India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிவகங்கை மாவட்டம், சூரக்குளத்தில் நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர்கள் மருது பாண்டியர்கள் திருவுருவச் சிலைகளை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். பின்னர், மருதுசகோதரர்கள் குறித்த காணொலிக் காட்சியினை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

சிவகங்கை மாவட்ட மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மதுரை வருகிறார். இதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம், சூரக்குளத்தில் நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர்கள் மருது பாண்டியர்கள் திருவுருவச் சிலைகளை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கவுள்ளார்.

சிவகங்கை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

முளைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராணுவவீரர் கண்ணன். இவருக்கு 12 வயதில் ஒரு பெண் குழந்தையும், 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. விடுப்பில் ஊருக்கு வந்த அவர் தனது தம்பியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ராமலிங்கம்புரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, முன்னாள் சென்ற பைக்கில் மோதி கீழே விழுந்ததில் பின்னால் வந்த கார் அவர் மீது மோதி பலியானார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

செண்பகம்பேட்டையைச் சேர்ந்த கருப்பாயி (வயது 78), வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் தேடிப்பார்த்தும் கண்டு பிடிக்க முடியாத நிலையில் கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, அவர் ஊருணி பகுதிக்கு சென்றது தெரிந்தது. தீயணைப்பு துறையினர் ஊரணியில் இறங்கி தேடியபோது இறந்த நிலையில் அவர் மீட்கப்பட்டார். கீழச்சீவல்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டம், அரசனூர் துணை மின்நிலையத்தில் இன்று (பிப்.21) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் அரசனூர், திருமாஞ்சோலை, இலுப்பக்குடி, பெத்தனேந்தல், ஏனாதி, படமாத்தூர், பச்சேரி, வேம்பத்தூர், பில்லூர், களத்தூர் உட்பட பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

சிவகங்கை மாவட்டம், அரசனூர் துணை மின்நிலையத்தில் இன்று (பிப்.21) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் அரசனூர், திருமாஞ்சோலை, இலுப்பக்குடி, பெத்தனேந்தல், ஏனாதி, படமாத்தூர், பச்சேரி, வேம்பத்தூர், பில்லூர், களத்தூர் உட்பட பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

சிவகங்கை மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட அசம்பாவிதமான சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் காவல்துறை சார்பில், மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று இரவு (20.02.26) ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மக்களே, உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். இங்கு <
Sorry, no posts matched your criteria.