India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோடைக்காலத்தை முன்னிட்டு, வரும் ஏப்.19- ஆம் தேதி பெங்களூருவில் இருந்து கொல்லத்திற்கும், ஏப்.20- ஆம் தேதி கொல்லத்தில் இருந்து பெங்களூருவுக்கும் கோடைக்கால சிறப்பு ரயில்கள் (06585/06586) இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில்கள் சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக இயக்கப்படுகின்றன. சேலம் ரயில் நிலையத்தில் சுமார் 10 நிமிடங்கள் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மேச்சேரியில் மிகவும் சக்தி வாய்ந்த பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் அம்மனை தரிசனம் செய்வதால், 21 தலைமுறையில் செய்த பாவங்கள், நோய்கள் போன்றவை நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. மேலும் பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இக்கோயிலுக்கு வர அது அவர்களை விட்டு விலகுமாம். இதை நோயால் அவதிப்படும் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க
Ghibli-புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதில் நீங்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்களை டீப் ஃபேக் (Deep fake) தொழில்நுட்பத்தில் பயன்படுத்தி தவறாக சித்தரிக்கப்படும் அபாயம் உள்ளதாக சேலம் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சைபர் கிரைம் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணை அழைக்கவும். இதை ஷேர் பண்ணுங்க! உங்க நண்பர்களும் Ghibli ஆபத்தை தெரிஞ்சுக்கட்டும்.
சேலம் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தில் கணக்காளர் மற்றும் இரவுக் காவலர் பணியிடத்திற்கு வெளிக்கொணர்வு முகமையின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். விண்ணப்பங்களை நேரிலோ (அ) தபால் மூலமாகவோ மேலாளர், சூரமங்கலம் நகர்ப்புற வாழ்வாதார மையம், அறை எண்.207, 2-ம் தளம், மாவட்ட ஆட்சியரகம், சேலம் என்ற முகவரியில் சமர்ப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்.
சேலம் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 14) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாவட்ட கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
சேலம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில், பிரதம மந்திரி தேசிய தொழிற்பயிற்சி சேர்க்கை முகாம், கோரிமேடு அரசு ஐடிஐ வளாகத்தில் நாளை 15-ம் தேதி நடக்கிறது. அனைத்து தொழிற்பிரிவுகளிலும் ஐடிஐ, என்சிவிடி, எஸ்சிவிடி, மற்றும் சிஇ சான்றிதழ் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெற உள்ளது. 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர்.
பண்டிகைக் கால விடுமுறை, கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு, வரும் ஏப்.17- ஆம் தேதி பெங்களூருவில் இருந்து மங்களூருவுக்கும், ஏப்.20- ஆம் தேதி மங்களூருவில் இருந்து பெங்களூருவுக்கும் சிறப்பு ரயில்கள் (06579/ 06580) இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில்கள், சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
தமிழ் புத்தாண்டு தினத்தில் முருகனை தரிசிக்க விரும்பும் சேலம் பக்தர்கள் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் ▶️முத்துமலை முருகன் (ஏத்தாப்பூர்)
▶️காவடி பழனி ஆண்டவர் (சூரமங்கலம்)
▶️காளிப்பட்டி முருகன் (ஆட்டையாம்பட்டி)
▶️கந்தாஸ்ரமம் கோயில் (சேலம் மாநகர்)
▶️கொங்கணாபுரம் புது பழனி முருகன் கோயில்
▶️கஞ்சமலை கோயில் (இளம்பிள்ளை)
▶️செக்காரப்பட்டி பழனியாண்டவர் (ஓமலூர்). இதை ஷேர் செய்யுங்கள்.
சேலம் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த NMMS தேர்வை 44 தேர்வு மையங்களில் சுமார் 10,230 மாணவர்,மாணவிகள் கலந்து கொண்டு எழுதினர். இதனிடையே தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் சேலம் மாவட்டத்தில் 479 மாணவர்,மாணவிகள் தேர்ச்சி பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை வழங்கப்படும்.
சேலம் குரங்குச்சாவடியில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற ஐயப்ப ஆசிரமத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை (ஏப்.14) அதிகாலை 04.00 மணிக்கு நடைத் திறக்கப்பட்டு மஹா கணபதி ஹோமத்துடன் கோயில் முழுவதும் காய்கனிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் ஐயப்பன் பாதத்தில் வைத்து பூஜைச் செய்யப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் மற்றும் லட்டு சுமார் 25,000 பக்தர்களுக்கு இலவசமாக வழங்க ஏற்பாடு.
Sorry, no posts matched your criteria.