India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலத்தில் (செப்.10) இன்று நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்:
▶️ எருமாபாளையம் முத்தாயம்மாள் திருமண மண்டபம் எருமாபாளையம் ▶️இடங்கணசாலை ஸ்ரீனிவாசா திருமண மண்டபம் செல்வ கணபதி நகர்
▶️ பூலாம்பட்டி கோவில்பட்டி சமுதாயக்கூடம்
▶️வீரபாண்டி சாமி ராசா ஸ்ரீ லட்சுமி திருமண மண்டபம் முருங்கபட்டி
▶️ தலைவாசல் குமாரசாமி திருமண மண்டபம் தலைவாசல் ▶️ஓமலூர் சுபம் திருமண மண்டபம் சரக்கு பிள்ளையூர்

சேலம் கிழக்கு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று (செப்.10) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை சேலம் உடையாப்பட்டி, காமராஜர் நகர் காலனி பகுதியில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கிழக்கு கோட்டத்துக்குட்பட்ட மின் நுகர்வோர்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே மேம்பால பராமரிப்பு பணிகள் காரணமாக, செப்.11-ல் கோவை- லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் (11014), எர்ணாகுளம்-டாடாநகர் தினசரி எக்ஸ்பிரஸ் (18190), ஆழப்புலா-தன்பாத் தினசரி எக்ஸ்பிரஸ் (13352), எர்ணாகுளம்-கேஎஸ்ஆர் பெங்களூரு எக்ஸ்பிரஸ் (12678) ஆகிய ரயில்கள் மாற்றுப்பாதையில் அதாவது ஈரோடு-சேலம் ரயில் பாதையில் இயக்கப்படுகிறது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

சேலம் வழியாக இயக்கப்படும் ஹூப்ளி- இராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில் (07355), இராமநாதபுரம்-ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயில் (07356) ஆகிய ரயில் சேவைகள் வரும் அக்டோபர் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் சேலம் ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நின்றுச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (செப்டம்பர்.09) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வருகின்ற 11ஆம் தேதி வியாழக்கிழமை அரசு இருபாலர் கலைக் கல்லூரியில், மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் பர்வின்சுல்தான் கலந்து கொண்டு தமிழ் மொழியின் சிறப்பு அதன் தொன்மையை எடுத்துரைத்துள்ளதாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்கள்ளதாக தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகரில் இன்று (09.09.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

சேலம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும்
பொது இடங்களில் உள்ள இலவச Wi-Fi பயன்படுத்தும்போது எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் பகிர வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சைபர் பாதுகாப்புக்காக அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், மோசடி புகார்களுக்கு 1930 என்ற என்னை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

நவராத்திரி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் பயணிகளின் வசதிக்காக சேலம் வழியாக இயக்கப்படும் மதுரை-பெங்களூரூ கண்டோன்மென்ட்-மதுரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள பெட்டிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அதாவது, தற்போது 8 பெட்டிகள் கொண்டிருந்த நிலையில் 16 பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் செப்.11- ல் அமலுக்கு வரும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சேலம் மாவட்டத்தில் இன்று (செப்.09) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலத்தில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.