Sivagangai

News April 12, 2025

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் கவனத்திற்கு

image

சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த இளைஞர்கள், டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான (Diploma in Aari Embroidery and Hand Printing On Textiles) பெறுவதற்கு, தாட்கோ இணையதளத்தின் www.tahdco.com வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று (ஏப்.12) தெரிவித்துள்ளார்.

News April 12, 2025

சிவகங்கை: பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கும் கோயில்

image

சிவகங்கை, நாட்டரசன் கோட்டை பகுதியில் அருள்மிகு கண்ணுடைய நாயகி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு களியாட்ட திருவிழா 48 நாட்களுக்கு பாரம்பரிய முறைப்படி நடைபெறும். இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இந்த கோயிலில் வந்து வேண்டினால் திருமணத் தடை, குழந்தை பாக்கியம், கண் சம்பந்தப்பட்ட நோய்கள் தீர்வதாக பக்தர்கள் நம்புகின்றனர்.*மற்றவர்களுக்கு பகிரவும்*

News April 12, 2025

சிவகங்கை: மாநில அளவிலான ஹாக்கி போட்டி துவக்கம்

image

சிவகங்கையில் மாநில அளவிலான ஆடவர் ஹாக்கி போட்டி இன்று மாவட்ட திறந்தவெளி விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் கோவில்பட்டி, புதுக்கோட்டை, ராஜபாளையம், திருச்சி, நெய்வேலி, திருநெல்வேலி, தென்மண்டல காவல்துறை, காரைக்குடி, சிவகங்கை உள்ளிட்ட அணிகள் பங்கேற்கவுள்ளனர். இப்போட்டியில் முதல் 4 இடங்களை பெறும் அணிகளுக்கு முறையே ரூ 51,000, ரூ 31,000, ரூ.21,000, ரூ.11,000 என ரொக்கப் பரிசுகளும் வழங்கப்படுகிறது.

News April 12, 2025

லஞ்சம் வாங்கிய நகராட்சி வரிவசூலிப்பாளர் கைது

image

சிவகங்கையை சோ்ந்த கணேசன் என்பவரிடம் வீட்டுக்கு சொத்து வரி பெயா் மாற்றம் செய்ய சிவகங்கை நகராட்சி வரிவசூலிப்பாளர் பாலமுருகன் ரூ.9,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. லஞ்சம் தர விரும்பாத கணேசன் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பேரில், ரசாயனப்பொடி தடவிய ரூபாயை பாலமுருகனிடம் நேற்று கொடுத்தாா். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும், களவுமாக பிடித்து பாலமுருகனை கைது செய்தனர்.

News April 11, 2025

சத்துணவு மையங்களில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாகவுள்ள 427 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வரும் 26.04.2025ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று (ஏப்.11) தெரிவித்துள்ளார். Share.

News April 11, 2025

சிவகங்கை: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள் 

image

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 9 தாசில்தார்களின் செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. முக்கிய கோரிக்கைகள், புகார்களுக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்.
சிவகங்கை – 9445000650, மானாமதுரை – 9445000651, இளையான்குடி – 9445000652, திருப்புவனம்- 9788531396, காளையார்கோவில் – 9843358548, தேவக்கோட்டை – 9445000649,  காரைக்குடி – 9445000648, திருப்பத்தூர்- 9445000647, சிங்கம்புணரி -9994373175 *ஷேர் பண்ணுங்க*

News April 11, 2025

ரேஷன் கார்டில் திருத்தம் செய்யணுமா?

image

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களைச் இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை. ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE செய்து உதவவும்.

News April 10, 2025

கட்டுமான தொழிலாளர்களுக்கு உதவித் தொகை – ஆட்சியர் 

image

தொழிலாளர் நல உதவி கமிஷனர் அலுவலகம் மூலம் கட்டுமான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் சுகாதாரம் காக்கும் வகையில் அவர்களுக்கு இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, டயாலிசிஸ், ஆஸ்துமா, பக்கவாதம் போன்ற சிகிச்சை மேற்கொண்டு வரும் நோயாளிகளுக்கு உதவி தொகை ரூ.12,000 வீதம் இரு தவணையாக ரூ.25,000 (ஆண்டுக்கு மட்டும்) வழங்கப்படும் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News April 10, 2025

வெட்டுடையா காளி கோயிலில் ஏன் காசு வெட்டிப் போடுகிறார்கள்?

image

சிவகங்கை அரியாக்குறிச்சியில் உள்ள வெட்டுடையா காளி கோயில் மாவட்டத்தின் ஒரு முக்கிய கோயிலாகும். இங்கு காளி எட்டு கைகளுடன் அசுரனை வதம் செய்தபடி காட்சி கொடுக்கிறாள். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, துரோகம், நீதி கிடைக்க இந்தக் கோயிலில் காசு வெட்டிப் போட்டு வழிபடுகின்றனர். இந்த அநியாயங்களை எல்லாம் காளி தட்டிக் கேட்பால் என்பது நம்பிக்கை. மாலையில் காளி மீது சூரிய ஒளி விழும்படி கோயில் அமைந்துள்ளது ஒரு சிறப்பு.

News April 10, 2025

காரைக்குடி 1000 ஜன்னல் வீடு பற்றி தெரியுமா?

image

காரைக்குடியில் உள்ள ஆயிரம் ஜன்னல் வீடு மிகவும் பிரபலமாகும். 1941ஆம் ஆண்டு 20,000 சதுர அடி பரப்பில் கட்டப்பட்ட இந்த மாளிகை அந்த காலத்திலேயே சுமார் ரூ.1.25 லட்சம் செலவில் கட்டப்பட்டது. இந்த வீட்டில் 25 பெரிய அறைகள் மற்றும் ஐந்து பெரிய ஹால்கள் உள்ளன. மேலும் வீட்டில் சுமார் 20 கதவுகள் மற்றும் 1000 ஜன்னல்கள் உள்ளன. இதன் பாரம்பரியம் மாறாமல் தற்போது வரை இந்த வீடு பாதுகாக்கப்பட்டு வருகிறது. Share It.

error: Content is protected !!