India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கையில் பழமலை நகரில் 300க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டி மன்னர் மேல்நிலைப் பள்ளியிலும் தனுஷ் கே. ஆர் மேல்நிலைப் பள்ளியிலும் பத்தாம் வகுப்பு படித்து வந்தனர் இவர்கள் தேர்வு முடிவில் நல்ல மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இதை எடுத்து நேற்று அந்த மாணவர்களை அப்பகுதி பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்
சிவகங்கை மாவட்டம் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் ஏராளமான கிராமப்புற மக்கள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்நிலையில் ஒன்றிய அரசு சார்பில் உயர்த்தப்பட்ட ஊதியம் ரூ.319ஐ இந்த வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்
சிவகங்கை மாவட்டத்தில் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோர் ”அயலகத் தமிழர் நலத்துறை” அல்லது ”குடிபெயர்வோர் பாதுகாப்பு அலுவலர், சென்னை அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்தியத் தூதரகங்களை தொடர்பு கொண்டு, உண்மைத் தன்மையை உறுதி செய்து, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆஷா அஜித் தகவல் தெரிவித்துள்ளார்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சகாயமாதா பள்ளி மாணவி M.கிருத்திகா என்பவர் நேற்று வெளியான பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 498 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாமிடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பெற்று அசத்தியுள்ளார். இவருக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
மாநில கிக் பாக்ஸிங் போட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு அமெச்சூர் பாக்ஸிங் சங்கம் சார்பில் நடந்தது. இதில், 34 கிக் பாக்ஸிங் வீரர்கள் சிவகங்கை மாவட்ட சார்பாக பங்கேற்று 4 தங்க பதக்கங்களையும், 6 வெள்ளி பதக்கங்களையும் 10 வெண்கல பதக்கங்களையும் வென்று தேசிய அளவிலான கிக்பாக்ஸிங் போட்டிக்கு நேற்று தேர்வாகியுள்ளனர்.
சிவகங்கையில் உள்ள கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் தங்கள் கால்நடைகளை வெப்ப அயற்சியில் இருந்து பாதுகாத்திட தேவையான சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு அருகில் உள்ள கால்நடை நிலையங்களை அணுகலாம். செல்ல பிராணிகளை காருக்குள் வைத்து அடைக்கக்கூடாது. வெயிலில் நடமாடவும் விட வேண்டாம். கால்நடைகள் நோய் வாய்ப்பட்டால் 1962 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
வைகை அணையில் இருந்து இன்று பாசனத்திற்காக விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 5 நாட்களுக்கு 915 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படவுள்ளது. இதனால் சிவகங்கை மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ அல்லது ஆற்றை கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 95.45% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 93.2 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 97.33 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் 2ஆம் இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.