Salem

News April 23, 2025

மகளிர் விடுதிகள் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும்!

image

சேலம் மாவட்டத்தில் செயல்படும் மகளிர் விடுதிகள் அனைத்தும் சமூக நலத்துறையில் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும் என ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். மேலும் உரிமம் வேண்டி விண்ணப்பிப்பது தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அறை எண்.126-ல் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் அணுகி பயன்பெறுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

News April 23, 2025

சேலத்தில் இலவச விளையாட்டு பயிற்சி முகாம்!

image

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் ஏப். 25 முதல் மே 15 வரை தடகளம், கால்பந்து, கைப்பந்து, கையுந்து பந்து, குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுகளுக்கு இலவச பயிற்ச்சி அளிக்கப்படவுள்ளது. விருப்பமுள்ளோர் ஏப். 25 ஆம் தேதி காலை 6 மணிக்கு ஆதார் அட்டையுடன் நேரில் வந்து பதிவு செய்யலாம் என சேலம் கலெக்டர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

News April 23, 2025

4 துறைகளில் நம்பர் ஒன்: சேலம் கோட்டத்திற்கு தேசிய விருது!

image

ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் அனைத்து மாநில போக்குவரத்து கழகங்களின் கூட்டமைப்பு சார்பில் சிறந்த மாநிலத்திற்கான விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. அதில் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டத்திற்கு எரிபொருள் சேமிப்பு, பாதுகாப்பான இயக்கம், பஸ் பயன்பாடு உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் முதல் பரிசு பெற்றுள்ளது. இதனால் சிறந்த போக்குவரத்து கழகம் என்ற பெயரை சேலம் கோட்டம் பெற்றுள்ளது.

News April 23, 2025

சேலம்: அரசுப் பேருந்துகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை!

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டத்தில் உள்ள அரசு டவுன் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகள் என மொத்தம் 1,900 பேருந்துகளிலும் கடந்த மாதம் முதல் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் டிஜிட்டல் பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. வெகு தூரம் செல்லும் பேருந்துகளில் இந்த பரிவர்த்தனை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எனினும் டவுன் பேருந்துகளில் வரவேற்பு கிடைக்கவில்லை.

News April 23, 2025

சேலம்: அரசுப் பேருந்துகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை!

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டத்தில் உள்ள அரசு டவுன் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகள் என மொத்தம் 1,900 பேருந்துகளிலும் கடந்த மாதம் முதல் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் டிஜிட்டல் பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. வெகு தூரம் செல்லும் பேருந்துகளில் இந்த பரிவர்த்தனை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எனினும் டவுன் பேருந்துகளில் வரவேற்பு கிடைக்கவில்லை.

News April 23, 2025

சேலம் அங்கன்வாடி பணியாளராக கடைசி வாய்ப்பு!

image

சேலத்தில் காலியாக உள்ள 417 அங்கன்வாடி பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்படவுள்ளது. சம்பளமாக ரூ.4100 – 24200 வரை வழங்கப்படும். இதர தகவல்களை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், சேலம் மாநகராட்சி, ஆத்தூர் மற்றும் எடப்பாடி நகராட்சி அலுவலகத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு <>இங்கே <<>>க்ளிக் செய்யவும். இதை ஷேர் செய்யவும்.

News April 23, 2025

சேலத்தில் கொலை முயற்சி 2 பெண்கள் சிறையில்!

image

ஆத்தூர் அருகே குப்பைக் கொட்டும் தகராறில் லாரியை ஏற்றி கொல்ல முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் கொலை முயற்சி, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்பட 4 பிரிவுகளில் பாலமுருகன், அன்பரசி,பூபதி மற்றும் உறவினர் கதிரவன் ஆகியோர் மீது ஆத்தூர் ஊரக போலீசார் வழக்கு பதிந்தனர். உள்பட அன்பரசி, செல்வி ஆகிய பெண்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

News April 22, 2025

சேலம்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விபரம்

image

சேலம் மாவட்டத்தில் இன்று (22.04.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம். பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏற்படும் விபத்துக்கள், திருட்டு, சந்தேக நபர்கள் குறித்து சேலம் அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம். 

News April 22, 2025

சேலம் கள்ளத்துப்பாக்கி ரூ 3 லட்சம் அபராதம்

image

சேலம் மஞ்சவாடி காப்புக்காடு பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடும் வகையில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த சேலத்தைச் சேர்ந்த ரமேஷ் (வயது 39), சுகில் குமார் (வயது 30) ஆகிய இருவரை கைது செய்த வனத்துறையினர் இருவருக்கும் தலா ரூபாய் 1.50 லட்சம் அபராதம் விதித்தனர். வன விலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடுமையான தண்டனை விதிக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்தனர்.

News April 22, 2025

சேலம் மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு!

image

கோடை விடுமுறை காலம் தொடங்கியுள்ளதையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்ற நீர் நிலைகளில், குழந்தைகள் இறங்காமல் கவனமுடனும், எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருப்பதை பெற்றோர் கண்காணித்து உறுதிசெய்ய வேண்டுமென தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது என ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். இதை, உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!