Sivagangai

News April 6, 2025

மகிபாலன்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம்

image

சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் அருகே மகிபாலன்பட்டி திருவருள் இல்லத் திருமண மண்டபத்தில் ஏப்ரல்-09, அன்று காலை 10:00 மணிக்கு நடக்கும் மக்கள் தொடர்பு முகாமில் அனைத்து துறை அலுவலர்கள், செயற்பொறியாளர்கள் பங்கேற்கின்றனர். இம்முகாமில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று மனுக்கள் வழங்கி, தீர்வு பெற்று செல்லலாம், என மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News April 6, 2025

சிவகங்கை: 15,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தில் விற்பனையாளர் பிரிவிற்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. இந்த வேலைக்கு மாதம் ஊதியம் 15,000 வழங்கப்படுகிறது. முன் அனுபவம் தேவையில்லை. விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் செய்யவும். *வேலை தேடும் அனைவருக்கும் ஷேர் செய்யவும்*

News April 6, 2025

சிவகங்கை: பங்குசந்தை முதலீடு ஆசை காட்டி ரூ.26 லட்சம் மோசடி

image

தேவகோட்டையைச் சேர்ந்தவர் சந்தோஷ் என்பவரின் மனைவி ப்ரீத்தி. கடந்த ஜனவரி மாதம் வாட்சப்பில் ஒருவர் தன்னை பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசராக ப்ரீத்திக்கு அறிமுகமானார். அவரிடம் அறிமுகமான கீர்த்தி 10-ற்கும் மேற்பட்ட வங்கி கணக்கில் 14 பரிவர்த்தனைகளில் 26 லட்சத்து 4 ஆயிரம் அனுப்பினார். பணத்தைப் பெற்ற அந்த நபர் முதலீட்டிற்கான லாபத்தை தரவில்லை. பிரீத்தி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் விசாரணை.

News April 5, 2025

மீன் குஞ்சு வளர்க்க மாவட்ட ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டம் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய மீன் குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைத்தல், கொல்லைப்புற அலங்கார மீன் வளர்ப்பு நிலையம், சிறிய அளவிலான பயோ பிளாக் மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்க ஆதிதிராவிடர் பிரிவினர் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் 5/3 யூனியன் வங்கி மாடியில் பெருமாள் கோவில் தெரு சிவகங்கை 04575 -240848 என்ற எண்ணில் விண்ணப்பித்து பயன்பெற ஆட்சியர் தகவல்.

News April 5, 2025

இலங்கைக்கு கஞ்சா கடத்தல்? – மூவர் கைது

image

திருச்சி-ராமேஸ்வரம் செல்லும் பேருந்தில் கஞ்சா கடத்தி வருவதாக தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் கௌதம்-க்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பேருந்தில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.தூத்துக்குடியைச் சேர்ந்த மகாராஜன் உள்ளிட்ட மூவர் ஆந்திராவில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி கடத்தி சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.மூவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 5, 2025

சிவகங்கையில் ரூ.25 ஆயிரத்தில் வேலை

image

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20 க்கும் மேற்பட்ட சில்லரை விற்பனை மேலாளார் காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு பட்டப்படிப்பு படித்த 25 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். <> இங்கு கிளிக் செய்து <<>>மே மாதம் 31-க்குள் விண்ணப்பிக்கலாம். உணவு மற்றும் தங்குமிடம் இலவசம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்க.

News April 5, 2025

மகளுக்கு பாலியல் தொந்தரவு தந்தைக்கு வாழ்நாள் சிறை

image

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 47 வயது கட்டட தொழிலாளி 2020 ல் 8 வயது மகளை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். 2020 ல் போலீஸ் ஸ்டேஷனில் தந்தைக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. தற்போது இவ்வழக்கில் தொழிலாளிக்கு வாழ்நாள் சிறையும், ரூ.4,100 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

News April 4, 2025

போக்சோ வழக்கில் 4 ஆண்டுகள் ஆயுள் தண்டனை

image

திருப்புவனம் அருகே வயல்சேரி கிராமத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 9 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி (47) என்பவர் பாலியல் வன்புணர்வு செய்ததாக அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு சிவகங்கை நீதிமன்ற நீதிபதி கோகுல் முருகன் அமர்வு முன்னிலையில் இன்று (ஏப்.04) வந்தது. இதில் பால்பாண்டிக்கு 4 ஆண்டுகள் ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

News April 4, 2025

கச்சநத்தம் சம்பவம் – ஆட்சியர் ஆஜராக உத்தரவு

image

சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பட்டியல் இன மக்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க உத்தரவிட்ட வழக்கில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது ஏன்? என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி பட்டு தேவானந்த் கேள்வி எழுப்பியுள்ளார். கச்சநத்தம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதேவி என்பவர் தொடர்ந்த வழக்கில் ஏப்.21ல் சிவகங்கை ஆட்சியர் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

News April 4, 2025

ஆம்புலன்சில் பணிபுரிய வேலைவாய்ப்பு முகாம்

image

சிவகங்கையில் 102 மற்றும் 108 ஆம்புலன்சில் பணிபுரிய வேலைவாய்ப்பு முகாம் ஏப்.5 ஆம் தேதி சிவகங்கை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறுகிறது.சுகாதார ஆலோசகராக பணிபுரிய பி.எஸ்.சி.,நர்சிங் ஜி.என்.எம்., ஏ.என்.எம்., இதில் ஏதாவது ஒரு டிகிரி முடிக்க வேண்டும். வயது 19 முதல் 30க்குள் இருக்க வேண்டும். விபரங்களுக்கு 044 – 28888060 / 89259 – 41977 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.வேலை தேடுவர்களுக்கு SHARE செய்யவும்.

error: Content is protected !!