.17 வரை சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று (மே-3) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 3, 2024

சிவகங்கை மாவட்டத்தில் 40 நிறுவனங்களின் மீது மதுரை தொழிலாளர் துறை நடவடிக்கை

image

சிவகங்கை மாவட்டத்தில் மே தினத்தன்று கடைகள்,உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவன ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.வேலை செய்ய அனுமதிக்க வேண்டுமெனில் 2சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அளிக்க வேண்டும்.பணியில் ஈடுபடுத்த விடுமுறை தினத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் படிவம் பெற வேண்டும் இதில் சிவகங்கை மாவட்டத்தில் 40 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!