Salem

News April 17, 2025

சேலத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் !

image

சேலம்: தலைவாசல் அரிமா சங்கம், சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் சேலம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து வருகிற ஏப்.27ஆம் தேதி காலை 8:00 மணி முதல் 1:00 மணி வரை தலைவாசல் மும்முடி யூனியன் ஆபீஸ் எதிரில் உள்ள அரிமா அரங்கத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. பயனடைவோருக்கு SHARE பண்ணுங்க !

News April 17, 2025

சேலம்: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கவனத்திற்கு !

image

சேலத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். உதவித்தொகை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினைக் கொண்டு சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலோ (அ) <>www.tnvelaivaaippu.gov.in <<>>விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News April 17, 2025

சேலம் மாணவிக்கு கத்திக்குத்து!

image

சேலத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு தன்னைத்தானே கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்த நபரை பிடித்து, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சேலம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் திருமால் கல்லூரி மாணவியிடம் மற்றும் மாணவியை கொலை செய்ய முயற்சித்த மோகன பிரியன் ஆகிய இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

News April 16, 2025

சேலம்: இன்றைய இரவு ரோந்து போலிசார் விவரம்!

image

சேலம் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 16) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாவட்ட கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.

News April 16, 2025

அடுத்தடுத்து 3 கோயில்களில் பூட்டை உடைத்து திருட்டு

image

ஓமலூர் அருகே அடுத்தடுத்து 3 திருக்கோயில்களின் பூட்டை உடைத்து சுவாமிகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கத்தாலி, தங்க ஆபரணங்கள் மற்றும் உண்டியல் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருட்டு சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற தீவட்டிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

News April 16, 2025

சேலம் மாவட்டத்தில் “காவல் உதவி” செயலி குறித்து காவல்துறை விழிப்புணர்வு…!

image

சேலம் மாவட்ட காவல்துறை, பொதுமக்கள் அவசரநிலைகளில் உடனடி பாதுகாப்பு மற்றும் உதவியை பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள “காவல் உதவி” செயலியின் பயன்பாட்டை விளக்கும் நடவடிக்கைகளை இன்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. மக்கள் இந்த செயலியை தங்கள் மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இந்த செயலி வழியாக அவசர உதவிக்கு அழைக்கலாம், புகார் அளிக்கலாம், காவல் நிலைய தகவல்கள் தெரிந்துகொள்ளலாம்.

News April 16, 2025

சேலத்தில் ரூ.45,000 சம்பளத்தில் அரசு வேலை

image

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறையின் கீழ், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், காலியாக உள்ள குறைதீர்ப்பாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணிக்கு, சேலத்தை சேர்ந்தவர்கள் வரும் மே.5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.45,000. விண்ணப்பங்களை பதிவிறக்க செய்ய இந்த <>லிங்கை<<>> க்ளிக் பண்ணுங்க.

News April 16, 2025

சேலம் மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு!

image

“விலை ஆதரவு திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் பச்சைப்பயறு மற்றும் உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகள் சேலம் மற்றும் மேச்சேரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை அணுகி பயன்பெறலாம்.விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி சேமிப்புக் கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் விளைபொருட்களை விற்பனை செய்துகொள்ளலாம்” என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News April 16, 2025

உறவினரை அரிவாளால் வெட்டியவர் கைது

image

ஓமலூர் தேக்கம்பட்டியைச் சேர்ந்த தாண்டவன் (49) என்பவருக்கும், அவரது உறவினர் சரவணன் (44) என்பவருக்கும் இடையே கடந்த 13ஆம் தேதி தகராறு ஏற்பட்டது. இதில் குடிபோதையில் இருந்த சரவணன், தாண்டவனை அரிவாளால் வெட்டினார். படுகாயமடைந்த தாண்டவன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கருப்பூர் போலீசார் வழக்கு பதிந்து நேற்று சரவணனை கைது செய்தனர்.

News April 15, 2025

சேலம்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும், ஏதேனும் விபத்துக்கள், அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிடவும், இரவு முழுதும் அந்தந்த பகுதி காவல் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஏப்ரல்15 ஆம் தேதியான இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது.

error: Content is protected !!