India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்புவனம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட டூவீலர், கார்கள் நிரம்பி காயலான் கடை போல் காட்சியளிக்கிறது. காவல் துறை கூறுகையில் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட வாகனங்களை பாதுகாக்க முடியவில்லை மழையிலும், வெயிலிலும் வாகனங்கள் சேதமடைந்து வருகின்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கிடப்பதால் பழைய இரும்பு கடை போல காட்சியளிக்கிறது என்று கூறினார்கள் .
சிவகங்கை மாவட்டத்தில் வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரித்து அதிகவெப்ப நிலை நிலவக்கூடும் என்பதால் வயதானவர்கள், குழந்தைகள் காலை 11.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை அத்தியாவசிய பணிகள் இல்லாமல் வெளியே செல்வதை தவிர்த்தல் வேண்டும். உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு தண்ணீர் பருகுதல் வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் 2023–2024 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாணாக்கர்களின் நலன் கருதி கோடை கொண்டாட்ட நிகழ்ச்சிகள் வருகின்ற மே.7 முதல் மே.17 வரை சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று (மே-3) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் மே தினத்தன்று கடைகள்,உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவன ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.வேலை செய்ய அனுமதிக்க வேண்டுமெனில் 2சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அளிக்க வேண்டும்.பணியில் ஈடுபடுத்த விடுமுறை தினத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் படிவம் பெற வேண்டும் இதில் சிவகங்கை மாவட்டத்தில் 40 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
சிவகங்கை மாவட்டத்தில் வாகனப் புகைப்பரிசோதனை மையங்களின் செயல்பாட்டினை மேம்படுத்திட புதிய PUCC 2.0 Version -ஐ வரும் திங்கட்கிழமை (6.5.2024) முதல் அனைத்து வாகனப் புகைப் பரிசோதனை மையங்களும் நிறுவி வாகனப் புகைப் பரிசோதனைகளை செய்ய வேண்டும். அவ்வாறு, செய்ய தவறும் வாகனப் புகைப் பரிசோதனை மையங்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூடி சீல் வைக்கப்படும் என சிவகங்கை ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை, இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் சாலை கிராமம் அருகே உள்ள களத்தூர் கிராமத்தில் 100ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்திற்கு பேருந்து வசதி இல்லாததால் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து, களத்தூர் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் நிறைவேற்ற கோரி கிராம பொதுமக்கள் சிவகங்கை மாவட்டம் ஆட்சியரிடம் இன்று மனு அளித்துள்ளனர்.
தொழிலாளர் தினமான நேற்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுரை மண்டல இணை கமிஷனர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் விதிமீறி தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்திய 40 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மதுரையில் 114, ராம்நாட்டில் 34, விருதுநகரில் 97 நிறுவனங்கள் மீது நடடிவக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே நேற்று பள்ளித்தம்பம் புனித மூவரசர் தேவாலயத்தில் நவ நாள் திருவிழா பங்குத்தந்தை சூசை சவரி யண்ணன் தலைமையில் சிறப்பு திருப்பலி மற்றம் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கப்பட்டது. மே.9ஆம் தேதி காலையில் நவ நாள் திருப்பலி, மாலை 4.30 மணிக்கு பொங்கல் விழா இரவு 8 மணிக்கு மின்னொளி தேர் பவனி நடைபெற உள்ளது.
தமிழக அரசு பொது வினியோக திட்டத்தின் கீழ் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்து வருகிறது. இவற்றை சிலர் முறைகேடாக கடத்தி, கள்ளச்சந்தையில் அதிக லாபத்தில் விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், ரேஷன் பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தல் குறித்து 1800 599 5950 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் புகாரளிக்கலாம் என சிவகங்கை உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரில் சாய் யோகா ஸ்போர்ட்ஸ் அகாடமி, பாரதிய சுவாமி விவேகானந்தா அகாடமி, யோகா ஸ்போர்ட்ஸ் அசோசியன் சார்பாக உலக அளவிலான யோகா போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இதில் 12 வயது பிரிவில் சிவகங்கை சிவம் மார்ஷல் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் பங்கேற்ற மாணவி சஞ்சனா முதலிடம் பெற்று அசத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.