Salem

News August 20, 2025

மகளிர் உரிமைத்தொகை கேட்டு 67,904 பெண்கள் விண்ணப்பம்

image

சேலம் மாவட்டத்தில் இதுவரை 120 ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்களில், ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 26 ஆயிரம் பேர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்துள்ளனர்.இந்த மனுக்களில், 67,904 பெண்கள் மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு உரிமைத்தொகை கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.

News August 20, 2025

சேலத்தில் நாளை முதல் இலவசம்!

image

சேலம் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள எழுத்தர், உதவியாளர் என மொத்தம் 148 காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு https://www.drbsim.in வழியாக விண்ரப்பிக்கலாம்.கடைசி தேதி ஆக-29 ஆகும்.மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக 21-ல் எழுத்துத்தேர்விற்கு இலவசப் பயிற்சி வகுப்பு தொடங்கவுள்ளது.விவரங்களுக்கு 0427-2401750 அழைக்கலாம்.SHARE பண்ணுங்க

News August 20, 2025

சேலம் வழியாக செல்லும் ரயிலில் வெயிட்டிங் லிஸ்ட் இல்லை!

image

தீபாவளிக்கு ஒருநாள் முன்னதாக பயணிக்கப்பதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று (ஆக.19) காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில் சில நிமிடங்களிலேயே முன்பதிவு முடிந்தது. குறிப்பாக, பெங்களூருவில் இருந்து சேலம் வழியே நாகர்கோவிலுக்கு செல்லும் பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் புக்கிங் தொடங்கிய 3 நிமிடத்தில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பின. அந்த ரயிலில் வெயிட்டிங் லிஸ்ட்டே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News August 20, 2025

சேலம்: 22ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்!

image

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் வரும் 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 10:30 மணிக்கு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது குறைகளையும், தேவைகளையும் எடுத்துரைக்கலாம் என்று கூறியுள்ளார்.

News August 20, 2025

சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 19) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை, மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.

News August 19, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஆகஸ்ட்.19) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

News August 19, 2025

அயோத்தியாப்பட்டணம் நூல் மில்லில் திடீர் தீ விபத்து

image

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள நூல் தொழிற்சாலையில் இன்று (ஆக.19) மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான நூல் மூட்டைகள், இயந்திரங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News August 19, 2025

சேலத்தில் தோல் வியாதியை குணமாக்கும் கோயில்!

image

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கஞ்சமலை சித்தேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வளாகத்துக்குள் காந்த தீர்த்தக்குளம் உள்ளது. தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோவிலுக்கு வந்து, உப்பு, மிளகு, வெல்லம் ஆகியவற்றை தலையை சுற்றியும், பாதிக்கப்பட்ட தோல் பகுதியையும் சுற்றி, இந்த காந்த குளத்தில் போட்டால், தோல் வியாதி குணமாகும் என்பது ஐதீகம். தோல் வியாதிகளால் அவதிப்படுவோருக்கு SHARE பண்ணுங்க!

News August 19, 2025

சேலம்: டிகிரி போதும்.. ரூ.64,000 சம்பளத்தில் வேலை!

image

பட்டப்படிப்பு முடித்தவரா நீங்கள்..? உங்களுக்காக ரெப்கோ வங்கியில் (Repco Bank) 30 வாடிக்கையாளர்கள் சேவை அதிகாரி பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கான தேர்வு சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நடைபெறும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 08.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News August 19, 2025

BREAKING: சேலத்தில் ரேபிஸ் நோய் தாக்கி ஒருவர் பலி!

image

சேலம், கொங்கணாபுரம் அருகே இலவம்பாளையத்தை சேர்ந்த தறி தொழிலாளி குப்புசாமி (43) ரேபிஸ் நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன் வளர்ப்பு நாய் கடித்த நிலையில் சிகிச்சை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. 3 நாளாக ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். சேலம் மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை இருந்தால் 8300062992 புகார் அளிக்கலாம்.

error: Content is protected !!