India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் 97.02 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 95.54 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 98.43 % தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் கடந்த மார்ச். 16ஆம் தேதி முதல் ஏப்.19ஆம் தேதி வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.65,91,730 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தொகையில் இருந்து , உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பதன் அடிப்படையில் ரூ.54,02,160 தொகை விடுவிக்கப்பட்டு, உரிய நபர்களிடம் வழங்கப்பட்டுள்ளது என சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் விண்ணப்பங்களை இணைய தளத்தில் பதிவு செய்ய கல்லூரியின் கணினி ஆய்வகத்தில் இலவச சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. எனவே, மாணவ, மாணவிகள் இந்த இலவச சேவை மையத்தை அணுகி, தங்களது விண்ணப்பத்தினை இறுதி நாளான மே.25ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என அக்கல்லூரியின் முதல்வர் முனைவர் க.துரையரசன் இன்று தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் இன்று (மே.09) 4 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் இன்று (மே.09) நண்பகல் 1 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும். கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை மாவட்டத்தில் 2023 – 24 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட தொழில் முனைவோர்களுக்கு, மாநில மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு விருதுகள் தமிழக அரசால் வழங்கப்படவுள்ளது. எனவே தகுதியான தொழில் முனைவோர் awards.fametn.com என்ற தளத்தின் வாயிலாக மே 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அறிவுறுத்தியுள்ளார்.
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் இன்று(மே 9) காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வடகரையில் ஸ்ரீலஸ்ரீ எம்பெருமான் ஈஸ்வர சித்தர் ஆலயத்தில், பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறிவந்த 97 வயதான ஸ்ரீ சுருளி சித்தர் நேற்று(மே 8) இயற்கை எய்தினார். பாஜக கிழக்கு ஒன்றிய தலைவர் மோடி பிரபாகரின் குருநாதராக கூறப்படும் இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் மறைந்துள்ளார். சித்தர் இறந்த செய்தி பக்தர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பிப்.20 ஆம் தேதி முதல் நடைபெற்ற பணியாளர் தேர்வாணையத்தின் SSC (GDC) எழுத்து தேர்வில் சிவகங்கை மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு உடற்தகுதித் தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு தற்போது தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக வழங்கப்படவுள்ளது என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
கூட்டுறவுத்துறையின் கீழ் சிவகங்கையில் 32 மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், 125 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. 2024 ஏப்.முதல் 2025 மார்ச் வரை அனைத்து மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் நகை கடன் வழங்க ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 125 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நகை அடமான கடன் வழங்க ரூ.490 கோடி, பயிர் கடன் வழங்க ரூ.200 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.
Sorry, no posts matched your criteria.