Sivagangai

News May 23, 2024

துவரம் பருப்பு, பாமாயில் விநியோகம் இல்லை

image

சிவகங்கை மாவட்டத்தில் மே மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயில் விநியோகிக்கப்படவில்லை. இவை எப்போது வரும் எனத் தெரியாமல் குடும்ப அட்டைதாரா்கள் தினமும் நியாயவிலைக் கடைகளுக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனா். சில இடங்களில் கடை ஊழியர்களிடம் வாக்குவாதமும் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

News May 23, 2024

மஞ்சுவிரட்டு நடத்த உயா்நீதிமன்றம் அனுமதி

image

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டியில் ஜல்லிக்கட்டு, கல்லல் அருகே உள்ள நாவல்கனியான்மடம் கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி வழங்கி உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட் டது.இந்த ஊா்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகளை நடத்துவதற்கான அனுமதியை அரசிதழில் வெளியிடுவதற்கான நடவடிக்கையை ஆட்சியா் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.

News May 22, 2024

சிவகங்கை: அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆய்வு

image

சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணிக்கென நியமிக்கப்பட்டுள்ள மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு சீரற்ற மயமாக்கல் பணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அஜித் முன்னிலையில் இன்று நடைபெற்றது. உடன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜான்சன், தேர்தல் வட்டாட்சியர் மேசியாதாஸ் உட்பட பலர் உடனிருந்தனர்.

News May 22, 2024

சிவகங்கை: மானாமதுரை இந்தியன் வங்கி கொள்ளையன் கைது

image

மானாமதுரையில் கடந்த மே.20 ஆம் தேதி இந்தியன் வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றது. கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் மானாமதுரை துணை கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை காவல்துறையினர் மானாமதுரை மேட்டு தெருவை சேர்ந்த பிரசாந்த்(31) என்பவரை இன்று கைது செய்தனர்.

News May 22, 2024

சிவகங்கை: விடாமல் துரத்தும் நாய்கள்

image

காரைக்குடி வாட்டர் டேங்க் அருகே உள்ள பிள்ளையார் கோவில் தெப்பக்குளத்தை சுற்றி பொது மக்கள் காலை மாலை நடைபயிற்சி செய்வது வழக்கம். இங்கு சிறுவர்கள் விளையாட பூங்காவும் அமைந்துள்ளது. இங்கு சுற்றி தெரியும் தெரு நாய்களால் சிறுவர்களும் பெரியவர்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். ஏதேனும் விபரீதம் நடக்கும் முன் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News May 22, 2024

கனமழையில் சாய்ந்த வேப்பமரம்

image

திருக்கோஷ்டியூர் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே சிவகங்கை சாலையில் உள்ள வேப்பமரம் சாய்ந்தது. நேற்று பெய்த கனமழை காரணமாக இந்த வேப்ப மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் இப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதோடு , போக்குவரத்தும் பல மணி நேரம் பாதிக்கப்பட்டது. பின்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விரைந்து வந்த அதிகாரிகள் சாய்ந்த மரத்தை ஜேசிபி கொண்டு அகற்றி போக்குவரத்திற்கு வழிவகுத்தனர்.

News May 21, 2024

சிவகங்கை: மழை பாதிப்புகளை தெரிவிக்கலாம்

image

வானிலை ஆராய்ச்சி மையம் முன்னறிவிப்பின்படி, சிவகங்கை மாவட்டத்தில் கன முதல் மிக கனமழையும் பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மழையால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்துத் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டணமில்லா உதவி தொலைபேசி எண் 1077, 04575 – 246233 ஆகிய எண்கள் மூலம் குறைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

News May 21, 2024

இளைஞர் கொலை வழக்கில் 6 பேர் கைது

image

சிவகங்கை அருகே உள்ள வேலுநாச்சியார் தெருவை சேர்ந்த நிதிஷ் (24) என்பவரை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்வதில் பாண்டி செல்வம், குமனேஸ்வரன் , பாலசுப்ரமணியன், அமர்நாத், 17 வயதான இரு சிறார்கள் என்பதும் மேலும் முதல்குற்றவாளியான சுகுமாறன் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது. பிறகு அவர்கள் அனைவரையும் கைது செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

News May 21, 2024

பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை துவக்கம்

image

சிவகங்கை அருகே அம்பலக்காரன்பட்டி அரசு பாலிடெக்னிக்கில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://www. tnpoly. in என்ற இணையதளம் மூலம் 24.5.2024ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாதவர்கள் மாவட்ட சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் நேற்று அறிவித்துள்ளார்..

News May 21, 2024

சிவகங்கை: மாணவர்களுடன் கலந்துரையாடல்

image

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே விசாலயன்கோட்டை சேது பாஸ்கரா வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி நிறுவனத்திற்கு சிவகங்கை முன்னாள் எம்பியும் முன்னாள் மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சருமான சுதர்சன நாச்சியப்பன் கல்லூரிக்கு வருகை புரிந்தார். பின்னர் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் வேளாண்மை குறித்து கலந்து உரையாடினார்.

error: Content is protected !!