Sivagangai

News August 8, 2025

சிவகங்கையில் 39 சிறப்பு முகாம்கள்

image

சிவகங்கை மாவட்டத்தில் வாரத்திற்கு வீடுதோறும் 39 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முகாம்கள் குறித்த தகவலுக்கு 104 இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம். பொதுமக்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க முகாம்களைப் பயன்படுத்தி, “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் நலன்களை முழுமையாக பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

News August 8, 2025

கீழடி அகழ்வாராய்ச்சிக்கு அங்கீகாரம் அளிக்க கோரிக்கை

image

சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்ற நடிகர் கமலஹாசன் நேற்று மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை சந்தித்தார். அப்பொழுது கீழடி அகழ்வாராய்ச்சிக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டியும், தமிழின் தொன்மை, தமிழ் நாகரிகத்தின் பெருமையை இந்த உலகிற்கு உரக்க சொல்ல பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

News August 8, 2025

சிவகங்கையில் இலவச தையல் மிஷின் பெற விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது.ஆண்டுக்கு ரூ.72,000-க்கு கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு சிவகங்கைமாவட்ட சமூக நல அலுவலரை 04575-240426 அணுகவும். இத்தகவலை SHARE செய்யவும்.

News August 8, 2025

சிவகங்கையில் 18 ஆயிரம் பேர் பாதிப்பு

image

சிவகங்கையில் நாய்கள் கடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 18,033 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.இது மக்களிடையே பெறும் அச்சத்தை ஏற்படுத்தியள்ளது. முக்கியமாகக் குழந்தைகள் வைத்திருப்போருக்கு இந்த செய்தியை SHARE செய்து விழிப்புணர்வுடன் இருக்க சொல்லுங்கள்.

News August 8, 2025

அஜித்கொலை – நண்பரே மிளகாய் பொடி வாங்கிக் கொடுத்த அவலம்

image

திருப்புவனம்: அஜித் குமார் கொலை வழக்கில் இன்று சிபிஐ அதிகாரிகள்
மடப்புரம் கோவில் பகுதியில் விசாரணை நடத்தினர். இதில் இங்குள்ள கார் பார்க்கிங் அருகே உள்ள ஒரு மளிகைக் கடையில், அஜித் குமாரின் நண்பர் பிரவீன் குமார், காவல்துறையினர் கூறியதற்கிணங்க, மிளகாய்ப்பொடியை வாங்கி வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவல் விசாரணையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News August 7, 2025

சிவகங்கை: இலவச வேலை வாய்ப்பு பயிற்சி..!

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழகம் சார்பில், இலவச வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு 21 வயது முதல் 30 வயது வரை உள்ள டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது உணவு மற்றும் இருப்பிடம் அரசு சார்பில் வழங்கப்படும். பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றவுடன், வேலை வாய்ப்பும் பெற்று தரப்படும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி <>இந்த லிங்கை கிளிக் <<>>செய்து அப்ளை பண்ணுங்க. SHARE IT..!

News August 7, 2025

சிவகங்கை: குழந்தை வரம் அருளும் கோயில்

image

சிவகங்கை, பட்டமங்கலத்தில் சிறப்பு வாய்ந்த தட்சிணாமூர்த்தி கோயில் உள்ளது. இந்தியாவிலேயே இங்கு மட்டும் தான் தட்சிணாமூர்த்தி கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். கடைசி வியாழன் தோறும் மூலவருடன் கூடிய ஆலமரத்தை 108 முறை சுற்றி வழிபட்டால் விரும்பிய பெண் மனைவியாக அமைவாள் என்பது ஐதீகம். 5 முறை ஆலயத்தை சுற்றி அங்கபிரதட்சணம் செய்து குழந்தை பேறு பெற்றவர்களும் அதிகம். நீங்களும் ஒருமுறை VISIT பண்ணி பாருங்களேன்.

News August 7, 2025

சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

ஆடி மாத கோயில் விழாக்களை முன்னிட்டு தென் மாவட்டங்களில் இராமேஸ்வரம் உள்ளிட்ட  ஆலய ஸ்தலங்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். எனவே பயணிகள் கோரிக்கைக்கிணங்க சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக இயங்கி வந்த ஹுபிளி – ராமநாதபுரம் சிறப்பு ரயில்கள் இம்மாதம் ஆகஸ்ட்-31 வரை மட்டுமே இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News August 7, 2025

சிவகங்கை: டிப்ளமோ போதும், ரயில்வே வேலை ரெடி

image

சிவகங்கை மக்களே மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் (RITES)நிறுவனத்தில் சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், ரெசிடன்ட் இன்ஜினியர்,டெக்னிக்கல் அசிஸ்டென்ட் காலிப்பணியிடங்களில் பணிபுரிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிப்ளமோ படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். செப்.18க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பித்து மத்திய அரசு ரயில்வே வேலையை CONFIRM பண்ணுங்க. வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 7, 2025

சிவகங்கை: IOB வங்கியில் வேலை..இன்று கடைசி நாள்..APPLY

image

சிவகங்கை மக்களே, பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில், அப்ரண்டீஸ் பணிக்கு தமிழ்நாடு உட்பட மொத்தமாக 1500 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி படித்தவர்கள் இந்த வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்று (ஆகஸ்ட்.07) கடைசி நாளாகும். இந்த வேலைக்கு ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> செய்யவும். வேலை தேடுபவர்களுக்கு இதை SHARE செய்து உதவவும்

error: Content is protected !!