India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அக்.2 ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள், மதுபானக் கூடங்கள் (பார்கள்) மற்றும் தனியார் மதுபான கூட்டங்கள் (தனியார் கிளப்புகள்) என அனைத்தையும் கட்டாயமாக மூட வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார். மீறி ஏதேனும் கடைகள் திறந்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை!

டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்பெறும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-2 நேர்முகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கான குரூப் தேர்வு-2 மற்றும் குரூப் தேர்வு 2 A தேர்வு வருகின்ற (செப்-28) அன்று முற்பகல் மட்டும் நடைபெறுகிறது. இத்தேர்வு சேலம் மாவட்டத்தில் 7 வட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது. சேலம் மாவட்டத்தில் 33,424 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (செப்டம்பர்.26) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

சேலம் மாநகரில் இன்று (26.09.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.i

சேலம் மாவட்டத்தில் 2025- ஆம் ஆண்டிற்கு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகள் நாளை (செப் 27) காலை மகாத்மா காந்தி விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி. மீ தூரமும், 15 வயதிற்குட்பட்டவர்களுக்கு 20 கி.மீ தூரமும், 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ தூரமும் போட்டிகள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் தமிழ்ப்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தில் 2025- 2026 முதலாம் ஆண்டில் 7,845 மாணவிகள் மற்றும் 6,404 மாணவர்கள் இத்திட்டங்களால் பயன்பெற உள்ளனர். இத்தகைய முன்னோடி திட்டங்களின் மூலம் மாணவர்கள் நமது மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்காலத் தூண்களாகத் திகழ்வார்கள். அதேபோல், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் 59,781 மாணவிகள் பயனடைந்துள்ளனர்.

இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக, சேலம் வழியாக இயக்கப்படும் கன்னியாகுமரி-புனே எக்ஸ்பிரஸ் ரயில் (16382) இன்று (செப்.26) காலை 08.40 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட வேண்டிய நிலையில் 14 மணி நேரம் 20 நிமிடங்கள் தாமதமாக இரவு 11.00 மணிக்கு புறப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைப் பிடித்து, அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த ஆண்டின் (2025) புள்ளிவிவரங்களின்படி, சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிக வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். மேலும் லஞ்சம் கேட்கும் எந்தவொரு அரசு அதிகாரியாக இருந்தாலும், பொதுமக்கள் அச்சமின்றி 0427-2418735 என்ற எண்ணுக்கு அழைத்து தைரியமாகப் புகார் அளிக்கலாம்! SHARE பண்ணுங்க!

இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக சேலம் வழியாகச் செல்லும் கோவை-லோக்மான்ய திலக் டெர்மினஸ் எக்ஸ்பிரஸ் ரயில் (11014) இன்று (செப்.26) காலை 08.50 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த நிலையில் மாலை 04.30 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த ரயில் நேற்றும் தாமதமாக புறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது <
Sorry, no posts matched your criteria.