India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (நவ.01) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

கோயம்புத்தூர் ராஜஸ்தானின் மதார் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம் தொடங்குகிறது. ரயில் எண் 06181 கோயம்புத்தூரில் இருந்து வியாழக்கிழமைகளில் புறப்பட்டு, சேலத்தில் காலை 5.10 மணிக்கு வந்து 5.15 மணிக்கு புறப்படும்.
திரும்பும் ரயில் 06182 மதாரில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்பட்டு, சேலத்தில் புதன்கிழமை காலை 3.50 மணிக்கு வந்து 3.53 மணிக்கு புறப்படும்.
பயணிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

1. 12வது முடித்தவர்களுக்கு கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலை – https://nabfins.org/ 2. இந்தியன் ரயில்வேயில் 2569 வேலை- https://www.rrbapply.gov.in/ 3.10வது போதும் தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி செயலாளர் வேலை – https://www.tnrd.tn.gov.in/ 4.மத்திய அரசு பெல் நிறுவனத்தில் வேலை – https://bel-india.in/ 5. ONGC நிறுவனத்தில் 2623 அப்ரண்டிஸ் வேலை – https://ongcapprentices.ongc.co.in/. (ஷேர் பண்ணுங்க)

சங்ககிரி அருகே தேவண்ணகவுண்டனூர் கிராமம் சுண்டகாயன்காடு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி மல்லிகா (52), நேற்று மாலையில் வீட்டிற்கு திரும்பிய போது, வீடு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் உள்ள 16 பவுன் நகை மற்றும் ரூ.50,000 திருடப்பட்டு போனது தெரியவந்தது. சம்பவம் தொடர்பில் சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)

சேலம் மக்களே, ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வீட்டிற்கு வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்களில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

வாழப்பாடி அருகே பொன்னாரம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி புஷ்பாவின் 80 அடி ஆழ கிணற்றில் நேற்று மதியம் ஆண் பிணம் மிதந்தது. மேலும் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் கிணற்றில் வந்து பிணத்தை மீட்டனர். வயது 30–35, நீல டீ-ஷர்ட் மற்றும் சிமெண்டு நிற அரை பேண்ட் அணிந்தவராகத் தெரிய வந்தார். முகம் சிதைந்து அழுகிய நிலையில் இருந்தது. உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுப்பி விசாரணை நடத்தினர்.

சேலம், நெய்க்காரப்பட்டியை சேர்ந்த இந்துமதி. அரியானூர் பகுதியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் வீட்டில் தூக்கில் சடலமாக தொங்குவதாக கொண்டலாம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இந்துமதியின் சடலத்தை கைப்பற்றி அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் குற்ற செயல்களை தடுத்திடவும், இடர்பாடுகளில் சிக்கும் பொதுமக்களைக் காத்திடவும், காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (அக். 31) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.