Salem

News October 31, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொதுமக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (அக்டோபர்.30) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

News October 30, 2025

சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

சேலம் நகரம் அன்னதானப்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி அஸ்தம்பட்டி, சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காவல்துறையினரை இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க தினந்தோறும் ரோந்து பணியில் அமர்த்துவது வழக்கம். அதன்படி இன்று (அக். 30) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

News October 30, 2025

சேலம்: பட்டம் படித்தால் ரூ.65,000 சம்பளம்!

image

சேலம் மக்களே, தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு மையத்தில் Admin Supervisor, Accounts Supervisor, Marketing Supervisor, Hall Supervisor பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு இளங்கலைப் பட்டம் படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 55,000 முதல் ரூ.65,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் பிண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 31.10.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News October 30, 2025

சேலம்: தெரிய வேண்டிய வாட்ஸ் ஆப் நம்பர்!

image

சேலம் மக்களே..பிறப்பு, இறப்பு சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல் , பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள், என 32 வகையான சேவைகளுக்கு இனி எங்கும் அலைய வேண்டாம். உங்கள் பகுதிக்கான அனைத்து சேவைகளுக்கும் 9445061913 எனும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒரு ‘HI’ அல்லது ‘வணக்கம்’ மெசேஜை அனுப்பினால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 30, 2025

சேலம்: நாளை மாமன்ற இயல்பு கூட்டம் – ஆணையாளர் அறிவிப்பு!

image

சேலம் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்; வருகின்ற அக்.31ம் தேதி நாளை வெள்ளிக்கிழமை பகல் 11 மணிக்கு சேலம் மாநகராட்சியின் மாதாந்திர இயல்பு கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று தங்களது கோட்டத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உள்ள குறைபாடுகள் குறித்து எடுத்துரைப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

News October 30, 2025

சேலம்: ஆதார் – பான் கார்டு இருக்கா? இது கட்டாயம்

image

சேலம் மக்களே, மத்திய அரசு பான் கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. இங்கே க்ளிக் செய்து <>“Link Aadhaar”<<>> தேர்வு செய்யவும்.
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும்.
அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News October 30, 2025

சேலம்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<> pmay-urban.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News October 30, 2025

சேலம் மத்திய குற்ற பிரிவு அலுவலகம் இடமாற்றம்

image

சேலம் டவுன் காவல் நிலைய வளாகத்தில் மத்திய குற்ற பிரிவு அலுவலகம் செயல்பட்டு வந்தது. 160 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அலுவலகம் கட்டப்பட்டது. பழமையான கட்டிடம் எனவும் அதனை இடிக்க கூடாது என தெரிவித்தனர். மழைக்காலம் என்பதால் அதிக அளவில் தண்ணீர் உள்ளே வருகிறது. இதனை அறிந்த கமிஷனர் ஐந்து ரோடு பகுதிக்கு மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் மாற்றி உத்தரவிட்டார்.

News October 30, 2025

சேலம்: பள்ளி மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை!

image

சேலம் அரசுப் பள்ளி 9ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ஊரகத் திறனாய்வுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இந்த தொகை மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. இதற்கு www.dge.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

News October 30, 2025

கொளத்தூர் அருகே விபத்து – ஒருவர் பலி

image

கொளத்தூர் அருகே அய்யம்புதூர் பகுதியை சேர்ந்த கோவில் பூசாரி அய்யந்துரை (65) டிராக்டரில் பயணம் செய்தபோது வால்கிணத்தூர் அருகே சரக்கு வாகனத்துடன் மோதியதில் நேற்று சம்பவ இடத்திலேயே பலியானார். டிராக்டரில் இருந்த சேகர், முனுசாமி ஆகியோர் லேசாக காயமடைந்து மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கொளத்தூர் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!