India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கையில் உள்ள சிறுகூடல்பட்டி என்னும் சிறிய கிராமத்தில் பிறந்த கவிஞர் கண்ணதாசனை நினைவு கூறும் வகையில், இந்த மணிமண்டபம் 1990இல் கலைஞர் கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992இல் ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதில் கண்ணதாசனின் சிலை, 2400 புத்தகங்கள், அவரின் அரிய புகைப்படங்கள் போன்றவை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சுற்றியுள்ள பகுதியில் யாராவது விபத்தில் இறந்தால் அல்லது தற்கொலை செய்து கொண்டாலே அவர்களது உடலை பிரேத பரிசோதனைக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டிய சூழல் உள்ளது. இதனால் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க காளையார்கோவில் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட கிராம பகுதிகளில் தொடர்ந்து சில நாட்களாக சரிவர மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றன . அடிக்கடி மின்தடை ஏற்படுவதனால் தொழிலாளர்கள் குழந்தைகள், பெரியவர்கள் இரவு நேரங்களில் தூக்கமின்றி மிகவும் சிரமப்படுகின்றனர். மின்தடையை சரி செய்து கொடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
எஸ்.புதூர் துணை மின்நிலையத்தில் குளத்துப்பட்டி மின்பாதையில் உள்ள மின்கம்பிகளை தரம் உயர்த்தும் பணி நடைபெறவுள்ளது. பராமரிப்பு பணியின்போது வாராப்பூர் அரியாண்டிபட்டி குளத்துப்பட்டி கிழவயல் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று புதன்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது, எதிர்க்கட்சிகளை முடக்குவதற்காகவும், பாஜகவுக்கு எதிராக செயல்படும் தலைவர்களை சட்ட சிக்கல்களில் சிக்க வைத்து செயல்படாமல் வேலையை பாஜக அரசு செய்து வருவதாக சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டினார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சிவகங்கை மாவட்டத்தின் சார்பாக கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் ஏப்.2ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு இரண்டு கட்டங்கள் பயிற்சி நிறைவு பெற்றுள்ளது. தற்போது மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி நடைபெற்றுக் வருகிறது. எனவே நீச்சல் கற்றுக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் உரிய பயிற்சித்தொகையினை செலுத்தி கற்றுக்கொள்ளலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
அக்னி நட்சத்திரம் வெயில் சுட்டெரிக்கும் வேளையில் பொதுமக்கள் உடல் சூட்டை தணிப்பதற்காக இளநீர் கடைகளை தேடி வருகிறார்கள். இதனால் இளநீர் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. குறிப்பாக கோவை மாவட்டத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் இளநீர் திருப்புவனம் சாலையோர கடைகளில் ஒரு இளநீர் 70ரூபாய்க்கும், செவ்விளநீர் 80 ரூபாயக்கும் விற்கப்படுகிறது. விலை அதிகம் என்றாலும் பொதுமக்கள் இளநீரை விரும்பி பருகுகிறார்கள் .
சிவகங்கை மாவட்டத்தில் 13 முதல் 19 வயது வரை உள்ளவா்களுக்கு இலவச கிரிக்கெட் பயிற்சி முகாம் மே 10 -ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை காரைக்குடி அழகப்பா உடற்கல்வித் துறை ‘பி ’ வலைப்பயிற்சி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதன் வயது வரம்பு 13 வயது முதல் 19 வயது வரை மட்டுமே. மேலும் விவரங்களுக்கு 7010325125 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கீழையப்பட்டி அழகுள்ள விநாயகா் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு நேற்று நடைபெற்றது. கீழையப்பட்டி , துலாவூா் , குன்றக்குடி, நாச்சியாபுரம், கொரட்டி, தட்டட்டி என சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த 5000-க்கும் மேற்பட்டோா் இந்த மஞ்சுவிரட்டில் கலந்து கொண்டனா்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு இன்று காலை 9.30 மணிக்கு தேர்வுத்துறை வெளியிட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் பன்னிரண்டு வகுப்பு தேர்வில் மாநில அளவில் 97.42% இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு ஆறாம் இடத்தில் இருந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.