Sivagangai

News April 2, 2025

சிவகங்கை :  கிரிக்கெட் அணி வீரா்கள் தோ்வு

image

19 வயதுக்குட்பட்ட சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் அணி வீரா்கள் தோ்வு சனிக்கிழமை (ஏப்ரல்.5) காரைக்குடியில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வில் கலந்து கொள்ளும் வீரர்கள் 1.9.2006 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும். வெள்ளை சீருடை, ஷூ, அணிந்து வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு கைப்பேசி எண் 9865615649 -இல் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

News April 2, 2025

சிவகங்கை: 2 மடங்கு பணம் தருவதாக ஏமாற்றிய நபர்

image

சிவகங்கை : வர்த்தக நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி, சிவகங்கை திரவுபதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த தனசேகரன் என்பவரிடம், ரூ.5 லட்சம் வாங்கி கொண்டு லாபம் தராமலும், பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றிய எமனேஸ்வரத்தை சேர்ந்த துரைராஜ் என்பவர் மீது சிவகங்கை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News April 2, 2025

தேவகோட்டை : நகைக்கடை உரிமையாளரை ஏமாற்றிய நபர்

image

தேவகோட்டையை சேர்ந்த சேகர்(38) வங்கியில் நகைகளை வைத்து ரூ.12,20,000 கடன்பெற்றுள்ளார். மதுரையை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் சிவக்குமாரை(47) சேகர் மற்றும் அவரது கூட்டாளிகள் சந்தித்து, நகைகளை திருப்பி, மீண்டும் வைத்து மீதம் உள்ள தொகையை மட்டும் திருப்பிதர பேசியுள்ளனர். சிவக்குமார் பணம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட சேகர் நகையை திருப்பாமல் தலைமறைவாகிய நிலையில் சேகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

News April 1, 2025

காக்கும் கரங்கள் திட்டத்தில் பயன்பெற அழைப்பு

image

முன்னாள் படைவீரர் நலனுக்காக ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் படை வீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

News April 1, 2025

தொழில் முனைவோர்கள் பதிவு செய்யலாம் – ஆட்சியர்

image

ஈரோடு மாவட்டம் ஈங்கூர் மற்றும் திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் தொழிற்பேட்டைகளில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கு தொழிற் கூடங்களை குத்தகை மற்றும் வாடகை முறையில் வழங்க திட்டமிட்டுள்ளது. விருப்பமுள்ள தொழில் முனைவோர்கள் https://forms.gle/fZPDgyWUToAAUobt7 என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

News April 1, 2025

சிவகங்கையில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக ஏப்.4,5 அன்று விருதுநகர், தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 1, 2025

விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலை

image

சிவகங்கை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் விளையாட்டு பயிற்சியாளர் பணியிடத்திற்க்கு 1 காலிபணியிடம் உள்ளது. ஏதாவது ஒர் பட்டபடிப்பு படித்திருக்க வேண்டும். தகுதியான நபர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் வழஙகப்படும். விண்ணப்பதாரர்கள் நேரடியாக வாக்-இன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். <>இந்த லிங்க்ல்<<>> குறிப்பிட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் SDAT-Sports District Centre-க்கு ஏப்ரல்.3 ல் செல்லவும்

News April 1, 2025

சோலார் பிளான்ட் காவலாளி தீயில் பலி

image

பெத்தானேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். 2 மகன்களுடன் திருப்புவனத்தில் வசித்து வந்தார். மடப்புரம் அருகே மஞ்சக்குடியில் உள்ள தனியார் சோலார் பிளான்டில் 8 வருடங்களாக காவலாளியாக பணிபுரிந்தார். நேற்று மதியம் வளாகத்தில் உள்ள காய்ந்த புற்களுக்கு சிலர் தீ வைத்ததாகவும் அணைக்க சென்ற சேகர் அதில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிகின்றனர்.

News March 31, 2025

சிவகங்கை: ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

சிவகங்கை மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம்.ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் பகிரவும்.

News March 31, 2025

சிவகங்கையில் அச்சத்தில் போலீஸ் குடும்பத்தினர்

image

சிவகங்கை வாராச்சந்தை அருகே நகரம் போலீஸ் ஸ்டேஷன் போலீசார் குடியிருப்பு வளாகத்தில் 8 அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளது. ஒவ்வொரு குடியிருப்பிலும் 8 வீடுகள் உள்ளது. இந்த குடியிருப்புகள் கட்டி 25 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இக்கட்டடங்கள் முறையான பராமரிப்பின்றி கூரைகள் பெயர்ந்து விழுகின்றன. அடிக்கடி கான்கிரீட் சிமின்ட் காரைகள் பெயர்ந்து விழுவதால் போலீஸ் குடும்பத்தினர் அச்சத்தில் தவிக்கின்றனர்.

error: Content is protected !!