India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மக்களே இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6238 டெக்னீசியன் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10,12, ஐடிஐ முடித்தவர்கள் இந்த லிங்க் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.19,900 முதல் ரூ.92,300 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ஜூலை 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க மத்திய அரசு வேலையை வாங்குங்க.
முன்னொரு காலத்தில் கண்டதேவி அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகள் வறட்சி மிகுந்த நிலையில் விவசாயம் இல்லாமல் பஞ்சத்தில் இருந்தது. எனவே இப்பகுதி மக்கள் இக்கோயில் உள்ள இடத்தில் கூடி பிரார்த்திக்க பொன் பொழிந்தது. பொன்னுக்கு மற்றொரு சொல் சொர்ணம். எனவே இக்கோவிலில் உள்ள சுவாமி சொர்ணமூர்த்தி என அழைக்கப்பட்டார் என்பது வரலாறு. இக்கோவில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட கோயிலாகும்.
சிவகங்கை மாவட்டத்தில் இன்று (05.07.25) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் சார்பாக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியை சேர்ந்த அதிகாரிகளின் நம்பர் குறிப்பிடப்பட்டுள்ளது. அல்லது 100 டயல் செய்யலாம். அவசர காலத்திற்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அழைக்கலாம்.
சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் எவரும் பணி புரிவது கண்டறியப்பட்டால் Pencil Portal https://pencil.gov.in முகவரியிலோ 04575-240521 அல்லது Child Help line 1098 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம், அரசினிப்பட்டி ரோடு, காஞ்சிரங்கால், சிவகங்கை என்ற முகவரியிலோ புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
அஜித் மீது நிகிதா ஜூன்.27ஆம் தேதி அளித்த புகாரின் FIR தற்போது வெளியாகியுள்ளது. அதில், தன்னுடைய ஒன்பதரை சவரன் நகைகளை காணவில்லை என்றும்,அஜித் வற்புறுத்தி சாவியை கேட்டதாகவும் FIR-ல் பதிவாகியுள்ளது. ஆனால், நிகிதா முன்னதாக தனது தாயாருக்கு வீல் சேர் கேட்டதற்கு ரூ.500 அஜித் கேட்டதாக தெரிவித்திருந்தார். நிகிதாவின் புகாருக்கும், அவரின் விளக்கத்திற்கும் பல்வேறு முரண் இருப்பது இந்த FIR மூலம் தெரியவந்துள்ளது.
தமிழக அரசின் ஆணைப்படி, ஜூலை 9 முதல் 15ஆம் தேதி வரை சிவகங்கை வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக இளைஞர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டல் மற்றும் திறன் வளர்ச்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள், மகளிர், மாணவர்கள், தொழிற்பயிற்சி மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினருக்கான விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
சிவகங்கை மாவட்டம் சுவஸ்திக் தொண்டு நிறுவன முன்களப் பணியாளர்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணிகள் வருகின்ற ஜுலை.7ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்படவுள்ளது. பொதுமக்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களுக்கு, தகுந்த ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை- மேலூர் ரோடு,புதுப்பட்டி அருகே நேற்று இரவு (4.7.25) நடந்த கொலை வழக்கு தொடர்பாக சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், உறவினர்களுக்கு இடையேயான காதல் விவகாரம் தொடர்பான முன் விரோதத்தால் கொலை நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சிவகங்கை தமறாக்கி கிராமத்தை சேர்ந்த மனோஜ் பிரபு (29). நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சக்கந்தி நோக்கி சென்றுள்ளார்.இந்நிலையில் புதுப்பட்டி அருகே காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று இரு சக்கர வாகனத்தின் மீது மோதி கீழே தள்ளி மனோஜ் பிரபுவை கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். உடன்இருந்த மனோஜ்குமார் நண்பர்கள் உடனடியாக சிவகங்கை நகர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மக்களே உங்க மாவட்டத்தில் எத்தனை அரசு மருத்துவமனை உள்ளது அதன் எண்கள் தெரியுமா..
▶️அரசு தலைமை மருத்துவமனை : 04565-220663
▶️கண்டனுர் :8939727204
▶️காளையார்கோயில் :9842406682
▶️திருப்பத்தூர் : 9486611775
▶️தேவகோட்டை : 9443141627
▶️கானாடுகாத்தான் : 9443501974
▶️சிங்கம்புணரி : 9442511559
▶️பூலாங்குறிச்சி : 9003054087
கண்டிப்பாக SHARE பண்ணுங்க ஆபத்தில் இருக்கும் யாருக்காவது உதவும்.
Sorry, no posts matched your criteria.