Salem

News April 4, 2025

சேலம் மாம்பழ வியாபாரிகளுக்கு எச்சரிக்கை!

image

எதிப்பான் ரசாயனம் தெளித்து மாம்பழங்கள், வாழைப்பழங்களை பழுக்க வைத்தால் வியாபாரிகளுக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும், பழக்குடோன்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது” என உணவு பாதுகாப்புத் துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தற்போது மாம்பழங்கள் சீசன் தொடங்கியுள்ள நிலையில் சோதனை செய்தும், பழ குடோன்களையும் கண்காணித்தும் வரப்படுகிறது. உங்களுக்கு தெரிந்த வியாபாரிகளுக்கு SHARE பண்ணுங்க!

News April 4, 2025

சேலத்தில் மாணவி தற்கொலை!

image

எடப்பாடி அருகே முத்தையம்பட்டி பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று தனியார் நீட் பயிற்சி மையத்தில். கடந்த 10 மாதங்களாக பயிற்சி பெற்று வந்தார். நீட் தேர்வு கடினமாக இருப்பதாகவும், தன்னால் தேர்வில் வெற்றி பெற முடியாது என்றும் கடந்த 31ஆம் தேதி விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

News April 3, 2025

தோல் வியாதி நீக்கும் சித்தேசுவரர் கோயில்

image

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ளது கஞ்சமலை சித்தேசுவரர் கோயில். தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து உப்பு, மிளகு, வெல்லம் ஆகியவற்றை தலையைச் சுற்றி, பாதிக்கப்பட்ட தோல் பகுதியைச் சுற்றி கோயிலின் காந்த குளத்தில் போட்டால் தோல் வியாதி குணமாகும் என்பது நம்பிக்கை. இந்தப் பிரச்சனை உள்ள உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 3, 2025

சேலம் வழியாக செல்லும் முக்கிய ரயில் நாளை ரத்து

image

யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் சேலம், ஆத்தூர் வழியாக இயக்கப்படும் யஷ்வந்த்பூர்- புதுச்சேரி வாராந்திர சிறப்பு ரயில் (16573) நாளையும், மறுமார்க்கத்தில், புதுச்சேரி- யஷ்வந்த்பூர் ரயில் (16574) நாளை மறுநாளும் (ஏப்ரல் 05) முழுமையாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

News April 3, 2025

சேலத்தில் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்!

image

சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வார இறுதி நாட்களான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை 2 நாட்கள் மட்டும், உடனடி வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிறசிக்கான விண்ணப்பங்கள் மார்ச் 24- ஆம் தேதி முதல் ஏப்ரல் 13- ஆம் தேதி வரை, இம்மேலாண்மை பயிற்சி நிலையத்தில் அலுவலக வேலை நேரங்களில் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!

News April 3, 2025

நாளை முதல் மீண்டும் மெமு ரயில்!

image

பிரக்யாராஜ் மகா கும்பமேளா நிறைவடைந்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 04) முதல் சேலம்- அரக்கோணம், அரக்கோணம்- சேலம் மெமு ரயில்கள் (16087/16088) இயக்கப்படும் என்றும், இந்த ரயில் சேவையைப் பயணிகள் பயன்படுத்தி கொள்ளுமாறும் சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. வாரத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களைத் தவிர்த்து 5 நாட்கள் மட்டும் இந்த ரயில் இயக்கப்படுகிறது.

News April 3, 2025

மும்பை – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில் 

image

மும்பை சி.எஸ்.எம்.டி.-கன்னியாகுமரி வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-01005) வருகிற 9-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை புதன்கிழமைகளில் மும்பை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, திருப்பத்தூர் வழியாக வியாழக்கிழமை அதிகாலை 4.10 மணிக்கு சேலம் வந்தடையும். மதியம் 1.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும் என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

News April 3, 2025

சேலத்தில் விவசாயிகளுக்கு ரூ.1,042 கோடி பயிர்க்கடன்!

image

சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 1.10 லட்சம் விவசாயிகளுக்கு ரூபாய் 1,042 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. ரூபாய் 1,007 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இலக்கை விட கூடுதலாக பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News April 3, 2025

சேலம் மாநகரில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டத்திற்கு  கட்டுப்பாடு

image

சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் போன்றவற்றை நடத்துவதற்கு மாநகர போலீஸ் கமிஷனரின் அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும். மேலும் நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் வருகிற ஏப்ரல் 17-ந் தேதி நள்ளிரவு வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என சேலம் போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு தெரிவித்துள்ளார்.

News April 3, 2025

ரூ.6,000.. சேலம் விவசாயிகள் கவனத்திற்கு!

image

சேலம் மாவட்டத்தில் பி.எம்.கிசான் ஊக்த்தொகை (ரூ.6,000) பெறும் 1,18,341 விவசாயிகளில் தற்போது வரை 64,272 நபர்கள் மட்டுமே அடையாள எண் பெறுவதற்கு பதிவுச் செய்துள்ளனர். மீதமுள்ள 54,069 விவசாயிகள், தொகையை தொடர்ந்து பெற அடையாள எண் பெறுவதற்கு, வரும் ஏப்ரல் 8ஆம் தேதிக்குள் பதிவுச் செய்ய வேண்டும் என வேளாண் இணை இயக்குநர் சிங்காரம் தெரிவித்துள்ளார். இதனை உங்களுக்கு தெரிந்த விவசாயிகளுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!