India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் ஆக.19 இன்றைய முக்கிய நிகழ்வுகள்:
▶️ காலை 10 மணி ஓய்வூதிய மசோதா வாபஸ் பெற கோரி அஞ்சல் ஊழியர்கள் மனித சங்கிலி பழைய பேருந்து நிலையம்.
▶️காலை 11 மணி தனியார் நிதி நிறுவனத்தை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் கோட்டைமைதானம்.
▶️ காலை 11 மணி சுமைப்பணி தொழிலாளர் பேரவை கூட்டம் குஜராத்தி மண்டபம் அஞ்சு ரோடு.
▶️போக்குவரத்து தொழிலாளர்கள் மையனூரில் இரண்டாம் நாளாக காத்திருப்பு போராட்டம்.
சேலம் ஆகஸ்ட்.19 இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ நடைபெறும் முகாம் இடங்கள்:
▶️நவபட்டி மாதவி மஹால் நவபட்டி.
▶️ஆத்தூர் அண்ணா கலையரங்கம் ராணிப்பேட்டை ஆத்தூர்.
▶️கருப்பூர் சந்தைப்பேட்டை சமுதாயக்கூடம் சந்தைப்பேட்டை. ▶️பெத்தநாயக்கன்பாளையம் ஐஸ்வர்யா மஹால் மேற்கு ராஜபாளையம்.
▶️வீரபாண்டி விக்னேஷ்வரா திருமண மண்டபம் அரியானூர்.
▶️ எடப்பாடி ஸ்ரீ சென்ராய பெருமாள் கோவில் அருகில் சமுதாயக்கூடம் பக்க நாடு கஸ்பா.
சேலம் மாவட்டம், மல்லமுப்பம்பட்டி கிராமத்தில், சித்தன் பாக்கியா என்பவர், ஏலியன் கோயில் ஒன்றை அமைத்து கடந்த 1 வருடங்களுக்கு மேலாக வழிபட்டு வருகிறார். “ஏலியன்கள் உலகிற்கு தீங்கு செய்யமாட்டார்கள் எனவும் உலகை பேரழிவில் இருந்து காக்கும் சக்தி ஏலியன்களுக்கு மட்டுமே உண்டு” என்று நம்பும் சித்தன் பாக்கியா இங்கு பல முகங்களைக் கொண்ட முருகன் மற்றும் காளி சிலைகளை நிறுவி வழிபாடு நடத்துகிறார்.
சேலம் மாவட்ட செஞ்சிலுவை சங்கத் கிளையின் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகின்ற செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற உள்ளது இதற்கான வேட்பு மனு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் வருகின்ற 21,22 ஆகிய இரு நாட்கள் சமர்ப்பிக்க வேண்டும். 23ஆம் தேதி வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் என்றும் 25ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் 153 அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அதேபோன்று மாவட்டத்தில் 47 வங்கிகள் மற்றும் இதன் 550 வங்கி கிளைகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் நடப்பு 2025-26ம் ஆண்டில் 6,600 நபர்களுக்கு ரூ.128 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலாம் காலாண்டு ஜூன் 30 முடிய 1,378 மாணவர்களுக்கு ரூ.21 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல்!
சேலம் அனைத்திந்திய தொழிலாளர் கட்சி, தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி, திரிணாமூல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஆகிய அங்கீகாரம் இல்லாத 3 அரசியல் கட்சிகள் விசாரணைக்காக, உரிய ஆவணங்களுடன் வரும் ஆகஸ்ட் 26ம் தேதி அல்லது அதற்கு முன்னதாகவோ தலைமை தேர்தல் அலுவலர், தலைமைச் செயலகம், சென்னை 600009 என்ற முகவரியில் ஆஜராகி உரிய ஆவணங்களுடன், பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி செஞ்சிலுவை சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. காலை 9 மணிக்கு நடைபெற உள்ள கூட்டத்திற்கு அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் தங்களது ஆதார் அட்டை, அடையாள அட்டை, பதிவு செய்யப்பட்ட ஆயுட்கால உறுப்பினர் அட்டை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். இன்று (ஆகஸ்ட் 18) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் 163 கல்லூரிகள், 47 வங்கிகளும், 550 கிளைகளும் மாவட்டத்தில் உள்ளது. இவற்றின் வாயிலாக மாணாகர்களுக்கு கல்வி கடன் வழங்கப்பட்டு வருகிறது. 2025-26 ஆம் ஆண்டில் 6600 மாணவர்களுக்கு ரூ.128 கோடி கல்வி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் வரை காலாண்டில் 1378 மாணவர்களுக்கு ரூ.21 கோடி கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
குற்றத் தடுப்பு மற்றும் குற்றங்களை கண்டறிவதில் உதவியாக இருக்கும் சிசிடிவி கேமராக்களை நிறுவுமாறு சேலம் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. வீடுகள், கடைகள், போன்ற இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்துவது பாதுகாப்பை அதிகரிப்பதோடு, சந்தேக நபர்களை அடையாளம் காணவும் உதவுகிறது. அனைவரும் ஒத்துழைத்து கேமரா பொருத்தி, சமூகத்தின் பாதுகாப்பில் பங்கு கொள்ளுமாறு மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.