India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ வெண்ணங்கொடி முனியப்பன் இன்று மாசி மாதம் மகா சிவராத்திரி முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இதில் சாமிக்கு சிறப்பு அலங்காரமாக பெருமான் தோற்றத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது. இதனை பக்தர்கள் அனைவரும் தரிசித்துச் சென்றனர்.
சேலம் மாவட்ட ஊரகப் பகுதிகளான வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல் கருமந்துறை, கெங்கவல்லி, சங்ககிரி எடப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும், அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையிலும் காவல்துறையினர் இரவு முழுதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி இன்று பிப்.26 ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம்.
பொதுத்துறை வங்கியான Bank of Baroda-வில் 4,000 தொழிற்பயிற்சி (Apprenticeship) பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். விண்ணப்பிக்க இங்கே <
சேலம் மாவட்டம், தலைவாசல் பேருந்து நிலையம் நோக்கிச் சென்ற அரசு டவுன் பேருந்து பின்புறம், கார் மோதியது. இதில் காரில் பயணம் செய்த இருவர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு!
சேலம் பிப்ரவரி 26 இன்றைய முக்கிய நிகழ்வுகள்:1) காலை 10 மணி வேளாண் நிதிநிலை அறிக்கை சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களை சேர்ந்த கருத்துக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 2) 10 மணி பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சேலம் வருகை.3) காலை 11 மணி புரட்சி பாரதம் கட்சியினர் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம்.4) மாலை 6:00 மணி சிவன்- அங்காளம்மன் கோயிலில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜை.
சேலம் மாவட்ட மதுவிலக்கு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனம் 11 இருசக்கர வாகனம் 110 மொத்தம் 121 வாகனங்கள் சேலம் குமாரசாமிப்பட்டி பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று ஏலம் விடப்படுகிறது. இருசக்கர வாகனங்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயும், 4 சக்கர வாகனங்களுக்கு பத்தாயிரம் முன்பணம் செலுத்தி ரசித்து பெற்றுக் கொள்ள வேண்டும் போலீஸ் அதிகாரி அறிவித்துள்ளார்.
சேலத்தில் நேற்று (பிப்.25) நடைபெற்று வரும் பா.ம.க.வின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏவின் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்ஜய் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது விஜய்யின் மகனுக்கு ஜி.கே.மணி, சால்வை மற்றும் மாலை அணிவித்து கௌரவித்தார். விழாவில் அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
சேலத்தில் பா.ம.க.வின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ.வின் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “மாநில உரிமைகளை நிலைநாட்ட அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து மத்திய அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்” என்றார்.
பா.ம.க.வின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ.வின் இல்லத்திருமண விழாவில் பங்கேற்பதற்காக இன்று (பிப்.25) சேலத்திற்கு வருகை தந்த நடிகர் விஜய் சேதுபதிக்கு சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அத்துடன், ரசிகர்களுக்கு செல்ஃபி புகைப்படங்களை எடுத்துக் கொடுத்தார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலத்தில் உள்ள ஸ்ரீ வரலட்சுமி மஹாலில் நடைபெற்ற பா.ம.க.வின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ.வின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக வருகை தந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர்.ராமதாஸை பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் அருள், சதாசிவம் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Sorry, no posts matched your criteria.