Sivagangai

News May 13, 2024

சட்டப்பணியாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

image

சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, வட்ட சட்டப்பணிகள் குழுவில் தன்னார்வ சட்டப்பணியாளர் பணிக்கு ஓய்வு அரசு ஊழியர், ஆசிரியர், மூத்த குடிமக்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை<> Ecourt <<>>website -ல் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மே 24 மாலை 5:00 மணிக்குள் நேரிலோ, தபால் மூலம் முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு, நீதிமன்ற வளாகம், சிவகங்கையில் அனுப்பிவைக்க வேண்டும்.

News May 12, 2024

லிச்சி பழம் கிலோ 600 ரூபாய்க்கு விற்பனை

image

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பகுதியில் கோடைக்கு குளிர்ச்சி தரும் விதத்தில் லிச்சி பழம் விற்பனைக்கு வந்துள்ளது. இப்பழ சீசன் துவங்கியதை அடுத்து காரைக்குடிக்கு இந்த பழம் விற்பனை துவங்கியுள்ளது. மேற்கு வங்காளத்தில் அதிகளவில் விளைகின்றன. அங்கு சீசன் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனைக்கு வந்துள்ளன. காரைக்குடி மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.600க்கு விற்கப்படுகிறது.

News May 11, 2024

சிவகங்கை மழைக்கு வாய்ப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (மே.11) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.

News May 11, 2024

நரிக்குறவர் மாணவர்களுக்கு வரவேற்பு

image

சிவகங்கையில் பழமலை நகரில் 300க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டி மன்னர் மேல்நிலைப் பள்ளியிலும் தனுஷ் கே. ஆர் மேல்நிலைப் பள்ளியிலும் பத்தாம் வகுப்பு படித்து வந்தனர் இவர்கள் தேர்வு முடிவில் நல்ல மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இதை எடுத்து நேற்று அந்த மாணவர்களை அப்பகுதி பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்

News May 11, 2024

சிவகங்கையில் ஊதிய உயர்வு வழங்க கோரி மனு

image

சிவகங்கை மாவட்டம் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் ஏராளமான கிராமப்புற மக்கள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்நிலையில் ஒன்றிய அரசு சார்பில் உயர்த்தப்பட்ட ஊதியம் ரூ.319ஐ இந்த வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்

News May 11, 2024

இளைஞர்கள் இந்திய தூதரகங்களை தொடர்புகொள்ளவும்

image

சிவகங்கை மாவட்டத்தில் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோர் ”அயலகத் தமிழர் நலத்துறை” அல்லது ”குடிபெயர்வோர் பாதுகாப்பு அலுவலர், சென்னை அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்தியத் தூதரகங்களை தொடர்பு கொண்டு, உண்மைத் தன்மையை உறுதி செய்து, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆஷா அஜித் தகவல் தெரிவித்துள்ளார்.

News May 11, 2024

ஜூலை 2இல் துணைத் தேர்வு?

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

News May 11, 2024

சிவகங்கை மாணவி அசத்தல்

image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சகாயமாதா பள்ளி மாணவி M.கிருத்திகா என்பவர் நேற்று வெளியான பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 498 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாமிடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பெற்று அசத்தியுள்ளார். இவருக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

News May 10, 2024

சிவகங்கை மாவட்ட வீரர்கள் தேசிய போட்டிக்கு தேர்வு

image

மாநில கிக் பாக்ஸிங் போட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு அமெச்சூர் பாக்ஸிங் சங்கம் சார்பில் நடந்தது. இதில், 34 கிக் பாக்ஸிங் வீரர்கள் சிவகங்கை மாவட்ட சார்பாக பங்கேற்று 4 தங்க பதக்கங்களையும், 6 வெள்ளி பதக்கங்களையும் 10 வெண்கல பதக்கங்களையும் வென்று தேசிய அளவிலான கிக்பாக்ஸிங் போட்டிக்கு நேற்று தேர்வாகியுள்ளனர்.

News May 10, 2024

கால்நடைகளை பராமரிக்கும் வழிமுறைகள்

image

சிவகங்கையில் உள்ள கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் தங்கள் கால்நடைகளை வெப்ப அயற்சியில் இருந்து பாதுகாத்திட தேவையான சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு அருகில் உள்ள கால்நடை நிலையங்களை அணுகலாம். செல்ல பிராணிகளை காருக்குள் வைத்து அடைக்கக்கூடாது. வெயிலில் நடமாடவும் விட வேண்டாம். கால்நடைகள் நோய் வாய்ப்பட்டால் 1962 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!