India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் ஆர்.ஆர் திருமணமஹாலில் இயங்கி வரும், இந்தியன் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், கறவை மாடு வளர்ப்பு, மண் புழு உரம் தயாரிக்கும் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 31 நாட்களுக்கு வழங்கப்படும் இப்பயிற்சியில் உபகரணங்கள், சீருடை, தேநீர், மதிய உணவுடன் இலவசமாக வழங்கப்படுகிறது. கிராமப்புற ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம். நேரில் விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 28 ஆகும்.
சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் 19 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் அமாவாசையை முன்னிட்டு நாளை 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை போக்குவரத்து இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்பெற அறிவுரை.
சேலம் கோட்டத்தில் என்ஜினீயரிங் பணி நடைபெறுவதால் வண்டி எண்: 16844 பாலக்காடு டவுன்-திருச்சி எக்ஸ்பிரஸ் ஏப்.26, 29 ஆகிய தேதிகளில் கரூர் வரை மட்டும் இயக்கப்படும். வண்டி எண்: 16811 மயிலாடுதுறை-சேலம் மெமு எக்ஸபிரஸ் ஏப்.26, 29-ந் தேதிகளில் காலை 6 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து து புறப்பட்டு கரூர் மாயனூர் வரை மட்டும் இயக்கப்படும் என திருச்சி ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்ட திட்ட மேலாண்மை அலகில் தற்காலிகமாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.35,000 வழங்கப்படும். இதற்கு B.Tech, M.B.A., M.Sc. அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி முடித்திருக்கும் நபர்கள் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அறை எண்: 207-ல் உள்ள நகர்ப்புற வாழ்வாதார மையம் மேலாளரிடம் விண்ணப்பத்தை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.
சேலம் மத்திய சிறையில் காலியாக உள்ள சமூக வழக்கு சேவை நிபுணர் Social Case Work Expert பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்ற என சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் கோ.வினோத் தெரிவித்துள்ளார். இதற்கு தொகுப்பூதியமாக ரூ.15000 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 0427-2403551, 2400639 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இதை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
அசாம் மாநிலம், கவுகாத்தியில் இன்று (ஏப்.23) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் மூன்றாவது துணை குழுவின் ஆய்வுக் கூட்டத்தில் தி.மு.க.வின் சேலம் மேற்கு மாவட்ட செயலாளரும், சேலம் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி கலந்து கொண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அவருக்கு அசாம் மாநில அரசு சார்பில் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம், தலைவாசல் அடுத்த மணிவிழுந்தான் தெற்கு புதூரைச் சேர்ந்த விவசாயியின் மகன் யுவராசு (16).பிளஸ் 1 பொதுத்தேர்வு முடித்துள்ள நிலையில் யுவராசு செல்போனில் கேம் விளையாடி கொண்டிருந்தார். இதை தந்தை செல்வம் கண்டித்துள்ளார்.தோட்டத்தில் இருந்த பூச்சி மருந்தை அருந்தியுள்ளார்.மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட யுவராசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தலைவாசல் போலீசார் விசாரணை
சேலம், வட்டார மருத்துவ அலுவலர்களின் எண்கள் கன்னங்குறிச்சி-9487427742, இளம்பிள்ளை-9842061813, காடையாம்பட்டி-9994540962, சரக்கபிள்ளையூர்-8903522927, தாரமங்கலம்-9486765761, கொளத்தூர்-9442921044, மேச்சேரி-9443828077, நங்கவள்ளி-9487478134, சித்தூர்-9788199591, மகுடஞ்சாவடி-9443499255 உங்கள் பகுதியில் உள்ள மருத்துவத்துறை சார்ந்த கோரிக்கைகளை இதன் வாயிலாக தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரை சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 5,001 பிரசவங்களும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 9,774 பிரசவங்கள் என மொத்தம் 14,775 பிரசவங்கள் நடைபெற்று உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பான முறையில் பிரசவம் நடக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
திறன்மிக்க ஓட்டுநர்களை உருவாக்கும் நோக்கத்தில் சேலம் மாவட்டம், தேவண்ணகவுண்டனூர் கிராமத்தில் ரூபாய் 17.25 கோடி மதிப்பீட்டில் ஓட்டுநர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் இன்று (ஏப்.23) போக்குவரத்துத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பின் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவிப்பு
Sorry, no posts matched your criteria.