India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கட்சியின் கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் ப.சிதம்பரம் அறிமுக கூட்டம் தேவகோட்டை தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் தலைமையிலும், முன்னால் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ மாங்குடி. கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் இன்று (மாா்ச் 26) தொடங்கும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 17ஆயிரத்து 978 பேர் எழுதுகின்றனா் . தேர்வை கண்காணிக்கும் பணிகளில் 103 முதன்மை கண்காணிப்பாளா்கள், 103 துறை அலுவலா்கள், வழித்தட அலுவலா்கள், பறக்கும்படை குழுவினா் ஈடுபடுத்தப்பட உள்ளனா். இதனிடையே பல்வேறு மையங்களில் வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
சிவகங்கையில் தாய்த்தமிழர் கட்சியின் சார்பில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் சிவகங்கை மாவட்ட செயலாளர், க.மலைச்சாமி அவர்கள் சிவகங்கை பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் தாய்த்தமிழர் கட்சியின் தலைவர் பி.ம.பாண்டியன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் தாய்தமிழர் ஊடக பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
சிவகங்கை மக்களவைத் தொகுதி பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேவநாதன் யாதவ் இன்று (மார்ச்.25)தனது ஆதரவாளர்களுடன் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். சென்னையைச் சேர்ந்த தேவநாதன் யாதவ் (62) எம்ஏ பிஹெச்டி முடித்துள்ளார். யாதவ மகாசபை தலைவராகவும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவராகவும் உள்ளார். இந்நிகழ்வில் தலைவர் மேப்பல் சக்தி உடனிருந்தார்.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் மற்றும் ஒளிப்பதிவு காட்சிகள்(வீடியோ) மட்டுமே வெளியிட வேண்டும், ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழுவின் அனுமதி பெற்ற, அனுமதிக்கப்பட்ட விளம்பரத்தை மட்டுமே அச்சிடவோ, ஒளிபரப்பவோ வேண்டும். குறிப்பாக, அனுமதி பெற்றுள்ள எண் விளம்பரத்தில் கண்டிப்பாக எளிதில் தெரியும் வண்ணம் இடம்பெற்றிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) அதிமுக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிவகங்கை நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் 25.03.2024 திங்கள் அன்று காலை 12 மணியளவில் சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதால் சிவகங்கை நாடாளுமன்ற இந்தியா கூட்டணி கட்சியின் மாவட்ட, ஒன்றிய,நகர, நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அழைப்பு விடுத்தனர்.
மதுரையிலிருந்து ஷேர் ஆட்டோவில் தாயமங்கலம் மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு மதுரை நோக்கி ஆட்டோ சென்றபோது திருப்பாச்சேத்தி அருகே மாநாடு பாலம் அருகே சென்றபோது ராமநாதபுரத்திலிருந்து மதுரை நோக்கி வந்த கார் ஆட்டோவில் மோதியது. இதில், ஆட்டோவில் இருந்த 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, சிவகங்கையில் எழிலரசி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத் தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் திமுக கூட்டணி 9 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கார்த்திக் சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.