India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் ஏப்ரல் 13 இன்றைய முக்கிய நிகழ்வுகள்▶️ காலை 9 மணி குருத்தோலை ஞாயிறு வைபவத்தை ஒட்டி ஊசி மாதா கோயிலில் சிறப்பு பவனி▶️ காலை 10 மணி வக்பு சட்டத்திருத்தத்தை திரும்ப பெறக் கோரி நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் (கோட்டை மைதானம்)▶️ மாலை 6 மணி வகுப்பு வரை கட்டத்தை திரும்ப பெறக்கோரி ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் பொதுக்கூட்டம் (கோட்டை மைதானம்)▶️ மாலை 7 மணி ஹாரிஸ் ஜெயராஜ் இன்னிசைக் கச்சேரி (மூன்றோடு)
சேலம்: மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும். குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.இதை ஷேர் செய்யுங்கள்.
வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (54). சேலம் வடக்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளரான இவர், கடந்த 9ல் அப்பகுதியில் தம்மம்பட்டி நெடுஞ்சாலையில் நடைப்பயிற்சி சென்றபோது, தினேஷ் என்பவர் ஓட்டி வந்த டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த பாண்டியன் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
சேலம் மாவட்டத்தில் இன்று (ஏப்.12) வெயில் சதமடித்துள்ளது. டிகிரி செல்சியஸ் அளவில் 37.8 ஆகவும், ஃபாரன்ஹீட் அளவில் 100 ஆகவும் பதிவாகியுள்ளது. தர்பூசணி, வெள்ளரிக்காய், நீர்மோர், பழங்களை அருந்தி மக்கள் சூட்டைத் தணித்து வருகின்றனர். நேற்று மாலை பலத்த சூறைக்காற்றுடன் கோடை மழை பெய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் மாநகராட்சி கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்.இளங்கோவன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஏப்.12) நடைபெற்றது. இதில் வரும் மே 15-க்குள் சேலம் மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிலையங்களில் பெயர் பலகைகள் கட்டாயமாக தமிழில் இடம்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. தவறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தென் மத்திய ரயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட கோண்டியா ரயில்வே நிலைய பகுதியில் 3- வது லைன் ஏற்படுத்தப்படுகிறது. இதனால் சேலம் வழியாக இயக்கப்படும் திருவனந்தபுரம் வடக்கு- கோர்பா எக்ஸ்பிரஸ் மே 1-ம் தேதியும், கோர்பா- திருவனந்தபுரம் வடக்கு எக்ஸ்பிரஸ் மே 3-ம் தேதியும், பிலாஸ்பூர்- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் மே 5- ம் தேதியும், எர்ணாகுளம்- பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் மே 7- ம் தேதியும் உள்பட 6 ரயில்கள் முழுமையாக ரத்து!
சேலம் மாவட்டத்திற்கான பறவையினம் தேர்வுசெய்ய, பொதுமக்கள் தங்களது விருப்பத்தை தெரிவிக்க வனத்துறை அழைப்பு விடுத்துள்ளது. சேலம், ஆத்தூர் வனக்கோட்டம் மற்றும் சேலம் பறவையியல் கழகம் இணைந்து நமது சேலத்திற்கான பறவையை தேர்வு செய்ய, பொதுமக்களிடம் விருப்பங்கள் பெறப்படுகின்றன. பொதுமக்கள் சேலத்தின் பறவையினை தேர்வு செய்ய இன்று முதல் வரும் 30-ஆம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முடிவுகள் மே-4 வெளியிடப்படும்.
சேலத்தில் காலியாக உள்ள 417 அங்கன்வாடி பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்படவுள்ளது. சம்பளமாக ரூ.4100 – 24200 வரை வழங்கப்படும். இதர தகவல்களை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், சேலம் மாநகராட்சி, ஆத்தூர் மற்றும் எடப்பாடி நகராட்சி அலுவலகத்தில் தெரிந்துகொள்ளலாம். அல்லது <
ஏப்.13 முதல் ஜூன் 01 வரை திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் சேவையும், ஏப்.14 முதல் ஜூன் 02 வரை மேட்டுப்பாளையம்- திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் சேவையும் நீட்டிக்கப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பனைமடல் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (60). இவர், தனது பக்கத்து வீட்டில் வசிக்கும், 12-ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் கர்ப்பமான சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து வாழப்பாடி மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை பொக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.