India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாநகராட்சியில் (31.10.2025) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.

சேலம் மக்களே, மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் 22 Junior Personal Assistant, Junior Executive (Rajbhasha) பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.29,000/- முதல் ரூ.93,000/- வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில் (NABFINS) காலியாக உள்ள Customer Service Officer (CSO) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சேலத்தில் பணிபுரிய வாய்ப்புகள் உள்ளன.ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும்.12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் https://nabfins.org/ என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

சேலம், அய்யந்திருமாளிகையைச் சேர்ந்த மணிகண்டன் (21), நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.20 ஆண்டுகளுக்கு முன் இவரது தாய் சுசீலா கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை முடிந்து வெளியே வந்த தந்தை முத்துமணி, இரண்டாம் திருமணம் செய்துகொண்டதால் மணிகண்டன் மனவேதனை அடைந்தது தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கன்னங்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சங்ககிரி: ஒலக்கச்சின்னானுார், ஒருக்காமலை பகுதியில் அதிகளவில் மரங்கள் அடர்ந்துள்ளதால் குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்தநிலையில் ஒருக்காமலை அருகே,நேற்று மாலை, 6:00 மணிக்கு சிறுத்தை சென்றதாக, அப்பகுதி மக்கள் இடையே தகவல் பரவியது. இதுகுறித்து வனவர் ரமேஸ் கூறுகையில், சிறுத்தை காலடி தடம் எதுவும் பதியவில்லை.மக்கள் புகாரால், வனத்துறையினர் கண்காணிப்பில் உள்ளனர்,” என்றார்.

சேலம்: கொண்டலாம்பட்டி அருகே நெய்க்காரப் பட்டியை சேர்ந்த சங்கர் மகள் இந்துமதி (19). இவர் அரியானுாரில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி. நர்சிங் படித்து வந்தார்.இந்நிலையில் கடந்த.28 மாலை,இந்துமதிக்கும், அவரது தாய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் வேதனை அடைந்த இந்துமதி, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

நாமக்கல்லை சேர்ந்த தினேஷ்குமாா் தனது நண்பரான சங்ககிரியை ஒழுகுபாறையை சோ்ந்த முனுசாமியுடன் (40) டூவீலரில் சங்ககிரியிலிருந்து சேலம் நோக்கி சென்றாா். வைகுந்தம் சுங்கச் சாவடிக்கு முன் உள்ள மேட்டுக்கடை பகுதியில் சென்றபோது,டூவிலர் பின்பக்க டயா் வெடித்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முனுசாமி உயிரிழந்தாா்.தினேஷ்குமாா் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.சங்ககிரி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ரயில்வே நிர்வாகம், பீகார் மாநிலம் பரவுனியில் இருந்து எர்ணாகுளத்திற்கு சிறப்பு ரயிலை இயக்கவுள்ளது. இந்த ரயில் (05271) இன்று (வெள்ளிக்கிழமை) பரவுனியில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, நவம்பர் 2-ந் தேதி இரவு 8.18 மணிக்கு சேலம் வந்தடையும். அங்கிருந்து ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் காலை 6 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொதுமக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (அக்டோபர்.30) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.