India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 19) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை, மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஆகஸ்ட்.19) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள நூல் தொழிற்சாலையில் இன்று (ஆக.19) மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான நூல் மூட்டைகள், இயந்திரங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கஞ்சமலை சித்தேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வளாகத்துக்குள் காந்த தீர்த்தக்குளம் உள்ளது. தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோவிலுக்கு வந்து, உப்பு, மிளகு, வெல்லம் ஆகியவற்றை தலையை சுற்றியும், பாதிக்கப்பட்ட தோல் பகுதியையும் சுற்றி, இந்த காந்த குளத்தில் போட்டால், தோல் வியாதி குணமாகும் என்பது ஐதீகம். தோல் வியாதிகளால் அவதிப்படுவோருக்கு SHARE பண்ணுங்க!
பட்டப்படிப்பு முடித்தவரா நீங்கள்..? உங்களுக்காக ரெப்கோ வங்கியில் (Repco Bank) 30 வாடிக்கையாளர்கள் சேவை அதிகாரி பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கான தேர்வு சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நடைபெறும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
சேலம், கொங்கணாபுரம் அருகே இலவம்பாளையத்தை சேர்ந்த தறி தொழிலாளி குப்புசாமி (43) ரேபிஸ் நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன் வளர்ப்பு நாய் கடித்த நிலையில் சிகிச்சை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. 3 நாளாக ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். சேலம் மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை இருந்தால் 8300062992 புகார் அளிக்கலாம்.
தோட்டக்கலைதுறை மூலம் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிதம் மானியம் ஒரு எக்டருக்கு ரூ.22,000 மானியமும், இதர விவசாயிகளுக்கு ரூ.18,000 மானியமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன் பெற இங்கே <
சேலம் ஆக.20ஆம் தேதி நாளை புதன்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்
♦️கொண்டலாம்பட்டி மண்டலம் நேரு கலையரங்கம் ♦️கோல்நாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் கோல்நாயக்கன்பட்டி ♦️நரசிங்கபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நரசிங்கபுரம் ♦️மல்லூர் அகர மஹால் மண்டபம் மல்லூர்
♦️ஓமலூர் எஸ் எஸ் ராஜா திருமண மண்டபம் பச்சனப்பட்டி
♦️மகுடஞ்சாவடி சோனா யோகா மருத்துவகல்லூரி கண்டர் குல மாணிக்கம்
இந்திய தேர்தல் ஆணையம், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளைப் பற்றி ஆய்வு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்திந்திய தொழிலாளர் கட்சி, தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி, மற்றும் திரிணாமுல் தமிழ்நாடு காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கலெக்டர் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
சேலம் மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்<
Sorry, no posts matched your criteria.