India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மக்களவை தொகுதியில் 4ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இதில், திமுக கூட்டணி (காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம்-82182, அதிமுக (சேவியர் தாஸ்-43950, பாஜக வேட்பாளர் தேவநாதன்-31651, நாதக வேட்பாளர் எழிலரசி-28146, 4வது சுற்று முடிவில் 38232 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம்
முன்னிலையில் உள்ளார்.
சிவகங்கை மக்களவை தொகுதியில் 3ஆம் சுற்று முடிவு வெளியாகியுள்ளது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 60,839 வாக்குகள் பெற்று 25,532 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சேகர் தாஸ் 34,307 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார். பாஜக வேட்பாளர் தேவநாதன் 23,433 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 21,544 வாக்குகள் பெற்றுள்ளார்.
சிவகங்கை மக்களவை தொகுதியில் 5 சட்டமன்ற தொகுதிகளில் முதல் சுற்று நிலவரம் சற்று முன் வெளியானது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 14,319 வாக்குகள் பெற்று 5,397 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். முதல் சுற்றுகளின் முடிவில் காங்., 14,319, அதிமுக 9,022 நாம் தமிழர் 4,932, பாஜக 4,878 வாக்குள் பெற்றுள்ளன.
சிவகங்கை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 1,803 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். முதல் சுற்றின் முடிவுகள் வெளியாகியுள்ளனர். இதில், கார்த்தி சிதம்பரம் 3,727 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் 2,060, பாஜக 811, நாம் தமிழர் 1,079 வாக்குகள் பெற்றுள்ளன.
சிவகங்கை மக்களவை தொகுதி(31)ல் போட்டியிட்ட வேட்பாளரின் வாக்குகள் 6 தொகுதியில் 1873 வாக்குச்சாவடியில் 84 (இவிஎம்) இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. சிவகங்கை தொகுதிக்கான வெற்றி வேட்பாளர் யார்? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். காங்கிரஸ் கட்சி பாஜக கூட்டணி கட்சி நாம் தமிழர் கட்சி ஆகியோரிடம் போட்டி நிலவுகிறது.
நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
2024 மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் மொத்தம் 63.94 % வாக்குகள் பதிவாகி உள்ளது. வேட்பாளராக காங்கிரஸ் சார்பாக கார்த்தி சிதம்பரமும் , அதிமுக சார்பில் சேகர் தாஸும், பாஜக சார்பில் தேவநாதன் யாதவும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News-னுடன் இணைந்திருங்கள்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 10க்கும் மேற்பட்ட ATM மிஷின்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக இந்த ATM மிஷின்களால் மக்களுக்கு எந்தவித உபயோகமும் இல்லாமல் இருந்து வருகிறது. அனைத்து ATM மிஷின்களிலும் பணம் இல்லாமல் இருப்பதும் பழுதாகி இருப்பதாகவே உள்ளது. ஒவ்வொரு ATM மிஷனிலும் மக்கள் ஏறி இறங்கி பணம் இல்லாமல் ஏமாற்றத்துடன் வருகிறார்கள். வங்கியில் புகார் செய்தாலும் நடவடிக்கை இல்லை எனக் கூறப்படுகிறது.
சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரியில், 2024-2025ம் கல்வியாண்டில் பொது பிரிவினருக்கான மாணவியர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது. இளநிலை பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கையில் ஜூன் 10ம் தேதி இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல், தாவரவியல், விலங்கியல், மனையியல் ஆகியவை கலந்தாய்வு நடைபெறும் என்று கல்லூரி முதல்வர் சுடர்க்கொடி கண்ணன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை அன்னியேந்தல் ஊராட்சியில் மத்திய, மாநில அரசின் பணம் நூதன முறையில் கொள்ளை அடிக்கப்படுவதாக ஊராட்சி மன்ற தலைவர் மாயாண்டிச்சாமி மீது வேல்முருகன் என்பவர் குற்றம்சாட்டியுள்ளார். இது சம்பந்தமாக பல புகார்கள் மானாமதுரை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க போவதாக கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.